Advertisment

கண்ணாம்மூச்சி ஆடும் கணவன் மனைவி... துப்பாக்கி எடுத்த ஹீரோ : என்னதான் உங்க கதை?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil Serial

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி அறிமுகப்படுத்தி வரும் ஜீ தமிழில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

கார்த்திக்கு உதவ மறுக்கும் தீபா.. ஐஸ்வர்யா தீட்டும் சதி திட்டம்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் இசையமைப்பாளர் சிதம்பரத்துக்கு சவால் விட்ட நிலையில் இன்று, சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்திக்க அப்போது உங்களுக்கும் கார்த்திக்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை இன்னும் 1 மாதத்தில் ஒரு ஆல்பம் பாடலை வெளிப்பட போவதாக சொல்லியிருக்கிறார் என்று சொல்கிறார்.

ஐஸ்வர்யா இந்த வீடியோக்களை வீட்டில் உள்ள எல்லாரிடமும் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அபிராமி என்னாச்சு என்று விசாரிக்க நடந்த விஷயங்களை சொல்லி பார்த்துக்கலாம் என்று சொல்கிறான். பிறகு தீபா எப்படி சார்? என்ன பண்ண போறீங்க என்று கேட்க பல்லவியை தான் பாடா வைக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாக சொல்ல, அவங்க வருவார்களா என்று கேட்கிறாள்.

அதற்கு அவங்க வார்த்தையில் நியாயம் இருக்கும். அதை நானே பார்த்திருக்கிறேன். அவங்க எனக்கு வாக்கு கொடுத்திருக்காங்க அதனால் கண்டிப்பா வருவாங்க என்று சொல்கிறான். பிறகு மீனாட்சி தீபாவிடம் நீ தான் அந்த பல்லவினு உண்மையை சொல்லிடு, இது தான் அதற்கு சரியான சந்தர்ப்பம். அபிராமி, கார்த்தின்னு எல்லாருமே உன்னை ஏத்துப்பாங்க என்று சொல்ல தீபா அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறாள். இன்னொரு புறம் இந்த விஷயத்தை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என யோசிக்கும் ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்திக்கிறாள்.

அவரிடம் கார்த்திக்கை லேசில் எடை போடாதீங்க, அவன் கிட்ட பல்லவினு ஒரு பாடகி இருக்கா. அவ பாடினா நீங்க தோத்து தான் போவீங்க என்று சொல்லி அவள் பாடிய பாட்டை போட்டு காட்ட சிதம்பரம் ஷாக் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

சண்முகத்தை காப்பாற்றி வார்னிங் கொடுத்த பரணி.. நடந்தது என்ன?

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த பரணி இது போலீஸ் கேஸ், ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கணும். அதுவும் இல்லாமல் என்கிட்ட பேஸிக் திங்ஸ் தான் இருக்கு என்று சொல்லிய நிலையில் இன்று சௌந்தரபாண்டி இதை சொல்லவா நான் உன்னை டாக்டருக்கு படிக்க வச்சேன் என சத்தம் போட முத்துப்பாண்டி அதெல்லாம் தகவல் கொடுக்க முடியாது, என்னுடைய வேலை போய்டும் நீ ட்ரீட்மெண்ட் கொடு என அதிகாரமாக பேசுகிறான்.

இதை கேட்ட பரணி அப்படியென்றால் என்னால் கொடுக்க முடியாது என பதிலடி கொடுக்கிறாள். முத்துப்பாண்டி வேறு வழியில்லாமல் நீ எனக்காக கொடுக்க வேண்டாம். அவர் உயிரை காப்பாற்ற ட்ரீட்மெண்ட் கொடு என சொல்ல சனியனும் என்னை காப்பாற்றுங்க என்று கதற பரணி அவருக்காக செய்கிறேன் என ட்ரீட்மெண்ட் கொடுக்கிறாள். மறுபக்கம் சண்முகம் வீட்டில் துப்பாக்கி எடுத்துட்டு போய் சண்டை போட்ட விஷயத்தை பெருமையாக சொல்லி கொண்டிருக்கிறான்

இதை கேட்டு வைகுண்டம் குண்டானை சுட்டதெல்லாம் ஒரு கதையாக சொல்லிட்டு இருக்க அந்த முத்துப்பாண்டினாலும் சனியனை சுட்டு இருக்கான், அந்த மாதிரி நீ சௌந்தரபாண்டியை சுட வேண்டியது தானே என திட்டிகிட்டு இருக்கிறார். அப்போது வரும் பரணி துப்பாக்கியை எடுத்துட்டு போய் இருக்க, உனக்கு எதாவது ஆகி இருந்தா உன் 4 தங்கச்சிங்களோட நிலைமை என்ன என திட்டுகிறாள். அடுத்ததாக ரூமுக்குள் சண்முகம் வந்ததும் பரணி உன்னை காப்பாற்றி இருக்கேன், என்று சொல்கிறாள்.

இதை கேட்ட சண்முகம் நீ என்ன என்னை காப்பாற்றின என சண்முகம் கேட்க சனியனுக்கு நான் ட்ரீட்மெண்ட் கொடுக்காமல் வெளியே போய் இருந்தால் இந்த கேசில் நீயும் சேர்ந்து தான் மாட்டி இருப்ப என சொல்கிறாள். பிறகு எது இருந்தாலும் இன்னும் 60 நாள் தான் இந்த வீட்டில் இருப்பேன் எனவும் சொல்லி ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

விடுதலையான புஷ்பா.. ரங்கநாயகி செய்த சதி வேலை

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நேற்றைய எபிசோடில் புஷ்பாவுக்காக ரங்கநாயகி சாட்சி சொல்ல வர சக்தி அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று  புஷ்பாவும் நீதிமணியும் கொலை முயற்சி நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில் தன்னுடன் இருந்ததாக ரங்கநாயகி சொல்ல, கோர்ட் அதை ஏற்றுக்கொள்கிறது. புஷ்பா மேல் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கோர்ட் புஷ்பாவை விடுதலை செய்கிறது.

இதுக்குத்தான் இந்த கேஸெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் என்று சொல்லும் மீனாட்சி, சக்தியிடம், உன்னால ரங்கநாயகி அம்மாவே மாறிட்டாங்க என்கிறாள். புஷ்பா சக்தியிடம், நான் தாண்டி உங்க அம்மாவை கொல்லப் பாத்தேன், உன்னால என்ன பண்ண முடிஞ்சது, உன்னை இன்னும் என்னல்லாம் பண்றேன் பாரு என்று சொல்கிறாள். பின்னர் வரும் நீதிமணி, நானும் புஷ்பாவும் தப்பே செய்யலை, எங்களை ஜெயில்ல வெச்சிட்டேல்ல உனக்கு இருக்கு என்று மிரட்டுகிறான்.

காரில் ஏறப் போகும் ரங்கநாயகி சக்தியைப் பார்த்து புன்னகைக்கிறாள். ரங்கநாயகி தான் அப்ரூவரை தப்பிக்க வைத்திருக்கிறாள் என்பது பார்வையாளர்களுக்கு தெரிய வருகிறது. அப்ரூவர் வரும் வழியில் ஒருவன் வலிப்பு வந்தது போல் நடித்து போலீஸை திசை திருப்பி அப்ரூவரை தப்ப வைத்திருக்கிறான். சக்தியை பழிவாங்க இது ரங்கநாயகி போட்ட திட்டம் என தெரிய வருகிறது.

அதை தொடர்ந்து சக்தி ரங்கநாயகியைக் கேள்வி கேட்கப் போக, மீனாட்சி சக்தியைத் தடுத்து நிறுத்தி, எதுவும் பேசக் கூடாது, வீட்டுக்குப் போகலாம் என்று அவளை ஜீப்பில் ஏறச் சொல்கிறாள். பிறகு சண்முகமும் சக்தியுடன் ஏறப் போக, புஷ்பா அவனை இழுத்துக்கொண்டு வந்து, இனிமே சக்தியும் இருக்க மாட்டா, அந்த வீடும் இருக்காது என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment