Advertisment

தோழியின் கணவனை காதலிக்கும் பெண் : அப்பாவுக்கு எதிராக மகள் போராட்டம் : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil Serial
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் ரம்யாவும் போட்டி போட்டு கொண்டு கிப்ட் வாங்கிய நிலையில் இன்று, அபிராமி வீட்டில் கல்யாண நாள் கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கேக்குடன் தயார் நிலையில் இருக்கின்றனர், மறுபக்கம் பங்க்ஷன் கிளம்பிய ரம்யா அப்பாவையும் பங்க்ஷனுக்கு கூப்பிட அவர் எனக்கு உடம்பு முடியல நீ மட்டும் போயிட்டு வா மா என்று சொல்கிறார்.

எப்படியாவது ரம்யா கார்த்திக் தீபா கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருவதை தடுக்க வேண்டும் என்று யோசிக்கிறாள், இதற்காக பிளான் போட்டு ஒரு ஆளை ஏற்பாடு செய்து ரம்யா கிளம்ப உள்ள காரை ரிப்பேர் செய்து விட கார் ஸ்டார்ட் ஆகாமல் போய் விடுகிறது. இதனையடுத்து ரம்யா கேப் புக் செய்து தீபா வீட்டிற்கு வந்து கொண்டிருக்க இங்க தீபா ரம்யா வருவதா சொன்னா அதுவரைக்கும் காத்திருக்கலாம் என்று சொல்லி அனைவரும் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஐஸ்வர்யாவின் முதல் அட்டெம்ப்ட் தோல்வி அடைந்ததும் அடுத்து அவளே கார் எடுத்து வந்து ரம்யா வரும் கேப் முன்னாடி நிறுத்தி வம்பிழுத்து ரம்யாவின் நேரத்தை வீணடிக்கிறார். மறுபக்கம் அபிராமி வீட்டில் எல்லாரும் ரம்யா வருகைக்காக காத்திருக்க தீபா அவளுக்கு போன் செய்ய ரம்யா போனை கவனிக்காமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கனி சொன்ன விஷயத்தை கேட்டு கோபமாக கோவிலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டி ஏற்கனவே கோவிந்தனை வைத்து எதோ திட்டத்தை தீட்டி வைத்திருக்க, இங்கு வந்த பரணி திடீரென சாமி வந்தது போல் ஆடுகிறாள். கோவிந்தனை பார்த்து நீ இன்னைக்கு குடிக்க காசு தரலனு உன் பொண்டாட்டி காதை அறுத்துட்டு தானே வந்த என்று சொல்ல கோவிந்தன் என் வீட்டில நடந்ததை அப்படியே சொல்றியே மா என்று காலில் விழுந்து சரணடைகிறேன்.

இதனை தொடர்ந்து பரணி சௌந்தரபாண்டியை பார்த்து நீ நிறைய பாவம் பண்ணி இருக்க, உனக்கான அழிவு காலம் தொடங்கிருச்சு, நடக்க போற தர்மகத்தா தேர்தலில் உன்னை தோற்கடித்து எனக்கு தேவையானதை நானே உன்கிட்ட இருந்து எடுத்துக்குவேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி மிரண்டு போய் நிற்கிறார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சண்முகம் குடும்பத்தினர் பரணிக்கு சாமி வந்தது பற்றி பேச பரணி இன்னைக்கு சொன்னது எல்லாம் அப்படியே நடக்கணும், அப்பாவை தர்மகத்தா தேர்தலில் ஜெயிக்க விட கூடாது என்று சொல்கிறாள்.

மறுபக்கம் சௌந்தரபாண்டி சண்முகத்தை ஊரை விட்டே துரத்த முடிவெடுக்கிறார். கந்து வட்டி காரனிடம் பணத்தை கொடுத்து வாங்கிய சண்முகம் வீட்டு பத்திரத்தை எடுத்து கொண்டு சண்முகம் வீட்டிற்கு வர அவரை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து.. கண்ணீருடன் கலங்கும் குழந்தைகள்

நினைத்தேன் வந்தாய் இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்து வீட்டிற்கு வந்து கனகவல்லி மற்றும் எழிலிடம் பேச அவள் யார் கண்ணுக்கும் தெரியவில்லை என்று அறிந்து கலங்கிய நிலையில் இன்று, இந்து குழந்தைகள் ரூமுக்குள் நுழைய நான்கு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து அம்மாவை நினைத்து அழுது பீல் பண்ண குழந்தைகளிடம் பேச முயற்சி செய்கிறாள் இந்து, அம்மா இங்க தான் இருக்கேன் என்று சொல்ல முயற்சி செய்கிறாள்.

அஞ்சலி என்னம்மா இருக்கீங்க? நீங்க வரவே மாட்டீங்களா? உங்களை கட்டி பிடிக்கணும் போல இருக்கு என்று அழுகிறாள். இந்து வா அம்மாவை கட்டி பிடித்துக்கோ என்று கட்டி கொள்ள செல்ல அதுவும் முடியாமல் போகிறது. இதனால் இந்து ஐயோ கடவுளே எனக்கு ஏன் இந்த நிலைமை என்று அழுது புலம்பி வீட்டிற்கு வெளியே வந்து உட்காருகிறாள். இந்த நேரம் பார்த்து சுடர் வீட்டிற்கு வர அவள் கண்ணுக்கு இந்து தெரிய யார் நீங்க என்று கேட்க நான் உனக்கு தெரியுறானா என்று இந்து கேட்க சுடர் ஆமாம், தெரியறீங்க.. யார் நீங்க எதுக்கு வெளியே உட்கார்ந்து இருக்கீங்க என்று கேட்க நான் இந்து என்று சொல்ல வர சுடர் நீங்க இந்துவோட பிரண்டா சரி உள்ள வாங்க என்று கூப்பிடுகிறாள்.

இந்து இல்ல நான் வரல கிளம்பறேன் என்று இந்து சொல்ல சுடர் உள்ள வாங்க என்று கூப்பிட்டு உள்ளே செல்ல ஹிந்துவும் அவளுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Zeetamil Serial
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment