Advertisment

அம்மாவிடம் இருந்து மனைவியை மறைக்கும் ஹீரோ... மாட்டிக்கொள்வாரா தீபா? ஜீ தமிழ் சீரியலின் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
zee taamil Serial Deepa Sakthi

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி அறிமுகப்படுத்தி வரும் நிலையில், இதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

கார்த்திக் ஆபிஸ்க்கு வந்த அபிராமி.. சினேகாவால் தீபாவுக்கு வந்த சிக்கல்

கார்த்திகை தீபம், சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபா கையில் இருக்கும் மருதாணியை பார்த்த நிலையில் இன்று, கார்த்திக் பல்லவி கையில் இதே மாதிரி மருதாணியை பார்த்தேன் என்று சொல்ல தீபா ஷாக் ஆகிறாள், அதே சமயம் கார்த்திக்கு தன் மீது சந்தேகம் வரவில்லை என்பதை நினைத்தும் சந்தோஷமும் அடைகிறாள். அடுத்து கார்த்திக் ஒரு மீட்டிங் இருக்கு என்று வெளியே கிளம்ப தீபா ஆபிஸ் கிளம்பி வருகிறாள்.

ஆபிஸ் எண்ட்ரன்ஸில் கையெழுத்து போட்டு விட்டு குடையை மறந்து வைத்து விட்டு தீபா மேலே செல்கிறாள். சினேகா அவளை பார்த்து சரியான நேரத்துக்கு தான் ஆபிஸ் வரணும்னு இல்ல, சீக்கிரமாகவே வரணும் என வார்னிங் கொடுக்கிறாள். மறுபக்கம் அபிராமி காரில் டிரைவருடன் சென்று கொண்டிருக்கு வேறு ஒரு ரூட்டில் கார் செல்வதை பார்த்து புது ரூட்டா இருக்கே என்று விசாரிக்கிறாள்.

ட்ரைவர் ரூட் மாற்றி விட்டிருக்காங்க என்று சொல்ல அபிராமி இந்த பக்கம் தானே கார்த்திக் புது கம்பெனி வாங்கிருக்கான், அங்க போகலாம் என்று சொல்லி ஆபிஸ்க்கு வருகிறாள். லிப்டில் மேலே செல்ல காத்திருக்க தீபா குடையை எடுக்க கீழே வருகிறாள். ஆனால் இருவரும் சந்தித்து கொள்ள முடியாமல் போகிறது.

அபிராமி மேலே வர சினேகா யாரு என்ன வேண்டும் என்று விசாரிக்க இளையராஜா அங்கு வந்து விடுகிறான், இது கார்த்தியின் அம்மா என்று சொல்ல அபிராமியிடம் நல்ல பேர் வாங்க பிளான் போடுகிறாள் சினேகா. உடனே தீபாவிடம் வந்து முக்கியமான கிளைன்ட் வந்திருக்காங்க. காபி எடுத்துட்டு வா என்று சொல்கிறாள்.

தீபாவும் காபி எடுத்து கொண்டு மேலே வர அங்கு அபிராமியை பார்த்து ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

சண்முகம் கடையில் பரணி.. சண்டைக்கு வந்த சௌந்தரபாண்டி, காரணம் என்ன?

அண்ணா,சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் தன்னுடைய அப்பாவிடம் பரணி பற்றி பெருமையாக பேசிய நிலையில் வைகுண்டம் பரணிக்கு நான் மாமனார் என்பதற்கு முன்னாடி அவளுடைய தாய்மாமன் என்று சொல்கிறார், பிறகு கனி அங்கு வந்து அண்ணியை எதுக்கு அண்ணா வெளியே போக சொல்கிற என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் கட்டி பிடித்து கண் கலங்குகிறான்.

அடுத்து நைட் எல்லாரும் தூங்கிய பிறகு குடுகுடுப்புக்காரன் வந்து இந்த வீட்டிற்கு புதிய உயிர் வர போகுது என்று சொல்ல தங்கைகள் அதை கேட்டு கன்பியூஸ் ஆக பரணி தூங்கி கொண்டிருக்கும் சண்முகத்தை எழுப்பி இதெல்லாம் உன் வேலை தானா என சண்டை போடுகிறாள். அதோடு வெளியே வந்து குடுகுடுப்புக்காரனை அடித்து விரட்டி விட தங்கைகள் சிரிக்கின்றனர். அதே சமயம் அவர் சொன்னதை யோசிக்கின்றனர்.

மறுநாள் சண்முகம் கடைக்கு கிளம்ப பரணி மாத்திரை வாங்கணும் என்று சொல்ல அவளையும் கூட்டி கொண்டு கிளம்பும் போது வழியில் ஒரு குழந்தை ஸ்கூலுக்கு நடந்து செல்ல அதை தூங்கி இருவருக்கும் நடுவில் உட்கார வைத்து அழைத்து செல்கின்றனர். சண்முகம் பொறுமையாக வண்டி ஓட்ட சைக்கிளில் இவர்களை கடந்து செல்லும் சிறுவன் பாய் சொல்லிட்டு போகிறான் அந்த குழந்தை நான் நடந்தே போறேன் என சொல்லி சண்முகம் வேகத்தை கலாய்க்க பரணி வேகமாக போக சொல்கிறாள்.

பிறகு பரணியை கடையில் இறக்கி விட்டுட்டு குழந்தையை ஸ்கூலில் விட செல்ல வெட்டுக்கிளி வெளியே போக பரணி கடைக்கு வருபவர்களை கவனிக்கிறான். அப்போது அந்த வழியாக வந்த சௌந்தரபாண்டி இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். டாக்டருக்கு படிச்சவளை பொட்டலம் போட விட்டு இருக்கான் என சண்டை போட வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

ரூம் எல்லாம் கால் தடம்.. பூஜாவுக்கு வந்த சந்தேகம், க்திக்காக வெற்றி எடுத்த முடிவு

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தியும் வெற்றியும் அறையில் இருக்கும்போது, ரங்கநாயகி அனைவருடனும் வந்து வெற்றிக்கு ஹேப்பி பர்த்டே சொல்ல, சக்தி ஒளிந்து கொள்கிறாள். பிறகு வெற்றி நனைந்திருக்க, ரங்கநாயகி ஏன் நனைஞ்சிருக்க என்று கேட்க, வெற்றி சமாளிக்கிறான். அறையெல்லாம் நீர் கால்தடம் இருக்க, பூஜா என்ன என்று பார்க்க வர, வெற்றி அதற்குள் அதை மாப் போட்டுத் துடைக்கிறான்.

சக்தி மீண்டும் வந்த வழியே போகப் பார்க்க, அங்கே கயிறு இல்லை. வெற்றி ஒரு ப்ளான் செய்து, ஒரு பெட்டில் சக்தியைப் படுக்க வைத்துச் சுற்றி, தூக்கிக் கொண்டு போக முயற்சி செய்ய, ரோஹித் உதவுகிறான். ஆனால் பூஜா வெற்றியை நிறுத்தி, பெட்டை திறந்து காண்பிக்கச் சொல்கிறாள். இதனால் ரங்கநாயகி அதிர்ச்சியாக,பெட்டில் யாரும் இல்லை! சக்தி மறைந்து இருக்கிறாள் என்று சொல்ல அனைவரும் பூஜாவை திட்டி அனுப்ப, அவள் போனதும் சக்தியை வெளியே அனுப்புகிறான் வெற்றி.

சக்தி பூஜாவைப் பார்த்து, நீ சந்தேகப்பட்டது சரிதான், நான்தான் வந்தேன், இன்னும் வருவேன், முடிஞ்சா நிரூபி என்று சொல்லிவிட்டுப் போகிறாள். இதனால் பூஜா டென்ஷனாகிறாள். மறுநாள் வெற்றிக்கும் சக்திக்கும் ஒரே நேரத்தில் காய்ச்சல் வர, ஷவரில் நனைந்ததால் தான் இப்படி என்று அனைவரும் கிண்டல் செய்ய, வெற்றியும் சக்தியும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள்.

அங்கே தற்செயலாக அடியாளை சக்தி பார்க்க, வெற்றி சக்தி இருவரும் அவனைப் பிடித்து, பைக்கில் கட்டி ரோடெல்லாம் இழுத்துக்கொண்டு வந்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார்கள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment