Advertisment

மருமகளை புரிந்துகொண்ட மாமியார்... கணவனுக்கு கெடு வைத்த மனைவி : அடுத்து என்ன?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial 223

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி வீட்டுக்கு வர தீபா ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கும் நிலையில் இன்று, அபிராமி தீபாவிடம் நீ இந்த குடும்பத்துக்காக செய்த தியாகத்தை எல்லாம் நான் புரிஞ்சுகிட்டேன். நானே தேடி இருந்தா கூட இந்த மாதிரி ஒரு பொண்ணு கார்த்திக்கு கட்டி வச்சிருக்க முடியாது அவனுக்கு ஏத்தவன் நீ தான் என்று சொல்லி தீபாவை தன் மகளாக ஏற்றுக் கொள்கிறாள்.

பிறகு மீனாட்சி பார்த்து உனக்குத்தான் என்ன சொல்றதுன்னு தெரியல என்று வருத்தப்படுகிறார். என்னைக்கு இருந்தாலும் நீ தான் என் மருமக என்று சொல்ல மீனாட்சி நீங்கதான் என்னுடைய அத்தை என்று சொல்கிறாள். அதனைத் தொடர்ந்து அபிராமி சொத்தை பிரிக்கப் போவதாக சொல்கிறாள்

பிறகு ஆனந்த் மற்றும் ரியா காஸ்மெடிக் கம்பெனி, இந்த வீடு எல்லாம் நமக்கு வரணும் என பேசிக் கொள்கின்றனர். இதை அடுத்து அருண் ஐஸ்வர்யா நமக்கு சின்ன சின்ன கம்பெனி போதும், ஆனா இந்த வீட்டை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அதுதான் நம்முடைய அடையாளம் நீங்க கேக்கலனாலும் நான் இந்த வீட்ட கேட்கலனாலும் என்று சொல்கிறாள்.

பிறகு கார்த்திக் சொத்து பிரிப்பது பற்றி பேசி வருத்தப்பட தீபா யார் என்னை கேட்டாலும் சரி அத்தையும் மாமாவையும் நாம விட்டுக் கொடுக்கக் கூடாது அவங்க நம்பக் கூட தான் இருக்கணும் என்று சொல்கிறாள். மறுநாள் லாயர் வீட்டுக்கு வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

பஞ்சாயத்தில் அதிர்ச்சி கொடுத்த பரணி.. கை கொட்டி சிரித்த சௌந்தரபாண்டிக்கு ஷாக்

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் சவுந்தரபாண்டி பஞ்சாயத்துக்கு வந்து ஊருக்குத்தான் உபதேசம் என் பொண்ணு சண்முகத்தோட சந்தோஷமா இல்ல என்று சொல்லி பிரச்சனை செய்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டி சொன்னதைக் கேட்டு சண்முகம் நாங்க சந்தோஷமா தான் இருக்கோம் என்று சொல்கிறார். ஆனால் சௌந்தரபாண்டி அதை நீ சொல்லக்கூடாது என் பொண்ணு தான் சொல்லணும் என்று சொல்லி சனியன் அனுப்பி பரணியை பஞ்சாயத்திற்கு கூட்டி வர சொல்கிறார்.

வீட்டுக்கு வந்து சனியன் கூப்பிட்டதும் ரத்னா உனக்கும் அண்ணனுக்கும் இருக்கும் பிரச்சனை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் பஞ்சாயத்தில் அண்ணனை விட்டுக் கொடுத்து விடாத என்று சொல்லி அனுப்புகிறாள். பரணி பஞ்சாயத்துக்கு வர சௌந்தரபாண்டி பேசிக்கொண்டே இருக்க கொஞ்சம் பொறுங்க பரணி பதில் சொல்லட்டும் அத வச்சு தான் தீர்ப்பு சொல்ல முடியும் என்று சொல்கின்றனர்.

பிறகு பரணியிடம் நீயும் சண்முகமும் சந்தோஷமா தான் இருக்கீங்களா? சண்முகம் நல்ல புருஷனா நடந்துக்கிறானா என்று கேட்கின்றனர். பரணி காதருகே வந்த சண்முகம் சந்தோஷமாத்தான் இருக்கும்னு சொல்லு என்று சொல்ல பரணி இல்லையென அதிர்ச்சி கொடுக்கிறாள்.  உடனே இதைக் கேட்ட சௌந்தரபாண்டி சந்தோஷத்தில் திளைக்க சந்தோஷமா இல்லன்னு சொன்னதும் உடனே பிரிஞ்சு போகிறது நம்ம ஊரு வழக்கம் கிடையாதே என பரணி சொல்கிறாள்.

மேலும் நான் சண்முகத்துக்கு இரண்டு வாரம் டைம் தரேன். அவ எனக்கு நல்ல புருஷனா இருக்கானான்னு பாக்கலாம் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதை யார் கவனிக்கிறது என்று கேள்வி கேட்கிறார். நீங்க வேணும்னா ஒரு ஆளை அனுப்பி எங்கள கவனிச்சுக்கோங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி சனியன் மற்றும் அவரது மனைவியை சண்முகம் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பைக்கில் சண்முகம் கோபமாக வர பரணி எனக்கு இளநீர் வேண்டும் என்று சொல்லி அடம் பிடிக்கிறாள்.

மேலும் ஒரு இளநீரை ரெண்டு பேரும் குடிக்க பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 நினைத்தேன் வந்தாய்:

எழிலை எமோடிஷனாக்கிய சுடர்.. வேலுவால் வந்த சிக்கல்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர், எழில் ஸ்கூலுக்கு சென்றிருக்க அங்கு அஞ்சலி டீச்சர் எழிலுக்கு டார்ச்சர் கொடுத்த நிலையில் இன்று, அஞ்சலி டீச்சர் எழிலிடம் வந்து உங்க போன் நம்பர் கிடைக்குமா? நீங்க ஏன் இரண்டாவது திருமணம் செய்ய கூடாது என்றெல்லாம் கேட்க எழில் அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓடி ஒளிகிறான். மறுபக்கம் சுடர் அருகே வந்து நிற்கும் சதாசிவம் அவளை கீழே விழ வைத்து அவள் மீது தண்ணீரை ஊற்றி விடுகிறான்.

அவனுக்கு பயந்து ஓடி வரும் சுடர் எழில் மீது மோதி நீங்க என்ன சார் இங்க மறைந்திட்டு இருக்கீங்க என்று கேட்க அந்த பொண்ணு டார்ச்சர் பண்ணுது என்று சொல்கிறான், எழில் இதே கேள்வியை திருப்பி கேட்க சுடர் அந்த சதாசிவத்தை ஒரு நாள் அடிச்சிட்டேன், அவன் தான் தண்ணீர் ஊற்றி விட்டான் என்று சொல்கிறாள்.பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி வருகின்றனர்.

காரில் வரும் போது எழில் நீ தான் பசங்கள மாத்தின என்று பெருமையாக பேசி வர சுடர் ஒரு இடத்தில காரை நிறுத்த சொல்லி இறங்கி போய் ரிப்பேருக்கு கொடுத்திருந்த இந்துவின் போனை வாங்கி வந்து கொடுக்கிறாள். இதை பார்த்த எழில் எமோஷன் ஆகிறான், பிறகு சுடர் வீட்டிற்கு வர கனகவல்லி பசங்களுக்கு துணி எடுக்கணும், இதை வாங்கணும் அதை வாங்கணும் என்று லிஸ்ட் போட்டு கொண்டிருக்கிறாள்.

இதை பார்த்த சுடர் எதுக்கு இந்த லிஸ்ட் என்று கேட்க எப்போதும் இந்துவின் பிறந்த நாளை ஆசிரமத்தில் கொண்டாடுவது தான் வழக்கம், அவ போன பிறகு சரியாவே கொண்டாட முடியல என்று சொல்கிறாள். அவங்களுக்கு சமைக்க தான் லிஸ்ட் என்று சொல்கிறாள். சுடர் என் கையால் சமைக்கறேன் என்று சொல்ல கனகவல்லியும் ஓகே சொல்கிறாள்.

அடுத்து வேலு சுடர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டிற்குள் நுழைந்து தேடுகிறான். இப்படியான நிலையில் அது நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment