Advertisment

அடியாட்களை அடித்து துரத்திய ஹீரோ... தோழியின் கணவனை காதலிக்கும் முதலாளி : எங்கே போய் முடியுமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tam

ஜீ தமிழ் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சண்முகத்தை காக்க வந்த முருகன்.. சர்வ நாசமான சௌந்தரபாண்டியின் திட்டம்

Advertisment

அண்ணா  சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடி இடுப்பில் இருந்து கத்தி கீழே விழ பரணி சண்முகம் பக்கத்தில் ஓடி வந்து உட்கார்ந்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று, ண்முகம் பரணியை பார்த்ததும் ஷாக்காகி நீ என்ன இங்கே என்று கேள்வி கேட்கிறான். அதன் பிறகு ரவுடிகள் இங்கே சண்முகத்தை போட்டு தள்ள தயாராகின்றனர். மறுபக்கம் சத்ரு யாகம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சண்முகத்தை பார்க்க வைகுண்டம் வீட்டிற்கு வந்த இசக்கியும் பாக்யமும் எப்படியாவது இந்த யாகத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவுடன் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அய்யர் நெய் கேட்க பாக்கியமும் இசக்கியும் சேர்ந்து நெய்க்கு பதிலாக பெட்ரோலை மாற்றி கொடுக்கின்றனர். அய்யர் நெய் என்று நினைத்து பெட்ரோலை ஊற்றியதும் யாகம் கொழுந்து விட்ட எரிய சௌந்தரபாண்டி தெறித்து ஓடுகிறார்.

அய்யர் எதிராளிக்கு கடவுள் அருள் அதிகம், அவனை ஒன்னும் பண்ண முடியாது என்று ஓடுகின்றனர். அதே போல் மறுபக்கம் ரவுடிகள் சண்முகத்தை குத்த சுற்றி வளைக்கின்றனர். இந்த நேரம் பார்த்து ட்ரைவர் சடர்ன் பிரேக் அடிக்க ரவுடிகள் பாய்ந்து போய் முன்னாடி விழுகின்றனர். பஸ்க்கு வெளியே முருகன் வேஷத்தில் 7 பேர் நின்று கொண்டிருக்க சண்முகம் ரவுடிகளை அடித்து துவைத்து துவம்சம் செய்கிறான்.

அடுத்து முத்துபாண்டிக்கு போனை போட்டு உன்னை அழிக்க நான் வரேன் டா என்று மரண பயத்தை காட்டுகிறான். தொடர்ந்து பரணியுடன் சண்முகம் ஸ்டேஷனுக்கு வருகிறான். பரணி இங்க எதுக்கு வந்த என்று கேட்க ஒரு முக்கியமான நபரை பார்க்க வந்ததாக சொல்கிறான். உள்ளே அழைத்து சென்று சூடாமணியை சந்திக்க வைத்ததும் பரணி அத்தையை கட்டிப்பிடித்து அழுகிறாள். சூடாமணி 20 வருடத்திற்கு முன்னாடி நடந்த கதையை சொல்ல தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்துவை மனோகரி போட்டு தள்ளியது எப்படி? உடையும் ரகசியம்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் வேலு எழிலுக்காக நீ யாரை வேணாலும் கொல்லுவனு எனக்கு தெரியும் என்று வேலு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, பிளாஷ்கட் ஓப்பனாக எழில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த மனோகரி மீண்டும் எழில் வீட்டிற்கு வருகிறாள். மனோகரியை பார்த்ததும் எழில் சந்தோஷப்படுகிறான்.

இவ்வளவு நாளா எங்க போய்ட்ட என்று கேட்டு விசாரிக்கிறான். பிறகு இந்து அவளுக்காக காபி போட போக பின்னாடியே சென்ற எழில் இந்துவுடன் கிச்சனில் வைத்து ரொமான்ஸ் செய்ய அதை பார்த்த மனோகரி கடுப்பாகிறாள். பிறகு எழில் மனோகரிடம் நான் ரொம்ப லக்கி எனக்கு பிடிச்ச மனைவியும் என் கூட இருக்கா, எப்பவும் என்னை புரிஞ்சிட்டு நடக்குற என் ப்ரண்ட் நீயும் என்கூட இருக்க, எப்பவும் என் கூடவே இரு என்று பேசி கொண்டிருக்க இந்து எழிலை கூப்பிட அவன் உள்ளே சென்று விடுகிறான்.

அதன் பிறகு மைண்ட் வாய்ஸில் இனிமே உன்னை விட்டு போகவே மாட்டேன் என்று சொல்லும் மனோகரி அடியாளுக்கு போனை போட்டு இந்துவை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறாள். மறுநாள் இந்துவுக்கு போன் கால் வருகிறது. அதில் ஆஸ்ரமத்தில் இருந்து பேசுவதாகவும் உங்க அப்பா அம்மா யாரு தெரிந்து விட்டது, நீங்க ஆசிரமத்துக்கு வாங்க என்று போனை வைக்கின்றனர்.

அம்மா அப்பா பற்றி தெரிந்து விட்டதாக கிடைத்த தகவலால் இந்து சந்தோசமாக கிளம்ப வீட்டில் யாரும் இல்லாமல் மனோகரி மட்டும் இருக்க அவளிடம் சொல்லி விட்டு கிளம்பியதும் இந்து செல்லும் காரை லாரி ஒன்று துரத்தி கொண்டே வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய ரம்யா.. கேமை தொடங்கும் ஐஸ்வர்யா

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா காதலனாக கார்த்தியை அறிமுகம் செய்ய தீபாவை ஃபேக்டரிக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் இன்று, ரம்யா தனது கேபினில் இருந்து தீபாவை கூப்பிட்டு அவன் தான் தன்னுடைய காதலன் என்று கார்த்தியை கை காட்ட தீபா பார்க்கும்போது கார்த்திக் அங்கே இல்லாமல் இருக்க வேறொருவனை பார்த்து ரம்யாவின் காதலன் என தப்பாக புரிந்து கொள்கிறாள்.

இதே நேரத்தில் செக்யூரிட்டிக்கு காசு கொடுத்து உள்ளே வந்திருந்த ஐஸ்வர்யா இங்கு நடப்பதை பார்த்து ரம்யா காதலிப்பது கார்த்தி தான் என்பதை புரிந்து கொள்கிறாள். உடனே இதை வைத்து நம்ம ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று ரியாவை சந்தித்து விஷயத்தை சொல்கிறாள். அடுத்ததாக ரம்யா ஒரு டெண்டர்காக பிஏவை கூப்பிட்டு ஒரு அமௌன்ட் சொல்லி அதை வைத்து கொட்டேஷன் ரெடி பண்ண சொல்கிறாள்.

அந்த பிஏ ஆனந்துக்கு போன் போட்டு இவ்வளவு அமௌன்ட் கொட்டேஷன் கொடுத்து இருக்காங்க நீங்க அதுக்கு ஏத்த மாதிரி பார்த்து பண்ணுங்க எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துடுங்க என்று சொல்கிறான். அதைத்தொடர்ந்து ரம்யா அவசர அவசரமாக கார்த்தியை கூப்பிட்டுக் கொண்டு டென்டருக்கு கிளம்ப கார் ஸ்டார்ட் ஆகாத நிலையில் கார்த்திக் பைக்ல போலாமா என்று கேட்டு இருவரும் பைக்கில் கிளம்பி செல்கின்றனர்.

இதைப் பார்த்த பெண் ஒருவர் தீபாவுக்கு போன் போட்டு கார்த்தி ஒரு பொண்ணோட செல்வதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment