திருமணத்தை நிறுத்திய ஹீரோ... கணவனுக்காக பூஜை செய்வாரா மனைவி? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடுகள் குறித்து பார்ப்போம்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடுகள் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna KP And NV

கார்த்திகை தீபம் - அண்ணா - நினைத்தேன் வந்தாய்

சண்முகத்தை தோற்கடிக்க பெண்ணை களம் இறக்கும் சௌந்தரபாண்டி.. ஜெயிக்கப் போவது யார்?

Advertisment

அண்ணா‌ சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி தன்னுடைய பிறந்தநாளில் சிலம்பம் போட்டி வைத்து அதற்கு தலைமை தாங்கி 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை கொடுக்க முடிவெடுக்க சண்முகம் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்ட நிலையில் இன்று, சௌந்தரபாண்டி பஞ்சாயத்தை கூட்டி செலவும் போட்டி நடத்தப் போவதை பற்றி சொல்லிக் கொண்டிருக்க அங்கு வரும் சண்முகம் பரிசு தொகையை யார் மூலமாக கொடுக்கப் போறீங்க என்று கேட்கிறான்.

இதன் காரணமாக கோபப்படும் சௌந்தரபாண்டி ஒரு கட்டத்தில் எம்எல்ஏ மூலமாகத்தான் கொடுக்கப் போவதாக சொன்ன சரி பணத்தை எண்ணி சரியா வையுங்கள் கள்ள நோட்டு இல்லாமல் நல்ல நோட்டா வையுங்க, ஜெயிக்க போறது நான்தான் என்று சொல்கிறான். இதை கேட்ட சௌந்தரபாண்டி சண்முகத்துடன் வாக்குவாதம் செய்ய வைகுண்டம் சௌந்தரபாண்டியன் சட்டையை பிடிக்க பிரச்சனை பரபரப்பாகிறது.

வைகுண்டம் நீ இந்த போட்டியில் கண்டிப்பா ஜெயிக்கணும் உன் அம்மாவைப் பத்தி தப்பா பேசணும்னு வாயடைக்க வைக்கணும் இல்லன்னா உன்னை கொன்னு போட்டு விடுவேன் என்று சண்முகத்துடன் சொல்லி விட்டு வருகிறார். வீட்டில் சொன்னது ஒரு பக்கம் ஃபேக்டரி செய்து கொண்டிருக்கிற மறுபக்கம் சௌந்தரபாண்டியன் சண்முகத்தை ஜெயிக்க விடக்கூடாது என புலம்பிக் கொண்டிருக்க பாக்கியமும் இசக்கியும் சண்முகம் தான் ஜெயிப்பான் என்று சொல்கின்றனர்.

Advertisment
Advertisements

இதனால் சௌந்தரபாண்டி இந்த சிலம்பாட்டத்தை பெண்கள் சிலம்பாட்டமாக மாற்ற ஒரு பெண்ணை வந்து சந்தித்து போட்டிக்கு கூப்பிட அவரும் வருவதாக வாக்கு கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடருக்கு தாலி கட்ட பொண்ணு வேலு.. கடைசி நொடியில் ட்விஸ்ட் கொடுத்த எழில்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் கேரி வேலு தமிழை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்த நிலையில் இன்று, எழில் ஓவியம் ஒன்றை வைத்து கவின் எதாவது இருக்க வேண்டும் என்று கண்டுபிடித்து அவர்களை மீட்டெடுக்கிறான். பிறகு இருவரும் தமிழ காப்பாற்றணும் தமிழ் இல்லாம வீட்டுக்கு போக கூடாது என்று சொல்கின்றனர்.

மறுபக்கம் தமிழுக்கு கல்யாணம் ஏற்பாடுகள் நடக்க எழில் கடைசி நொடியில் வந்து கல்யாணத்தை நிறுத்தி தமிழையும் காப்பாற்றுகிறான். அதன் பிறகு இவர்கள் எல்லோரும் நன்றாக சேர்ந்து ஹாஸ்பிடல் வருகின்றனர். மனோகரி சுடரை ஹாஸ்பிடல் போக விடமாட்டேன் என்று பிரச்சனை செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரியாவை சிக்க வைத்த தீபா.. ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு கையில் காயம் ஏற்பட அபிராமி பதறிய நிலையில் இன்று, வீட்டிற்கு வரும் ஜோசியர் ஆனந்த் உயிருக்கு ஆபத்து இருக்கு, அவருடைய மனைவி ரியா தான் பரிகாரம் பண்ணனும் என்று சொல்லி செல்ல ஆனந்த் அங்கிருந்து கிளம்பி சென்றதும் தீபா அபிராமியிடம் அந்த ஜோசியர் டூப் தான், நான் தான் வர சொன்னேன் என்று சொல்கிறாள்.

அதன் பிறகு ரியாவிடம் சென்று ஆனந்துக்காக பரிகாரம் பண்ணனும் என்று சொல்ல அவள் என்னால அதெல்லாம் பண்ண முடியாது என்று சொல்கிறாள். பிறகு ஆனந்தை கூப்பிட்டு உனக்காக பரிகாரம் பண்ண முடியாதுனு சொல்றாங்க என்று போட்டு கொடுத்து விடுகிறார்கள். மேலும் அபிராமி சரி விடுப்பா நான் மீனாட்சி கிட்ட சொல்றேன், உனக்காக அவ கண்டிப்பா பண்ணுவாள் என்று சொல்கிறாள்.

இதனை தொடர்ந்து ஆனந்த் அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல, எனக்காக ரியா பண்ணுவா என்று வாக்கு கொடுக்க வேறு வழியின்றி ரியா ஒப்பு கொள்கிறாள். அடுத்து ஐஸ்வர்யா ரியாவிடம் நீ ஒன்னும் கவலைப்படாத ஆனந்த் கோவிலுக்கு எல்லாம் வர மாட்டான், அங்க பரிகாரம் செய்ய முடியாதுனு சொல்லிடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். அடுத்து தீபா கார்த்திக்கு சாப்பாடு கொண்டு வர சிம்பிளாக வந்த அவளை பார்த்து செக்யூரிட்டி கார்த்திக் மனைவின்னு நம்ப முடியாமல் உள்ளே விட மறுக்க அருண் இதை பார்த்து தீபாவை உள்ளே அழைத்து செல்கிறான்.

 அடுத்து கார்த்திக் எல்லாருக்கும் தீபாவை அறிமுகம் செய்து வைத்து அவளை பாட்டு பாடவும் வைக்கிறான். அதே போல் கோவிலுக்கு வந்த ரியா கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சொல்ல தீபா ஆனந்தை கூப்பிட்டு நிற்க வைத்து ஷாக் கொடுக்கிறாள். இதனால் ரியா சிக்கி கொள்ள அவளை அங்கபிரதர்சனம் செய்ய வைத்து கையில் தீ சட்டியை கொடுக்க ரியா சூடு தாங்காமல் தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: