கணவனிடம் காதலை சொன்ன மனைவி... தம்பியை பழி வாங்கும் அண்ணன் : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Serial News 123

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கார்த்திக்கு எதிராக கூட்டு சேர்ந்த உறவுகள்.. நடக்க போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அடிபட்ட தொழிலாளருக்கு உதவிய கார்த்தியை வேலையில் இருந்து தூக்க ஆனந்த் திட்டம் போட்ட நிலையில் இன்று, ஆனந்த் கார்த்தியை வேலையில் இருந்து தூக்க போவதாக சொன்னதும் தொழிலாளர்கள் அவரை வேலையிலிருந்து எடுத்தால் எங்களையும் வேலையிலிருந்து எடுத்து விடுங்க என்று வாக்குவாதம் செய்ய அப்படியே சரி உங்க எல்லாரையும் வேலையிலிருந்து தூக்கிடுறேன் ஆனந்த் சொல்கிறான்.

Advertisment

உடனே அருண் ஆனந்தை தனியாக கூட்டிச் சென்று உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா? எல்லாரையும் வேலையை விட்டு தூக்கிட்டா கம்பெனிக்கு பெரிய லாஸ் ஆகிடும். எடுத்திருக்க ஆடரையும் முடிக்க முடியாம போயிடும் என்று திட்ட ஆனந்த் வேறு வழி என்று கார்த்திக்கை வேலையிலிருந்து தூக்கம் முடிவை கை விடுகிறான்.

பிறகு கார்த்திக் சோர்வாக வீட்டுக்கு வர தீபா அவனுக்கு கை கால் பிடித்து விடவா என்று கேட்க கார்த்திக் வேண்டாம் என்று மறுத்ததும் தீபா சோகமாகி வெளியே வர கார்த்திக் அவளது கையைப் பிடித்து இழுத்து ரொமான்ஸ் செய்கிறான். அதன் பிறகு அருண் ஆனந்த் ரியா மற்றும் ஐஸ்வர்யா என நான்கு பேரும் கூட்டு சேர்கின்றனர்.

கார்த்திகை எதுவுமே பண்ண முடியல என்று அருண் சொல்ல ரியா இது அவனுக்கு பழக்கப்பட்ட கம்பெனி, அவன் முதலாளி என்பதால் தொழிலாளர்கள் அவனை விட்டுக் கொடுக்காமல் தான் இருப்பார்கள். அவனை வேற கம்பெனிக்கு அனுப்பனும் என்று சொல்ல ரியா சொல்வதும் சரிதான் என யோசிக்கின்றனர். பிறகு அருண் அப்படி எந்த கம்பெனிக்கு அனுப்புறது என்று யோசிக்க ஆனந்துக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

அஞ்சலியை பார்க்க ஓடிவந்த சுடர்.. அலேக்காக கடத்திய வேலை

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் தமிழ் வந்தா தான் சாப்பிடுவேன் என்று அஞ்சலி அடம் பிடிக்க இன்று, எழில் அஞ்சலியை சாப்பிடு என்று மிரட்டி சாப்பிட வைக்கிறான். மனோகரி இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று வேலுவுக்கு போன் போட்டு இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க? அதான் சுடரை வீட்டை விட்டு வெளியே துரத்திட்டேன்ல அவ கழுத்துல சீக்கிரம் தாலியை கட்டு என்று சொல்கிறாள். வேலு சுடரை தேடி போனதையும் அவள் காணாமல் போன விஷயத்தை என் சொல்ல மனோகரி சீக்கிரம் தேடி கண்டுபிடித்து கல்யாணத்தை முடி என்று சொல்கிறாள்.

அதன் பிறகு சுடர் பாட்டி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்குகிறது. இங்கே அஞ்சலி இடிக்கு பயந்து எல்லோரையும் எழுப்ப யாரும் எழுந்து கொள்ளாத நிலையில் தமிழ் தமிழ் என சொல்லிக்கொண்டு அம்மாவின் புடவையை எடுத்து வர அது ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டு வராமல் இருக்க தமிழ் ரூமுக்குள் சென்று ஓரமாக உட்கார்ந்து அழுகிறாள்.

இடி இடிப்பதை பார்த்ததில் தமிழுக்கு அஞ்சலி ஞாபகம் வர எழில் வீட்டுக்கு ஓடி வந்து வெளியே நின்று அஞ்சலி அஞ்சலி என்று கூப்பிட தமிழின் குரலை கேட்ட அஞ்சலி ஜன்னல் கதவை திறந்து பார்த்து எமோஷனலாக ஃபீல் பண்ணுகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள எழில் குழந்தைகள் பயப்படுவார்கள் என்று ரூமுக்கு வர அஞ்சலி காணாமல் போனதை பார்த்து தேடுகிறான்.

தமிழின் ரூமில் இருக்கும் அஞ்சலி பார்த்த அவன் தமிழ் வெளிய நிற்பதையும் பார்த்து ஜன்னலை சாத்தி அவ கூட எல்லாம் பேசக்கூடாது என்று தமிழை கூட்டிச் சென்று விடுகிறான். இந்த இடைப்பட்ட கேப்பில் வேலு தமிழை அடித்து கடத்தி விடுகிறான். எழில் மீண்டும் ஜன்னல் வழியாக பார்க்க தமிழ் அங்கு இல்லை.

அடுத்து வேலு தமிழை ஒரு ரூமுக்குள் அடைத்து வைத்து நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம் என அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சதி செய்து ஸ்கூலை கைப்பற்றும் சௌந்தரபாண்டி.. காதலை சொன்ன பரணி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் தனக்காக வீட்டை அடமானம் வைத்த விஷயம் பரணிக்கு தெரிய வந்த நிலையில் இன்று, பரணி சிவபாலனிடம் சண்முகம் எனக்காக என்னெல்லாம் செய்திருக்கான் என்று எமோஷனாக பேசி வருகிறாள், எதிரே சண்முகம் வர அவனை பளாரென்று அறைய சண்முகம் எதுக்கு இப்போ அடிச்ச என்று கேட்க எனக்காக வீட்டை அடமானம் வச்சியா? என்னை உனக்கு இவ்வளவு பிடிக்குமா என்று பேசுகிறாள்.

அடுத்து சௌந்தரபாண்டி ஸ்கூல் ஓனருக்கு போன் போட்டு நானும் சண்முகமும் ஒன்னு தான். நானும் அந்த ஸ்கூலை எடுத்து நடத்தணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு 5 கோடி கொடுத்துடுறேன் எனக்கே கொடுத்துடுங்க என்று சொல்ல ஓனர் ஸ்கூலை யார் எடுத்து நடத்தினாலும் எனக்கு சந்தோசம் தான், உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

போனை வைத்த சௌந்தரபாண்டி ஸ்கூலை வாங்கியதும் அதை இடித்து தள்ளிட்டு பிளாட் போட்டு விற்றால் பெரிய லாபம் வரும் என்று கணக்கு போடுகிறார், இங்கே சண்முகம் பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்க கனி தன்னுடைய உண்டியல் பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறாள். தங்கச்சியின் பாசத்தை பார்த்த சண்முகம் சிலிர்த்து போகிறான்.

நைட்டெல்லாம் பரணி தூங்காமல் அழுது கொண்டே இருக்க தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் சண்முகம் நீ இன்னும் தூங்கலையா என்று கேட்க பரணி அவன் தனக்காக செய்த விஷயங்களை நினைத்து கண்ணீருடன் பேசி தனது மனதுக்குள் இருக்கும் காதலை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: