Advertisment
Presenting Partner
Desktop GIF

தீபாவை கடத்த திட்டம்: அண்ணாவுக்கு வந்த அதிர்ச்சி: இன்னும் எத்தனை நாள் இந்த இழுபறி?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil anna KD andf Nc

பரணியால் வந்த அவமானம்.. கோபத்தில் கொதிக்கும் சண்முகம்,  நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணாசீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கடையை மீட்க வெட்டுக்கிளியிடம் நகையை அடமானம் வைத்து பணத்தை கொடுத்து அனுப்பிய நிலையில் இன்று, வெட்டுக்கிளி பணத்தை திருப்பி கொடுத்து விட்டு கந்துவட்டி காரனிடம் இருந்து டாக்குமெண்டையும் பணத்தை கொடுத்ததற்காக பில்லையும் வாங்கி வந்து கொடுக்கிறான்.

அடுத்து சனியன் அதே கந்து வட்டி காரனிடம் பணம் கேட்டு வந்து நிற்க வட்டிக்காரர் தர முடியாது என்று சொல்ல சனியன் சௌந்தரபாண்டிக்கு போன் போட்டு சிபாரிசு செய்ய சொல்லி கேட்கிறான். சௌந்தரபாண்டியும் சனியனுக்காக வட்டிக்காரனிடம் பேசும் போது பரணி நகைகளை அடகு வைத்து கடையை மீட்ட விஷயத்தை சொல்லி விடுகிறான்.

உடனே சௌந்தரபாண்டி நகையை அடகு வைத்த கடையை தேடி பிடித்து நகையை மீட்டு நேராக ஷண்முகம் வீட்டிற்கு வந்து நகையை கொடுத்து அப்பன் நான் இருக்கும் போது நீ எதுக்கு நகையை அடகு வைக்கணும் என்று சொல்லி சண்முகத்தையும் அவனமானப்படுத்தி பேசி விட்டு செல்கிறார்.  சண்முகம் நான் தான் உன் நகை தேவையில்லன்னு சொன்னேன்ல எதுக்கு இப்படி பண்ண? உன் குடும்பத்தோடு சேர்ந்து என்னை அவமானப்படுத்திட்ட என்று கோபித்து கொள்கிறான்.

இதையடுத்து சௌந்தரபாண்டி வீட்டிற்கு வரும் பரணி நகைகை தூக்கி வீசி எனக்கு உங்களையும் உங்க நகைகளையும் விட சண்முகம் தான் முக்கியம் என பதிலடி கொடுத்து விட்டு செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவை கடத்த ரூபஸ்ரீ போட்ட திட்டம்.. சக்தியால் காத்திருந்த ட்விஸ்ட், ஷாக்கிங்கில் அபிராமி குடும்பம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை வேனில் கச்சேரிக்கு அழைத்து செல்ல ஷக்தி முடிவெடுத்த நிலையில் இன்று, ரூபாஸ்ரீ ஒருவனை ஏற்பாடு செய்து கார்த்திக் போல் நடித்து ஆசிரமத்தில் இருப்பவர்களை நம்ப வைத்து தீபாவை கடத்த திட்டமிடுகிறாள். அவனும் ஆசிரமத்திற்கு வந்து கார்த்திக் போல் நடித்து எல்லாரையும் நம்ப வைக்க முயற்சி செய்ய அவன் ஓவர் ஆக்டிங் செய்ய ரூபஸ்ரீ பதறுகிறாள். இருந்தாலும் அவன் கார்த்திக் போல் நடித்து அனைவரையும் நம்ப வைத்தாலும் இறுதி நொடியில் அங்கு வரும் ஷக்தி இது கார்த்திக் இல்லை என்பதை கண்டுபிடிக்க ரூபஸ்ரீ அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள், பிறகு ஆசிரமத்தில் இருந்து கச்சேரிக்கு கிளம்ப தயாராகுகின்றனர்.

அடுத்து அபிராமி வீட்டில் எல்லாரும் கச்சேரிக்கு கிளம்ப மீனாட்சி தீபா வணங்கும் முருகன் சிலையையும் எடுத்து செல்லலாம் என்று சொல்லி பூஜை செய்து எடுத்து வர எதிர்பாராத விதமாக அந்த சிலை உடைய அனைவரும் பதற்றம் அடைகின்றனர். இருந்தாலும் எதுவும் தப்பாக நடக்காது என்ற நம்பிக்கையுடன் கிளம்பி வருகின்றனர், இங்கே ரூபஸ்ரீ ஐஸ்வர்யாவை சந்தித்து திட்டம் தோல்வியில் முடிந்ததை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரின் மூலிகை சாப்பாட்டால் தடுமாறும் எழில்.. மனோகரிக்கு விழுந்த அடி உதை - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரையும் எழிலையும் சேர்த்து வைக்க தீபா ஒரு ஐடியா சொல்லிய நிலையில் இன்று, தீபா செய்த மாந்திரீகத்தால் இந்துவுக்கு ஒரு புது சக்தி கிடைக்க இந்துவின் ஆன்மா சுடருக்குள் புகுகிறது. இதை தொடர்ந்து மனோகரி எழில் கூப்பிட்டதாக சொல்லி செல்வியுடன் சேர்ந்து சுடரை ஒரு ரூமுக்கு அழைத்து சென்று எழிலை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கோபப்படுகிறாள்.

செல்வியை வெளியே அனுப்பி வைக்கும் மனோகரி கதவை சாற்றி விட்டு சுடரிடம் கோபப்பட சுடர் மனோகரியை அடி வெளுத்து எடுக்கிறாள். வலி தாங்க முடியாமல் மனோகரி கதற செல்வி உள்ளே வர அவளுக்கும் அடி விழுகிறது. இதை தொடர்ந்து சுடர் எழிலுக்காக முருங்கைக்காய் சூப், முருங்கைக்காய் பொரியல், நண்டு ரசம் என எல்லாவற்றையும் சமைத்து வைத்து சுடர் ரொமான்டிக்காக பரிமாற சுடரின் நடத்தையால் குழப்பமடையும் எழிலும் அதை சாப்பிட்டு விடுகிறான். அதன் பிறகு எழில் ரூமுக்குள் இருக்க சுடர் பால் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

எழில் வேண்டாம் என்று சொல்ல அம்மா கொடுத்ததாக சொல்லி கொடுக்கிறாள். மேலும் எழிலுடன் ரொமான்டிக்காக நடந்து கொள்ள அவன் விலகி விலகி செல்கிறான். பிறகு சுடர் கம்மல், வளையல் எல்லாவற்றையும் கழட்டி வைத்து விட்டு ஒரு மாதிரி இருப்பதால் குளிக்க போவதாக சொல்லி உள்ளே செல்கிறாள். 
எழில் சாப்பிட்ட சாப்பாடு என்னமோ பண்ணுதே, மனசு இறங்கிடுவேன் போலயே.. எழில் அப்படி எதுவும் பண்ணிடாத டா என்று படுத்து தூங்கு என மனதுக்குள் சொல்லி கொண்டு படுத்து விடுகிறான்.

சுடர் தலைக்கு குளித்து வந்து தலையை துவட்ட சூடரின் அழகில் மயங்கும் எழில் எழுந்து உட்கார்ந்து விடுகிறான். நீ வெளியே போ என்று தப்பு எதுவும் நடக்காமல் இருக்க சுடரை வெளியே துரத்த முயற்சி செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment