Advertisment

வேலைக்கு செல்லும் தீபா... கொலை முயற்சியில் முத்துப்பாண்டி... ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் மாரி ஆகிய சீரியல்களில் இன்று நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Tamil Serial Zee tamil

ஜீ தமிழ் சீரியல்கள்

அண்ணா

Advertisment

சௌந்தரபாண்டி கொடுத்த ஷாக்.. பரணிக்கு தெரிய வரும் உண்மைகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷை கொல்ல சௌந்தரபாண்டி முத்துபாண்டியை அழைத்து கொண்டு சென்ற நிலையில் இன்று ண்முகம் ரத்னாவை வீட்டிற்கு அழைத்து வந்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட இசக்கிக்கு அம்மா ஞாபகம் வந்து அம்மா இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்கிறாள்.

உடனே வைகுண்டத்திற்கு தனது மனைவி சூடாமணி உயிரோடு இருப்பதாக சொன்ன விஷயம் நினைவிற்கு வருகிறது, ண்முகம் ஒரு அம்மாவாக தாலாட்டு பாடி தங்கைகளை தூங்க வைக்கிறான். மறுபக்கம் சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டி இருவரும் வெங்கடேஷ் வீட்டிற்கு வருகின்றனர், அதே நேரம் வெங்கடேஷ் இல்லாமல் இருக்க அவனது அப்பாவிடம் சௌந்தரபாண்டி துப்பாக்கியை கொடுத்து என் பையனை கொன்னுடு என்று சொல்கிறார்.

அவர் பயந்து போய் துப்பாக்கியை கீழே போட ஒன்னு என் பையனை கொன்னுட்டு ரத்னாவை உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வை, இல்லனா நான் உன் பையனை கொன்னுட்டு என் பையனுக்கு அவளை கட்டி வைப்பேன் என்று சொல்ல இவர்கள் ரெண்டுமே முடியாது என்று சொல்கின்றனர். இறுதியாக சௌந்தரபாண்டி நீங்க இந்த ஊர்ல இருக்க கூடாது என மிரட்டி விட்டு போக வெங்கடேஷ் வீட்டிற்கு வந்ததும் அவனது அம்மா நமக்கு இது எதுவும் வேண்டாம், ஊரை விட்டு போய்டலாம் என்று சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் வெங்கடேஷும் சம்மதம் சொல்லி விடுகிறான். மறுநாள் சண்முகம் போலீஸ் மூலமாக கார்த்தியின் நம்பரை வாங்கி அவனுக்கு போன் செய்ய சண்முகம் உதவிய நர்ஸ் போன் எடுத்து உங்களால் நாங்க இப்போ சந்தோசமாக இருக்கோம் என்று நன்றி சொல்ல சண்முகம் இங்கே நடந்த பிரச்சனைகளை சொல்கிறான். உடனே அந்த நர்ஸ் நானும் கார்த்தியும் வந்து பரணியிடம் மொத்த உண்மைகளை சொல்கிறோம் என்று சொல்லி போனை வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கார்த்திகை தீபம்

தீபா விஷயத்தில் கார்த்திக் எடுத்த முடிவு

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கின் கம்பெனிக்கு வேலை தேடி வந்து கேட்ட கேள்விகளுக்கு அசால்ட்டாக பதிலளித்த நிலையில் இன்று, கார்த்திக் நேர்காணலில் பங்கேற்றவர்களில் தீபா திறமைசாலியாக இருப்பதால் அவளையே வேலைக்கு எடுக்கலாம் என முடிவு செய்கிறான். அதே சமயம் வெளியில் காத்திருக்கும் தீபா நமக்கு இந்த வேலை கிடைக்காது என முடிவு செய்து எழுந்து கிளம்பி விடுகிறாள்.

இங்கே கார்த்தி சினேகாவை அழைத்து அந்த பெண்ணையே வேலைக்கு எடுத்து விடலாம் வர சொல்லுங்க என்று சொல்ல இவள் தான் அழைத்து வந்த பெண் என நினைத்து சந்தோசப்பட கடைசியில் கார்த்திக் சொன்னது தீபாவை தான் என தெரிந்து ஷாக் ஆகிறாள்.  வேறு வழியில்லாமல் தீபாவை உள்ளே அழைத்து செல்ல கார்த்திக் நீங்க இங்கேயே வேலை செய்யலாம், நீங்க எதிர்பார்க்குற சம்பளத்தை நாங்க தரும் என்று சொல்ல தீபாவும் அதை ஏற்று கொள்கிறாள்.

பிறகு இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது தீபா இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல கார்த்திக் வீட்டில் இதை பற்றி பேசி கொள்ள வேண்டாம்.  அதே போல் ஆபிசில் நாம கணவன் மனைவி என்பதை காட்டி கொள்ளவும் வேண்டாம் என்று கார்த்திக் பதில் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாரி

தேவி பெயரில் சரக்கு பிசினஸ்.. தாராவுக்கு மாரி வைத்த செக்மேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்று தாரா திட்டம் அத்தனையும் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இன்று, தாரா வீட்டிற்கு பாரினில் இருந்து பிசினஸ் மேன் சிலர் வீட்டிற்கு வந்து இங்கு புதிதாக சரக்கு பிசினஸ் தொடங்க போவதாகவும் அதற்காக தேவி குரூப் ஆப் கம்பெனி என்ற பெயரை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறோம், இதற்கு பல கோடி ரூபாய் கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

அரவிந்தும் தாராவும் பணத்திற்காக ஆசைப்பட்டு இந்த டீலுக்கு சம்மதம் தெரிவித்து விடுகின்றனர், அதே சமயம் மாரி மற்றும் சூர்யாவுக்கு இங்கே டீல் பேசும் விஷயம் தெரிய வந்து இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கிளம்பி வருகின்றனர். இங்கே இவர்கள் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போடும் சமயத்தில் மாரியும் சூரியாவும் வந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.

தாரா இது எதுவும் எனக்கு தெரியாது, எல்லாமே அரவிந்த் ஏற்பாடு தான் என எஸ்கேப் ஆக முயற்சி செய்ய மாரி பாரின் பிசினஸ் மேன்களிடம் இந்த டீல் நடந்தால் தொழிலார்களை கூட்டி போராட்டம் செய்வோம் என்று எச்சரிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment