Advertisment

வீட்டுக்குள் நடக்கும் சதி... கண்டுபிடிக்க தெரியாத ஹீரோ : எல்லா சீரியலும் இப்படித்தானா?

ஜீ தமிழில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா,மீனாட்சி பொண்ணுங்க, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
zee tamil Serial Update

அண்ணா - மீனாட்சி பொண்ணுங்க - கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வரும் ஜீ தமிழில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா,மீனாட்சி பொண்ணுங்க, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

கார்த்தியை திசை திருப்பிய சிதம்பரம்.. தோல்வியில் முடிந்த தீபாவின் பிளான்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சர்வீஸ் விட்டிருந்த காரை எடுக்க சென்றிருந்த நிலையில் இன்று, யாரோ ஒருவர் அருணாசலத்தின் போனை திருடிக்கொண்டு ஓட அருணாச்சலம், அவருடன் இருந்த மூன்று பேரும் துரத்தி செல்கின்றனர். ஒரு இடத்தில போய் ஒளியும் அந்த நபர் கார்த்திக்கு போன் செய்து இங்க ஒரு பெரியவர் மயக்கம் போட்டு விழுந்து கிடக்குறார், அவருடைய போனில் உங்க நம்பர் இருந்ததாக சொல்லி பேச, கார்த்திக் அப்பாவுக்கு ஆபத்து என நினைத்து கிளம்பி செல்கிறான்.

வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்க அபிராமி கார்த்திக் குறித்து விசாரிக்க, ஐஸ்வர்யா வேலை விஷயமாக போய் இருப்பாரு என்று சமாளிக்க முயற்சிக்க அருண் கார்த்திக்கு போன் செய்கிறார். முதலில் பிசி என வருகிறது. திரும்பவும் கார்த்திக்கு போன் போட லைன் கிடைக்கிறது. எங்கே இருக்க என்று விசாரிக்க கார்த்திக் விஷயத்தை சொல்லாமல் முக்கியமான வேலையாக வெளியில் இருக்கிறேன் என்று சொல்கிறான்.

மேலும் பூஜையை தொடங்குங்க நான் வந்து ஜாயின் செய்து கொள்கிறேன் என்று போனை வைத்து விட்டு பதற்றமாக செல்கிறான். அடுத்து வீட்டில் பூஜை தொடங்க தீபா இவ பாடுவதை ரெக்கார்ட் செய்து கார்திக்க்கிடம் கொடுக்கலாம் என்று யோசித்து மீனாட்சியிடம் சொல்ல அவள் நான் போய் போனை எடுத்து வரேன் என்று கிளம்ப அபிராமி எங்க போறீங்க? பூஜை முடியும் வரை எங்கயும் போக கூடாது என தடுத்து நிறுத்தி விடுகிறாள்.

மறுபக்கம் போனை திருடி சென்றவன் அதை திரும்பவும் அருணாச்சலம் அருகே வீசி விட்டு செல்ல அவர் கார்த்திக்கு போன் செய்து எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நான் பாதுகாப்பாக தான் இருக்கேன் என சொல்ல கார்த்திக் குழப்பம் அடைகிறான். இந்த நேரம் பார்த்து சிதம்பரம் போன் செய்து அருணாச்சலம் பற்றி விசாரிக்க இவை அனைத்தும் இவருடைய வேலை தான் என்பது தெரிய வருகிறது.

பிறகு கார்த்திக் வீட்டிற்குள் நுழைய பல்லவி பாடி முடிக்க அபிராமி பாட்டு நல்லா இருந்ததாக பாராட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சௌந்தரபாண்டி கைக்கு சென்ற வீட்டு பத்திரம்.. பரணி கொடுத்த வார்னிங்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் மாடசாமி பணத்தை கொடுக்க வீட்டிற்கு வந்த நிலையில் இன்று, வீட்டிற்கு வரும் மாடசாமி பரணியிடம் பணத்தை கொடுக்க யார் சொல்லி பணத்தை தரீங்க என்று கேட்க ஒருவர் சொல்லி தான் பணம் தருவதாக சொல்ல சண்முகம் ஷாக் ஆகிறான். ஆனால் அந்த நபர் யார் என்று சொல்லாமல் மாடசாமி மழுப்பி விட சண்முகம் நிம்மதி அடைகிறான்.

அதனை தொடர்ந்து மாடசாமி சண்முகத்தின் வீட்டிற்கு பத்திரத்தை கொண்டு சௌந்தரபாண்டியிடம் கொடுக்க அதை வாங்கி கொள்ளும் அவர் இந்த பத்திரத்தை வச்சி அவனை ஒன்னும் இல்லாதவனாக ஆக்குறேன் என்று பிளான் போடுகிறார். பிறகு வீட்டில் நாளைக்கு ஹாஸ்பிடல் திறப்பு விழா என்பதால் பரணி எல்லாருக்கும் புது டிரஸ் எடுத்து வந்து கொடுக்க தங்கைகள் அண்ணனுக்கு இல்லையா என்று கேட்க அவனுக்கு எதுக்கு நான் எடுத்து கொடுக்கணும் என ஷாக் கொடுக்கிறாள்.

எல்லாரும் புது டிரஸ் போடும் போது அண்ணனுக்கு மட்டும் இல்லனா எப்படி என்று கேட்க பரணி அவனுக்கு எடுத்த டிரஸ்ஸை கொடுக்க சண்முகம் சந்தோஷமடைகிறான். பதிலுக்கு அவன் பரணிக்காக எடுத்து வந்த புடவையை கொடுத்து நாளைக்கு நீ இதை தான் கட்டிக்கணும் என்று சொல்ல பரணி அதெல்லாம் முடியாது என மறுத்து விடுகிறாள். பிறகு தங்கைகளிடம் நாளைக்கு பரணி நான் எடுத்து கொடுத்த புடவையை தான் கட்டிக்கணும், அதுக்கு நீங்க தான் பொறுப்பு என்று சொல்ல இசக்கி அதை நாங்க பார்த்துக்கறோம் என்று சொல்கிறாள்.

இதனை தொடர்ந்து ரூமுக்குள் வெங்காயத்துடன் வரும் சண்முகம், இதை நைட்டெல்லாம் அக்களில் வச்சிட்டு தூங்கினா காய்ச்சல் வந்துடும். உன்னுடைய ஹாஸ்பிடலுக்கு முதல் ஆளாக நான் தான் வருவேன். நீ எனக்கு சிகிச்சை கொடுத்து வேலையை ஆரம்பித்தால் ரொம்ப நல்லா போகும் என சொல்கிறான். உடனே பரணி அந்த பக்கம் வந்த விஷ ஊசி போட்டு கொன்னுடுவேன் என்று மிரட்டுகிறான்.

ஆனாலும் ஷண்முகம் நான் வருவேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

ஃபங்ஷனில் காத்திருக்கும் ட்விஸ்ட்... வெற்றி, ஷக்தி செய்த வேலைகள்

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நேற்று புடவை எடுக்க போயிருந்த இடத்தில் சக்தி வந்து நின்று ரங்கநாயகிக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று, பூஜா, சக்தி சொன்ன புடவையே இருக்கட்டும் என்று முடிவெடுக்கிறாள். அந்த புடவையை பூஜா மேல் வைத்துப் பார்க்க ரங்கநாயகி முயலும்போது, சக்தி வந்து நிற்க, சக்தி மேல் ரங்கநாயகி வைத்துப் பார்க்கிறாள். இதை பார்த்து ரங்கநாயகி அதிர்ச்சியாக, இதே போல் இந்த புடவையை நீங்களே எனக்கு சுமங்கலி பூஜை அன்னைக்கு வெச்சி கொடுப்பீங்க என்று ரங்கநாயகியிடம் சக்தி சவால் செய்கிறாள்.

வீட்டுக்கு வரும் கேட்டரிங்க் காரனிடம் ரங்கநாயகி ஒரு மெனு கொடுக்க, அதை வெற்றி மாற்றுகிறான். பத்திரிகையை யாரு யாருக்கு அனுப்பவேண்டும் என்று ஒரு லிஸ்ட்டுடன் ரங்கநாயகி ரோஹித்திடம் சொல்ல, பத்திரிகையையும் அட்ரஸ் லிஸ்ட்டையும் சக்தி மாற்றுகிறாள். பேனர் டிசைனை ரங்கநாயகி செலக்ட் செய்ய, அதை வெற்றியும் சக்தியும் மாற்றுகிறார்கள். ஃபங்க்‌ஷன் ஆரம்பிக்கிறது.

பவுன்ஸர்களை எல்லாம் வைத்து, சக்தி வரக் கூடாது என்று திட்டமிடும் பூஜா பவுன்ஸர்களிடம் ஒரு கவரில் போட்டோவை வைத்து, இதுல இருக்கிறவங்க யாரும் உள்ள வரக் கூடாது என்கிறாள். அந்த கவரில் இருக்கும் போட்டோவை வெற்றி மாற்றுகிறான். வெற்றிதான் முதலாளி என்பதால் வெற்றி சொல்வதை கேட்கிறார்கள் பவுன்ஸர்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment