Advertisment

கர்ப்பத்தை கலைக்கும் சதி நடந்தா? தங்கையை காப்பாற்றினாரா சண்முகம்? ஜீ தமிழில் சீரியலில் இன்று

ஜீ தமிழன் அண்ணா மாரி மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Annam Maari And Karthigai Deepam

அண்ணா - மாரி - கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையான சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், மாரி, அண்ணா சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

தீபாவுக்கு சித்து விளையாட்டு காட்டும் முருகன்.. இனியனுக்காக எடுக்கும் அதிரடி முடிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தன்னுடைய நண்பர் இளையராஜாவை சந்தித்த நிலையில் இன்றைய எபிசோட்டில், கார்த்திக் இளையராஜா வேலை செய்த கேசட் கம்பெனியை விலைக்கு வாங்கி அபிராமி ஆடியோ கம்பெனி என பெயர் மாற்றி அதில் தன்னுடைய நண்பனை முக்கிய பொறுப்பில் உட்கார வைக்கிறான். அடுத்து கார்த்திக் அங்கிருந்து கிளம்புகிறான்.

தீபாவுக்கு போன் செய்து இனியன் குறித்து விசாரிக்க அவனுக்கு ஒரு பிரச்னையும் இல்ல நான் வீட்டிற்கு கிளம்பி வரேன் என்று சொல்ல கார்த்திக் ரெண்டு நாள் இருந்திட்டு வாங்க என்று சொல்ல ஒரு பிரச்னையும் இல்ல நான் வரேன் என்று சொல்லி போனை வைக்கிறாள்.  வீட்டிற்கு வந்த தீபாவிடம் மீனாட்சி இனியன் உடல்நிலை குறித்து விசாரிக்க அங்கு வரும் ஐஸ்வர்யா உடல்நிலை குறித்து விசாரித்து பணத்துக்கு என்ன பண்ண போறேன்னு பார்க்கலாம் என்று நக்கலாக பேசுகிறார்.

இதை கேட்ட தீபா அவளுக்கு பதிலடி கொடுக்கிறாள். இதையெல்லாம் அபிராமி மேலே இருந்து பார்க்கிறாள். அதனை தொடர்ந்து தீபா வெளியே இருக்கும் முருகன் சிலை முன்பு சென்று எனக்கு ஒரு வேலை வாங்கி கொடு என்று பிராத்தனை செய்ய அப்போது நியூஸ் பேப்பர் வீட்டிற்கு வர அது பறந்து வந்து தீபா மேலே விழ அதில் அபிராமி ஆடியோ கம்பெனியில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்திருக்கும் செய்தியை படித்து முருகனுக்கு நன்றி சொல்கிறாள்.

பிறகு கார்த்திக் தீபா ரூமில் இருக்கும் நேரத்தில் கார்த்திக் வீட்டில் இருப்பவர்களிடம் புதியதாக கம்பெனி வாங்கி இருக்கும் விஷயத்தை சொல்ல எல்லாரும் அவனை பாராட்டுகின்றனர். ரூமுக்கு வந்ததும் தீபாவிடமும் விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய அவள் சோகமாக இருப்பதால் நாளைக்கு சொல்லிக்கலாம் என்று சொல்லாமல் அமைதியாகி விடுகிறான்.

அதன்பிறகு இனியன் குறித்து மீண்டும் கேட்டும் தீபா உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாரி:

மாரியிடம் சவால் விட்டு மண்ணை கவ்விய தாரா, பூஜையில் நடந்தது என்ன

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் நேற்று மாரியை வீட்டிற்கு அழைத்து தாரா டீம் நகை இல்லாமல் இருப்பதை வைத்து அவமானப்படுத்த முயற்சி செய்த நிலையில் இன்று, மாரி நீங்க போட்டிருக்க மொத்த நகைகளை காட்டிலும் அம்மன் கழுத்தில் இருக்கும் தாலி தான் பெருசு என்று சொல்ல என்ன லூசு மாதிரி உளறிட்டு இருக்க உன்னுடைய சவாலுக்கு நான் ரெடி என்று தாரா சொல்கிறார்.

மாரி ஒரு தராசை வைத்து ஒரு பக்கம் மாரி அம்மனின் தாலியை எடுத்து வைக்கிறாள். அதனை தொடர்ந்து ஜாஸ்மின், ஸ்ரீஜா, தாரா என எல்லாரும் நகைகளை கழட்டி வைக்க தாலி பக்கமே அதிக எடையை காட்ட எல்லாரும் மாரியிடம் தோற்று போகின்றனர், இதனை தொடர்ந்து தாரா பூஜையை தொடங்கலாம் என்று சொல்லி மாரியை பூஜை செய்ய சொல்கிறாள். ஸ்ரீஜா அவ எதுக்கு பூஜை பண்ணனும்? நானே பூஜை பண்றேன் என்று சொல்ல தாரா அங்கு இரிடியம் கல் இருக்கு, அதோடு ரேடியேஷன் மாரி மேல பட்டு அவ கர்ப்பம் களைய போகும் என திட்டத்தை சொல்கிறாள்.

இதை தொடர்ந்து மாரியும் பூஜையை தொடங்க இரிடியம் கல் ரேடியம் அவள் வயிறில் பட தொடங்குகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

வீழ்த்தப்பட்ட முத்துப்பாண்டி.. காணாமல் போன ரத்னா, சண்முகம் எடுத்த அதிரடி முடிவு 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.இந்த சீரியலில் நேற்று ரத்னா முத்துபாண்டியிடம் சண்முகத்துடன் மோதி ஜெயித்தால் என்னை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய நிலையில் இன்று சண்முகம் சிவனாகவும் முத்துப்பாண்டி அசுரனாகவும் மோதி கொள்ள இருவருக்கும் இடையே கடுமையாக மோதல் நடக்கிறது.

இறுதியாக முத்துபாண்டியை ருத்ரதாண்டவம் ஆடி அதர்மத்தை அழிக்கிறான் சிவனாக கெட்டப் போட்ட சண்முகம். இதனை தொடர்ந்து இனிமே ரத்னா பக்கம் திரும்பி கூட பார்க்க கூடாது என முத்துபாண்டிக்கு வார்னிங் கொடுக்க அவனுக்கும் வன்மம் இன்னும் கொழுந்திட்டு எரிய தொடங்குகிறது, சௌந்தரபாண்டி முத்துபாண்டியின் தோல்வியை அவமானமாக பார்க்கிறார்.

அடுத்து வீட்டிற்கு வந்த சண்முகம் இசக்கி, வீரா ஆகியோர் சாப்பிட உட்கார்ந்திருக்க தங்கைகள் இந்த சண்டை குறித்து பேசி அந்த முத்துபாண்டிக்கு இதெல்லாம் தேவை தான் என பேசி கொள்கின்றனர், திடீரென ரத்னா இல்லாததை அறியும் சண்முகம் உட்பட எல்லாரும் அதிர்ச்சி அடைந்து அவளை தேட தொடங்குகின்றனர். கடைசியாக ரத்னா தெருமுனையில் உட்கார்ந்து வெங்கடேஷ் மற்றும் அண்ணனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க சண்முகம் என்னாச்சு என்று கேட்கிறார்.

அந்த முத்துப்பாண்டி உங்களை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டான் என்று சொல்ல அவன் எத்தனை முறை வந்தாலும் என் தங்கச்சிக்காக அவனிடம் சண்டை போடுவேன் என்று சொல்கிறான். மேலும் ரத்னாவுக்கும் வெங்கடேஷ்க்கும் கல்யாணம் செய்து வைப்பது தான் இதற்கு ஒரே தீர்வு எனவும் முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக  நடிக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment