Advertisment

தோழிக்கு எதிராக வில்லத்தனம் : அப்பாவுக்கு எதிராக மகளின் ஆக்ஷன் ; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
KD NV ANna

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

ஜூஸில் கலக்கப்பட்டது என்ன? கார்த்திக்கு தெரிய வரும் உண்மை

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா கார்த்திக்கிடம் பிசினஸ் விஷயமாக பெங்களூர் அழைத்திருந்த நிலையில் இன்று,ரம்யா கார்த்திக்கை பெங்களூருக்கு தன்னுடன் வர சொல்ல அவனும் சம்மதம் தெரிவிக்கிறான். அடுத்து அபிராமியும் மீனாட்சியும் தீபாவுக்கு அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் கோவிலுக்கு வந்த அவளுக்கு பதிலாக விளக்கு போட்டு ஏலம் விடப்படும் அம்மன் புடவையை வாங்கிட்டு போக வந்துள்ளனர்.

தீபாவுக்காக பரிகாரத்தை நான் செய்யலாமா என்று அபிராமி கேட்க அவளுடைய புருஷன் கார்த்திக் தான் செய்யணும் என்று சொல்கிறார். மறுபக்கம் கார்த்திக் தீபா குடித்த ஜூஸை லேப் டெஸ்ட்க்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் அதன் ரிசல்ட் குறித்து விசாரிக்க வந்திருக்க அதில் ஒரு மாத்திரை கலந்து இருந்ததும், அதை சாப்பிட்டால் கொஞ்சம் நேரத்திற்கு சைக்கோ போல் நடந்து கொள்வார்கள் என்பதையும் சொல்ல கார்த்திக் யார் இந்த வேலையை செய்திருப்பா என்று கன்பியூஸ் ஆகிறான்.

இதையெல்லாம் ரம்யாவும் மறைந்திருந்து பார்க்கிறாள், பிறகு கார்த்திக் அங்கிருந்து சென்றதும் ரிசப்ஷனில் இருப்பவருக்கு பணத்தை கொடுத்து நடந்தவற்றை தெரிந்து கொள்ள கார்த்திக் போனை இங்கேயே மறந்து வைத்திட்டு சென்றிருக்க அவன் திருப்பி வர ரம்யா மீண்டும் மறைந்து கொள்கிறாள். அதன் பிறகு அபிராமி கோவிலில் மீனாட்சியிடம் ரம்யாவோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க, நீ அவங்க வீட்டு அட்ரஸ் கேளு, நாம போய் பார்த்திட்டு வந்துடலாம் என்று சொல்ல மீனாட்சியும் அட்ரஸ் கேட்டு வாங்க இவர்கள் ரம்யா வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர்.

மறுபக்கம் ரம்யா கார்த்திக்கிடம் இருந்து மோதிரத்தை வாங்கியவனை வீட்டிற்கு அழைத்து பணத்தை கொடுத்து கார்த்திக்கு கொடுத்த மோதிரத்தை திரும்ப வாங்கி கொள்கிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சண்முகத்தை வெளியே கொண்டு வர வசமாக சிக்கிய ஆதாரம்.. ஆப்பு வைக்க தயாரான பரணி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி முத்துபாண்டியிடம் இன்னும் 1 மணி நேரத்தில் உன் காக்கி சட்டையை கழட்டி உட்கார வைக்கிறேன் என்று சவால் விட்டு வந்த நிலையில் இன்று, பரணி சவால் விட்டதை தொடர்ந்து முத்துப்பாண்டி உன்னால முடிந்ததை பார்த்துக்கோ டி என்று சொல்ல பரணி நடக்க போறதை பார்க்க தான டா போற என்று அங்கிருந்து வெளியே வருகிறாள்.

இதனையடுத்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு சென்று என் புருஷன் தேர்தல்ல நிற்க கூடாதுனு நீயும் பாண்டியம்மாவும் செய்த வேலையாக தான் இருக்கு என்பது எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் 1 மணி நேரத்தில் என் புருஷனை வெளியே கொண்டு வரேன், உன் புள்ளையை காக்கி சட்டையை கழட்ட வைத்து உட்கார வைக்கிறேன், என் புருஷனை தேர்தலில் நிற்க வைத்து உன்னை தோற்கடித்து உன் திருட்டு வேலையை எல்லாத்தையும் வெளியே கொண்டு வரேன் என்று சவால் விடுகிறாள்.

அதன் பிறகு நேராக தண்ணீர் டேக் அருகே வந்து ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று தேடி பார்க்க எதுவும் கிடைக்காத நிலையில் திடீரென அவளது கண்ணில் சிசிடிவி கேமரா ஒன்று தென்படுகிறது, இதனால் பரணி சந்தோஷமடைகிறாள், உடன் இருந்த சிவபாலனிடம் உன் மாமாவை வெளியே கொண்டு வர ஆதாரம் கிடைத்து விட்டது என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சவால் விட்டு சுடர்.. கூட்டு சேர்ந்து செல்வி, மனோகரி போடும் திட்டம்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் எழிலிடம் சவால் விட்ட நிலையில் இன்று, சுடர் குழந்தைகளை ஸ்கூல்ல நடக்கிற போட்டியில் கலந்துக்க வச்சு ஜெயிக்க வைக்கிறேன். உங்க பேரு குழந்தைகளால் காப்பாற்றுவேன் என்று சொல்கிறாள். இதை எடுத்து உனக்கு உறுதுணையா நான் இருக்கேன். குழந்தைகளை நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயிக்க வைக்கலாம் என்று சொல்கிறாள். இதை அடுத்து மனோகரி மற்றும் செல்வி இருவரும் கூட்டு சேர்ந்து இந்த போட்டியில் குழந்தைகளை தோற்க வைத்து சுடரை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று பிளான் போடுகின்றனர்.

அடுத்ததாக குழந்தைகள் எல்லோரும் எப்படி கேமில் கலந்து கொண்டு ஜெயிப்பதே இன்று பயத்தில் இருக்க சுடர் நான் காணாமல் போனபோது நீங்க தானே தைரியமா என்ன தேடி வந்தீங்க.. அப்படி இருக்கும் போது உங்களால கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று மோட்டிவேட் செய்கிறாள். இதைக் கேட்டு குழந்தைகளும் கண்டிப்பாக ஜெயித்து காட்டுவோம் என்று சவால் விட்டு மறுநாள் காலையில் ஸ்கூலில் போட்டிக்காக பெயர் கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment