போதையில் ரொமான்ஸ் செய்யும் ஹீரோயின்: திருமணத்தை உறுதி செய்வாரா ஹீரோ?

ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Ni Toam

நினைத்தேன் வந்தாய்

மனோகரி செய்த சதி.. போதையில் எழிலுடன் ரொமான்ஸ்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி செய்த சதியால் சுடர் போதையில் தள்ளாடிய நிலையில் இன்று, சுடர் தள்ளாடியபடி வர இந்து அவளைப் பார்த்து என்னாச்சு என்று கேட்டு சரக்கடித்து இருப்பதாக சந்தேகப்படுகிறாள். அதைத் தொடர்ந்து சுடர் வீட்டுக்கு வர எதிரே ராமையா வருகிறார். வழக்கமாக இல்லாமல் சுடர் வேற மாதிரி நடந்து வருவதைப் பார்த்து என்னாச்சு என்று கேட்க சுடர் மீது சரக்கு வாடை வர குடித்து இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். 

Advertisment

சரக்கு அடிச்சியா என்று கேட்க ஒரு டம்ளர் குடிச்சேன் நல்லா இருந்தது அதனால இன்னொரு டம்ளர் குடிச்சிட்ட என்று சொல்கிறாள்.அதைத் தொடர்ந்து கனகவள்ளியும் அங்கு வந்து விட அவளும் இதே கேள்வியை கேட்க சுடர் அவளிடமும் ஒரு டம்ளர் குடிச்சேன் பிடித்திருந்தது அதனால இன்னொரு டம்ளர் குடிச்சிட்டேன் என்று சொல்கிறாள்.

பிறகு கனகவல்லி சுடரை கூட்டி போய் படுக்க வைக்க சொன்னதும் ராமையா அவளை மேலே அழைத்து வர அங்கே செல்வி இருக்க ராமையா செல்வியிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார். அதைத் தொடர்ந்து செல்வி மனோகரியிடம் சுடரை ஒப்படைக்க மனோகரி எழில் வந்ததும் அவனிடம் சுடரை கொஞ்சம் பார்த்துக்கோ என்று சொல்லி நழுவி கொள்ள எழில் சுடரை ரூமுக்குள்ள அழைத்து சென்று படுக்க வைக்கிறான். 

சுடர் நீங்க‌ எங்க போறீங்க நீங்களும் என் கூட தான் இருக்கணும் என்று புலம்பியபடி எழில் கையை பிடித்து இழுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: