Advertisment

திருட்டு நகையை பாதுகாக்க துடிக்கும் மாமனார் : மருமகன் வழி விடுவாரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பாாக்கலாம்

author-image
WebDesk
New Update
zee ta

ஜீ தமிழ் சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நகைகளை இடம் மாற்ற தயாரான சௌந்தரபாண்டி.. போட்டு கொடுத்த இசக்கி

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணிக்கு நகை பற்றிய உண்மை தெரிந்து விட்டதால் சௌந்தரபாண்டி தூக்கம் வராமல் தவித்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டி ரூமுக்கு சென்று தூங்கி கொண்டிருக்கும் பாக்கியத்தை தட்டி தண்ணீர் கேட்க அவள் திட்ட சௌந்தரபாண்டி என்னடி என்னை திட்டுற என்று கேட்க, தூக்கத்தில் எழுப்பினா அப்படி தான் பேசுவேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி ரூமுக்கு செல்கிறார்.

மறுபக்கம் பரணி தூக்கத்தில் இருந்து எழுந்து சண்முகத்தை எழுப்பி என் அப்பா கண்டிப்பா அந்த நகைகளை இடம் மாத்துவாரு, அதுக்கு நாம விட கூடாது, அவரை லாக் பண்ணனும் என்று சொல்ல அந்த ரகசிய ரூம் பத்தி எனக்கு தெரியும் இப்போவே போலாமா என்று கேட்க சண்முகம் இப்போ வேணா காலையில் போகலாம் என்று சொல்லி படுத்து தூங்க சொல்கிறான்.

இங்கே முத்துபாண்டியை எழுப்பிய சௌந்தரபாண்டி அந்த நகைகளை என்ன செய்வது என்று கேட்க அவன் நாளைக்கே இடம் மாத்தி ஆகணும் என்று சொல்கிறான். இவர்கள் ஏதோ பேசுவதை இசக்கி கவனித்து விடுகிறாள். மறுநாள் பாண்டியம்மாவும் வீட்டிற்கு வருகிறாள், நீ உண்மையை சொன்னதும் பதறி போய் ஓடி வந்துட்டேன் என்று சொல்லி மூவரும் கூட்டு சேர்ந்து பேச இசக்கி இதையும் பார்த்து விடுகிறாள்.

மறுநாள் பரணிக்கு போனை போட்டு இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க என்று சொல்ல பரணி சண்முகத்திடம் விஷயத்தை சொல்கிறாள். அடுத்து பரணியும் சண்முகமும் கிளம்பி பைக்கில் வர மறுபக்கம் இவர்கள் பெட்டியை இடம் மாற்ற தயாராகுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மிஷினில் மாட்டிய புடவை.. ரம்யாவை காப்பாற்றிய சட்டையை கழட்டி கொடுத்த கார்த்திக்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பூஜையறையில் சீலிங் இடிந்து விழுந்து கருநாகம் இருக்க ஜோசியர் இந்த வீட்டில் கொஞ்ச நாளைக்கு யாரும் இருக்க கூடாது என்று சொல்லிய நிலையில் இன்று, அபிராமி ஜோசியர் இப்படி சொன்னதால் கொஞ்ச நாளைக்கு இந்த வீட்டில் இருக்க வேண்டாம், பழைய வீட்டிற்கு போகலாம், அந்த வீட்டை ரெடி பண்ண சொல்லுங்க என்று சொல்கிறாள். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா கொத்தனாரையும் பாம்பை விட்டவனையும் வர வைத்து சொன்ன வேலையை கச்சிதமா முடிச்சிடீங்க, இந்தாங்க பணம் என்று கொடுத்து அனுப்புகிறாள்.

மறுபக்கம் ரம்யா கார்த்திக் பெயரில் கிப்டாக வந்த புடவையை அணிந்து அப்பாவிடம் காட்டி சந்தோசப்படுகிறாள். பிறகு அதே புடவையில் கம்பெனிக்கு வந்து கார்த்திக் முன்னாடி நடந்து காட்டி சந்தோசப்பட கார்த்திக் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறான். பிறகு ரம்யா ரவுண்ட்ஸ் போகும் போது சேரி மிஷின் ஒன்றில் மாட்டி கொள்ள கார்த்திக் ரம்யாவை காப்பாற்றி அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டி கொடுக்கிறான். இதனால் ரம்யாவுக்கு கார்த்திக் மீது காதல் அதிகமாக அவள் அந்த சட்டையை முகர்ந்து பார்த்து சந்தோசப்படுகிறாள்.

பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர தீபா சட்டையை பற்றி கேட்க கார்த்திக் சொன்ன பதிலால் நீங்க எப்படி உங்க சட்டையை கழட்டி கொடுக்கலாம். ஒரு ஆம்பளையோட சட்டையை ஒன்னு தங்கச்சி போடணும், இல்லனா பொண்டாட்டி போடணும் என்று பொஸசிவ்வில் பேசி கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெரிபிகேஷன் கிளம்பிய சுடர்.. வீட்டுக்கு தெரியாமல் இந்து சமாதிக்கு வந்த குழந்தைகள்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் கனகவல்லி சுடரிடம் நாளைக்கு இந்துவோட நினைவு நாள் என்று சொல்லி வருத்தப்பட்ட நிலையில் இன்று, மறுநாள் காலையில் சுடர் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக கிளம்புகிறாள். கனகவல்லியிடம் சாரி மா என்னால இன்னைக்கு இங்க இருக்க முடியல என்று சொல்லி வருத்தப்பட அவள் நீ என்னமா பண்ணுவ, நீ நினைக்கிறதெல்லாம் நல்லபடியா நடக்கட்டும் என்று ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறாள். இதே நேரத்தில் ஹாலில் இந்துவின் போட்டோவிற்கு அலங்காரம் செய்து வைத்திருக்க சுடர் அதை பார்த்து விடுவாளோ என்ற பில்டப் எகிறுகிறது.

அடுத்து ரூமில் குழந்தைகள் நாலு பேரும் அம்மா இருந்து இருந்தா எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும், அம்மாவை பார்க்கணும் போலவே இருக்கு என்று பேசி கொள்ள கவின் அம்மாவை தான் பார்க்க முடியாது. ஆனால் அம்மா இருக்க இடத்துக்கு போக முடியும்ல என்று சொல்லி சமாதிக்கு போகலாம் என்று ஐடியா கொடுக்கிறான்.

வீட்ல யாருமே இல்லையே எப்படி போறது என்று எல்லாரும் கேள்வி கேட்க சமாதி இருக்க இடம் தான் நமக்கு தெரியுமே நாமளே போகலாம் என்று சொல்ல எல்லாரும் கீழே வர எழில் இந்துவை நினைத்து குடித்து கொண்டிருக்க கனகவல்லி பூஜையறையில் இருக்க குழந்தைகள் யாருக்கும் தெரியாமல் சமாதிக்கு கிளம்பி வருகின்றனர். சமாதிக்கு வந்த இவர்கள் அங்கே செடி எல்லாம் முளைத்து கிடப்பதை பார்த்து அதை சுத்தம் செய்ய தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment