Advertisment

கணவனை காப்பற்ற மனைவி ஆக்ஷன் : குழந்தைகளுக்கு உதவும் அம்மா ஆவி : ஜீ தமிழ் சீரியலின் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil Serial
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மனோகரி செய்யும் சூழ்ச்சி வேலைகள்.. இந்துவால் நடக்கும் மேஜிக்

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி குழந்தைகளை தோற்கடித்து சுடரை வெளியே தள்ள முடிவெடுத்த நிலையில் இன்று, ஸ்கூலில் கம்பிட்டேஷன் தொடங்குகிறது, முதலில் அஞ்சலிக்கான பாட்டு போட்டி ஆரம்பிக்க நீ பிராக்டிஸ் டைம்லேயே சரியா பாடல என்று ப்ரண்ட்ஸ் கிண்டல் அடிக்க அவள் மேடை ஏறவே பயப்படுகிறாள். மேடை எறியும் பாடாமல் நிற்க இந்து நீ போய் அவங்க அப்பாவை கூட்டிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள்.

சுடர் வெளியில் இருக்கும் எழிலை கூட்டி வந்து நிறுத்த அபி அழகாக பாடி முடிக்கிறாள். இதனை தொடர்ந்து அடுத்ததாக கவினுக்கான டிராயிங் போட்டி தொடங்குகிறது, போட்டிக்கு தேவையான பொருட்கள் ஒரு முறை மட்டுமே கொடுக்கப்படும் என்று கண்டிஷனுடன் போட்டி தொடங்க கவினுக்கு கொடுக்கப்பட்ட சார்ட்டில் மனோகரி இங்கை கொட்டி வைத்து கிடக்க இதை பார்த்து கவின் ஷாக் ஆகிறான். சுடர், எழில் என எல்லாரும் ஸ்கூல் நிர்வாகத்திடம் வேற சார்ட் கேட்க கொடுக்க மறுக்கின்றனர்.

இந்நிலையில் இந்து கவினை கண்ணை மூடிட்டு அவனுக்கு தோன்றுவதை வரைய சொல்லு என்று சொல்ல சுடரும் அப்படியே சொல்ல கண்ணை மூடிய கவனினுக்கு அம்மாவின் முகம் தோன்ற அவன் அதை அப்படியே கையாலேயே வரைந்து ஆச்சரியடுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சண்முகத்தை என்கவுண்டரில் போட்டு தள்ள நடக்கும் சதி.. பரணி செய்ய போவது என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி குடிநீர் விடும் கிணற்றின் அருகே இருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்த நிலையில் இன்று, ண்முகம் வீட்டில் தங்கைகள் எல்லாரும் அண்ணி அண்ணனோட தான் வருவாங்க என்று பேசி கொண்டிருக்க ஆட்டோ சத்தம் கேட்டு அண்ணன் வந்துடுச்சி என்று வெளியில் ஓடி வர பரணி மட்டும் தனியாக இறங்குவதை பார்த்து ஷாக்காக்கின்றனர். 

இதனை தொடர்ந்து பரணியிடம் அண்ணன் எங்கே என்று கேட்ட கூடிய சீக்கிரம் அவன் வெளியே வந்துடுவான் என்று அவர்களை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறான், பிறகு சிவபாலனை வைத்து தண்ணீர் விடும் கோவிந்தனை கூப்பிட்டு வர சொல்லி நீ ஏன் தண்ணீர் விடல? எங்க போய் இருந்த என்று விசாரிக்க சனியன் தான் எனக்கு சரக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்கி விட்டதாக சொல்கிறான்.

அதே போல் சண்முகம் போனில் இருந்து தண்ணீர் வரலன்னு கம்பளைண்ட் வந்த நம்பருக்கு போன் செய்து சனியன் மனைவி எடுத்து பேசவே இது எல்லாம் சௌந்தரபாண்டியின் ஏற்பாடு என்பதை புரிந்து கொள்கிறாள். அடுத்து முத்துப்பாண்டி அப்பாவுக்கு போனை போட்டு சண்முகத்தை கைது செய்த விஷயத்தை சொல்ல அவர் அவனை வெளியே கூட்டிட்டு போய் தப்பித்து போக முயற்சி செய்ததாக என்கவுண்டர்ல போட்டு தள்ளிடு என்று சொல்ல இதை முப்பிடாதி கேட்டு விடுகிறான்.

சண்முகத்திடம் விஷயத்தை சொல்லி தப்பி போக சொல்ல அவன் அதெல்லாம் அவனால் ஒன்னும் பண்ண முடியாது, நீ பரணிக்கு இந்த விஷயத்தை சொல்லு என்று சொன்னதும் முப்பிடாதி பரணிக்கு தகவல் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்டேஷனலில் வைத்து கார்த்திக்கிடம் மாட்டிய ரம்யா.. அடுத்து நடந்தது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவிலுக்கு வந்திருந்த அபிராமியும் மீனாட்சியும் ரம்யா வீட்டிற்கு செல்ல முடிவு செய்திருந்த நிலையில் இன்று, தீபாவை கொல்ல வந்த ரவுடி கோவில் அருகே போன் பேசி கொண்டே நடந்து வர எதிரில் மீனாட்சியும் போன் பேசியபடி நடந்து வர இருவரும் மோதி கொள்கின்றனர், மீனாட்சிக்கும் ரவுடிக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் போலீசை கூப்பிட்டு அவனை பிடித்து கொடுக்கின்றனர்.

அதன் பிறகு அந்த ரவுடி ரம்யாவுக்கு போன் செய்து தான் கைதான விஷயத்தை சொல்ல அவள் அவனை வெளியே எடுக்க ஸ்டேஷனுக்கு கிளம்புகிறாள், மறுபக்கம் கார்த்திக் ஜூஸில் மறந்து கலந்தது யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று கம்பளைண்ட் கொடுக்க ஸ்டேஷனுக்கு வருகிறான். அப்போது கார்த்தியின் நண்பரான இன்ஸ்பெக்டர் உங்க அண்ணி கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டானு கைது பண்ணி இருக்கோம், அவனை விசாரிக்கும் போது அவன் கிட்ட கத்தி இருந்தது, தீபாவை குத்த வந்தது இவனா பாரு என்று காட்ட கார்த்திக் இவன் தான் என்று அடையாளம் காட்டுகிறான்.

அதன் பிறகு ரம்யாவும் ஸ்டேஷனுக்கு வர கார்திக்கியிடம் சிக்கி கொள்கிறாள். எதுக்கு இங்க வந்தீங்க என்று விசாரிக்க ரம்யா ஒருத்தன் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பதாக கம்பளைண்ட் கொடுக்க வந்ததாக சொல்கிறாள். பிறகு இன்ஸ்பெக்டர் இவனா பாருங்க என்று காட்ட ரம்யாவும் ஆமாம் என்று தலையாட்டி அங்கிருந்து கிளம்பி வருகிறாள். அதை தொடர்ந்து அபிராமியும் மீனாட்சியும் வீட்டிற்கு வர ரம்யா அவர்களை வரவேற்கிறாள்.

பிறகு அப்பாவிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைக்க அவர் கார்த்திக்கு முதல் முதலாக என் பொண்ணை தான் பொண்ணு பார்க்க வந்தீங்க என்று சொல்ல அபிராமி ஷாக் ஆகிறாள். இதையடுத்து ரம்யா அப்பா சொன்னதை மனசுல வச்சிக்காதீங்க, கார்த்திக்.. தீபாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் சொல்கிறாள். அபிராமியும் மீனாட்சியும் கோவிலில் இருந்து கொண்டு வந்த சாமி புட்வையை இங்கேயேமறந்து வைத்து விட்டு கிளம்பி விட ரம்யா அந்த புடவையை எடுத்து வைத்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment