மருமகனை காப்பாற்றுவரா மாமியார்? மனைவியின் செயலால் அதிர்ச்சியான கணவன்; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும் நெஞ்சத்தை கிள்ளாதே, அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும் நெஞ்சத்தை கிள்ளாதே, அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial KP ANAN

நெஞ்சைத்தை கிள்ளாதே - அண்ணா - கார்த்திகை தீபம்

ஜெயிலுக்கு போக தயாரான சண்முகம்.. பரணி கொடுத்த அதிர்ச்சி

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் நடந்தது மட்டும் சொல்லு என்று சொல்லிய நிலையில் இன்று, வைகுண்டம் மற்றும் சண்முகத்தின் தங்கைகள் என எல்லோரும் சண்முகத்தை காப்பாத்த பாக்கியத்திடம் எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லு என்று கெஞ்சுகின்றனர். பரணி சண்முகம் இனிமே அருவாளை தூக்க மாட்டேனு சொல்ல சொல்லு.. நான் அம்மா கிட்ட பேசுறேன் என்று சொல்ல சண்முகம் பதில் பேசாமல் இருக்கிறான்.

Advertisment

மறுபக்கம் சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்த லாயர் பாக்கியத்திடம் நடந்த விஷயங்களை மட்டும் சொல்லுங்க என்று சொன்னதும் சௌந்தரபாண்டி நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், நடந்தது மட்டும் சொல்லு என்று சொல்கிறார். மறுபக்கம் சண்முகம் அமைதியாக இருப்பதை பார்த்து பரணி நான் பேச மாட்டேன் என்று சொல்ல வைகுண்டம் மற்றும் தங்கைகள் சண்முகத்திடம் அருவா எடுக்க மாட்டேன்னு சொல்லுடா என்று சொல்ல என் தங்கச்சிங்களுக்கு ஒன்னுனா நான் அறிவாள் எடுப்பேன். அந்த சௌந்தரபாண்டியை கொன்னுட்டு ஜெயிலுக்கு போனா கூட கவலை இல்லை என சொல்கிறாள்.

இதனால் பரணி நான் பேச மாட்டேன் என்று பதில் கொடுக்க வைகுண்டமும் சண்முகத்தின் தங்கைகளும் சௌந்தரபாண்டியிடம் வந்து கெஞ்சுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. கார்த்திக் எடுத்த முடிவு, உச்சகட்ட பதற்றத்தில் ரம்யா

Advertisment
Advertisements

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்க அவள் காரில் இருந்து வெளியே இறங்கி வந்து பேசிய நிலையில் இன்று, ரம்யா கார்த்திக்கை சமாளித்து விட்டு மீண்டும் காருக்குள் சென்று ஏற தீபா என்னுடைய புருஷனா போன் பண்ணாரு என்று கேட்க ரம்யா இல்லை என்று சமாளிக்கிறாள். மறுபக்கம் கார்த்திக், இளையராஜா ஆகியோர் தீபாவை தேடி அலைய இளையராஜா தீபா வாய்ஸ் மெஸேஜ் செய்திருப்பதை கவனித்து கார்த்திக்கிடம் சொல்கிறான்.

உடனே கார்த்திக் அந்த வாய்ஸ் மெசேஜை கேட்கும் போது அபிராமிக்கு குணமாகவதற்காக பரிகாரம் செய்ய போவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதுக்கு நான் தான் பொறுப்பு என்று பேசி இருப்பதை கேட்டதும் ஷாக் ஆகிறான். இது தீபாவாக பேசுன மாதிரி தெரியல, யாரோ இப்படி பேச வச்சிருக்காங்க என்று சந்தேகப்படும் கார்த்திக் கூடிய சீக்கிரமா தீபாவை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லி தனது போலிஸ் நண்பருக்கு போன் செய்து வாய்ஸ் மெசேஜ் எந் டவரில் இருந்து வந்திருக்கு என்பதை கண்டுபிடிக்க சொல்கிறான்.

மறுபக்கம் தீபாவும் ரம்யாவும் பரிகாரம் செய்யும் இடத்திற்கு வந்திருக்க போலி சாமியார் தீபாவை மிதக்க விடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து பூஜைகளை செய்கிறான். தீபா கார்த்திக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதால் பதற்றம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கௌதமால் கடுப்பான மதுமிதா.. கையை அறுத்துக் கொண்ட மாயா

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் கௌதமை பார்க்க வந்து மது காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று, மது நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்க கௌதம் வெளியே வராமல் இருக்க சந்தோஷ் கீழே வருகிறான். மது அவனிடம் பேச அவன் இப்போ கௌதம் டென்ஷனா இருக்கான், பார்க்க முடியாது என்று சொல்கிறான். உடனே மது அவருக்கு அவருடைய குடும்பம் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி எனக்கு என்னுடைய குடும்பம் ரொம்ப முக்கியம், அவங்களுக்கு ஏதாவது ஒன்னுனா சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்ல சந்தோஷ் என்ன ரெண்டு பேரோட கேரக்டரும் ஒரே மாதிரி இருக்கு என ஆச்சரியப்படுகிறான்.

அதன் பிறகு அவன் கௌதமிடம் வந்து மது காத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை சொல்ல கௌதம் அவங்க எல்லாம் பணத்துக்காக அப்படி பண்றவங்க என்று பார்க்க மறுத்து விடுகிறான். இதையடுத்து வீட்டுக்கு வரும் மாயா ஜீவா போன் எடுக்காததால் கையை அறுத்துக் கொள்ள அதை பார்த்து கௌதம் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இதற்கு காரணம் ஒரு பையனா தான் இருப்பான் அவன் யாருன்னு கண்டுபிடி என்று சொல்கிறான்.

மறுபக்கம் மது அப்செட்டாக இருக்க அதிதி என்னாச்சு என்று கேட்க ஒருத்தனை பார்க்க போயிருந்தேன். ஆனா அவன் என்னை ரொம்ப நேரமா காக்க வச்சுட்டான் என்று சொல்ல அதிதி போன் நம்பர் கண்டுபிடிச்சு திட்டலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். அடுத்ததாக சந்தோஷ் ஜீவா வீட்டு லேண்ட் லைன் நம்பரை கண்டுபிடிக்க ஜீவா அதிதியை பார்க்க ஹாஸ்பிடல் வந்திருக்கும் சமயத்தில் கௌதம் சந்தோஷ் கொடுத்த நம்பருக்கு போன் செய்ய மதுமிதா போனை எடுக்கிறாள்.

போனில் குரல் சரியாக கேட்காத நிலையில் இருவரும் சண்டை போட்டு போனை வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: