Advertisment

முதலிரவுக்கு தயாராகும் நாயகி... உண்டியலை தூக்கிய வில்லன் கும்பல் : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல்களில் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tam

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கார்த்திக், தீபாவுக்கு சாந்தி முகூர்த்தம்.. சர்ப்ரைஸ் கொடுத்த அபிராமி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி தீபாவை கூப்பிட்டு நீ ஒரு பாட்டு பாடு, நீ பாடி நான் கேட்டதே இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று, தீபா ஒரு பாடலை பாடி முடிக்க அபிராமி அதை கேட்டு ரசித்து பாராட்டுகிறாள், பிறகு உனக்காக ஒரு விஷயம் பண்ண போறேன் என்று சொல்லி கொண்டிருக்க வீட்டிற்குள் ஜோசியர் என்ட்ரி கொடுக்கிறார். அபிராமி ஜோசியரை வரவேற்று உட்கார வைக்கிறாள்.

அதன் பிறகு கார்த்திக்கும் தீபாவுக்கும் கல்யாணமாகி ரொம்ப நாள் ஆகுது, ஆனால் இன்னும் நடக்க வேண்டியது எதுவும் நடக்கல என்று சொல்லி சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்து தர சொல்ல அதை கேட்டு தீபா எமோஷனாகிறாள். மீனாட்சியும் மைதிலியும் முருங்கை காயாக சமைத்து நினைத்ததை சாதிச்சிட்ட போல என்று கலாய்க்கின்றனர். நான் இதையெல்லாம் நினைச்சு சமைக்கல என்று தீபா சொல்லியும் அவளை கலாய்த்து எடுக்கின்றனர்.

அதன் பிறகு ஜோசியர் நாள் குறித்து தர மீனாட்சி இன்னைக்கு ஒரு நாள் நான் வீட்டுக்குள் வரேன், தீபாவோட ரூமை நான் அலங்காரம் செய்கிறேன் என்று சொல்கிறாள். மறுபக்கம் ரம்யாவும் கம்பெனியின் மாணிக்கம் கார்த்தியிடம் இன்னைக்கு ஒரு புது மிஷின் வருது, அதை இன்ஸ்டால் பண்ண போறாங்க, எப்படி பண்றாங்கனு பார்த்து கத்துக்க என்று சொல்கிறார்.

மிஷினை இன்ஸ்டால் செய்யும் போது கார்த்திக் இதை இப்படி பண்ண கூடாது, அப்படி பண்ணா மிஷின் பத்திக்கிட்டு எரியும் என்று சொல்ல எல்லாரும் ஷாக்காக ரம்யா கீழே இறங்கி வருகிறாள், நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு. இத்தனை வருஷமாக இவங்க எல்லாம் வேலை செய்யுறாங்க என்று சொல்லி கோபப்பட கார்த்திக் அமைதியாகி விடுகிறான்.

கொஞ்ச நேரத்தில் அவன் சொன்னபடியே மிஷின் தீ பிடித்து எறிகிறது. இதனால் ரம்யா கோபமாகி கேபினுக்கு சென்று விடுகிறாள், கார்த்திக்கை கூப்பிட்டு இந்த முறை நீ சொன்ன மாதிரி நடந்து விட்டது என்பதற்காக மத்த விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைகிற வேலையை வச்சுக்காமல் உன்னுடைய வேலையை ஒழுங்கா பாரு என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறாள். வீட்டில் மீனாட்சியும் மைதிலியும் தீபாவை கலாய்த்தபடியே ரூமை தயார் செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பன் மூவ்மெண்ட் கலாட்டாவாக மாறிய நினைத்தேன் வந்தாய்.. சவால் விட்டு சிக்கிய எழில்

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோகரி அஞ்சலியை பிரிக்க நினைக்க சுடர் பொங்கி எழுந்து அவளுக்கு பதிலடி கொடுத்த நிலையில் இன்று, அஞ்சலி தூங்காமல் எழுந்து வந்து நான் உன்கூட தான் தூங்குவேன் என்று சுடர் ரூமுக்கு வருகிறாள். சுடர் அப்பாரும் பக்கத்தில் தான் இருக்கு நீ அங்க போய் தூங்கு இல்ல மேல போய் மத்தவங்களோட சேர்ந்து தூங்கு என்று சொல்ல அஞ்சலி நான் உன் கூட தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கிறாள்.

இதனால் சுடரும் சம்மதம் சொன்ன அவை சோகமாக இருப்பதை பார்த்து அஞ்சலி நான் ஒரு கதை சொல்லட்டுமா என்று கதை சொல்லி சுடரை சிரிக்க வைக்க இருவரும் சிரிக்க சிரிப்பு சத்தத்தை கேட்டு அஞ்சலி டைம் ஆச்சுல இன்னும் இங்கு என்ன பண்ற ரூமுக்கு போ என்று திட்டி அஞ்சலி அழவைத்து மேலே அனுப்பி வைக்கிறான்.

இதனால் சுடர் உங்களால குழந்தைங்க உலகத்துக்குள்ள வரவே முடியாது. கோபப்படும் மட்டும் தான் தெரியும் என்று திட்ட எழில் குழந்தைகளை என்னுடைய கண்ட்ரோலுக்குள் கொண்டு வர முடியும். என்னால குழந்தைங்கள பாத்துக்க முடியும். ஒரே வாரத்துல செய்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான். மறுநாள் காலையில் சுடருக்கு முன்பாக ரூமுக்கு வந்த எழில் குழந்தைகளை எழுந்திருங்க என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறான்.

அப்போது சுடர் சொன்னதும் அவங்க எழுந்துடுவாங்களா போய் பாருங்க என்று சொல்ல, எழில் திரும்பி ரூமுக்கு வர எல்லோரும் தூங்கிக் கொண்டே இருக்கின்றனர். பிறகு எழில் எல்லோரையும் எழுப்பி குளிக்கணும் என்று சொல்ல அஞ்சலி சுடர் தான் குளிக்க வைப்பா என்று சொல்கிறாள். இன்னைக்கு நான் குளிக்க வைக்கிறேன் என்று அவளை கூட்டிச் செல்லும் எழில் கடைசியில் நனைந்து வருவதை பார்த்து சுடர் சிரிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் கவினை குளிக்க வைக்கும் மறந்துட்டீங்க என்று எழிலுக்கு ஞாபகப்படுத்தி கலாய்க்க அவன் கவினை குளிக்க வைக்க கூட்டி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உண்டியலை அலேக்காக தூக்கிய முத்துப்பாண்டி ஆட்கள்.. வைகுண்டத்தால் வந்த ஆப்பு

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் உண்டியலை ஆட்டி பாத்து பாதி உண்டியல் கூட வரல, ஸ்கூல் வாங்க முடியாதுனு சொன்னதும் சண்முகம் அப்பாவை அடிக்க ஓட அவர் எஸ்கேப் ஆன நிலையில் இன்று, சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் நாளைக்கு லீவ் போட ஸ்கூலை வாங்க கையெழுத்து போடணும் என்று சொல்ல சிவபாலன் நானும் கையெழுத்து போடணுமா என்று கேட்க இசக்கி என் அண்ணன் தான் ஸ்கூலை வாங்க போகுது என்று சவால் விடுகிறாள்,

ஒருவேளை நீங்க வாங்கிட்டா நானே ஆரத்தி எடுத்து வரவேற்கிறேன் என்றும் சொல்கிறாள். இதனையடுத்து சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டில் இருக்கும் உண்டியலை திருடி ஜனங்க பணத்தை ஆட்டைய போட்டுடானு பழியை போட்டுடலாம் என்று சொல்ல முத்துப்பாண்டி செம ஐடியா என்று ரவுடிகள் 5 பேரை ஏற்பாடு செய்கிறான், இங்கே சண்முகத்திடம் இருந்து தப்பிய வைகுண்டம் வீட்டுக்கு வெளியே படுத்து கொண்டு பாட்டு பாடி ஊரை கூட்ட அக்கம் பக்கத்தினர் வந்து அவரை திட்டி விட்டு செல்கின்றனர்.

வைகுண்டம் என் கால்ல விழுந்து கூப்பிட்டா தான் வீட்டுக்குள்ள வருவேன் என டைலாக் பேச சண்முகம் அப்படினா நீ வரவே வேணாம் என்று பன் செய்து கதவை சாற்றி விடுகிறான். அடுத்து முத்துபாண்டி அனுப்பிய ரவுடிகள் வீட்டிற்குள் புகுந்து உண்டியலை தூக்கி வர வைகுண்டம் தூங்கி கொண்டிருக்கும் போது கனவில் யாரோ உன் ஐஸ்வர்யம் உன்னை விட்டு போகுது என்று சொன்னதும் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள உண்டியலை தூக்கி செல்வதை பார்த்து சத்தம் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment