Advertisment
Presenting Partner
Desktop GIF

திருடியை மடக்கி பிடித்த ஹீரோ: மனைவியை கண்டுபிடிப்பாரா நாயகன்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் கார்த்திகை தீபம், அண்ணா மற்றும் சந்தியா ராகம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
anna and Santhi

வசமாக சிக்கிய பாண்டியம்மா.. சூடாமணி டைரியால் தெரிய வந்த உண்மை - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா.சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா இசக்கியை அடிக்க திட்டம் போட்டு சிக்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். பாண்டியம்மா கிச்சனுக்குள் போர்வையை போத்தி கொண்டு நுழைய இசக்கி அது பாண்டியம்மா தான் என்பதை கண்டுபிடித்து விடுகிறாள்.

பின்னாடி வந்த சிவபாலன் திருடன் என நினைத்துக் கொண்டு முப்பிடாதிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல முத்துப்பாண்டி ஐயா இல்லாத நேரத்துல உங்க வீட்டுல திருடனா? அவன அப்படியே கண்ணு தெரியாத மாதிரி போர்வையை போட்டு புடிச்சு வையுங்க என சொல்ல சிவபாலன் போர்வையை போத்திக் கொண்டு பாண்டியம்மாவை மடக்கி பிடித்து அடித்து உட்கார வைக்கின்றனர். 

சண்முகம் வீட்டில் கேரளா ஸ்டேஷனில் இருந்து சண்முகம் வீட்டிற்கு வந்தவர்கள் சூடாமணி சம்பாதித்த பணம் உள்ளிட்டவற்றை கொடுத்து விட்டு சூடாமணி எழுதி வைத்த டைரி பண்ற எண் கொடுக்கின்றனர். அந்த டைரி மூலம் இசக்கிக்கு நாளைக்கு பிறந்தநாள் என்பது தெரிய வருகிறது.  பிறகு சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்த சண்முகம் நாளைக்கு உனக்கு பிறந்தநாள் மாப்பிள்ளையை கூட்டிகிட்டு வீட்டுக்கு வா என்று சொல்கின்றான்.

முத்துப்பாண்டி வேலை இருப்பதாக சொல்ல பாக்கியம் போயிட்டு வாடா என்று அவனை சம்மதிக்க வைக்கிறாள். மேலும் கல்யாணமாகி நாளைக்கு முதல் பிறந்தநாள் வருது அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடு என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவை நெருங்கி மீண்டும் மிஸ் பண்ண கார்த்திக்.. ஐஸ்வர்யாவின் திட்டத்தால் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோட்டில் கார்த்திக் மற்றும் அருண் தீபாவை தேடி கிளம்பி நிலையில் இன்று, சரஸ்வதி சபா கச்சேரிக்காக தீபா பாடுவதாக சொல்லி எல்லோருக்கும் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். அதன் மூலமாக தீபா குறித்த தகவல் கிடைக்கும் என நம்புகின்றனர். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என துங்காவுடன் சேர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறாள்.

இப்படி அருண், கார்த்திக் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு வரும்போது தீபா இருக்கும் ஆசிரமத்தை பார்த்து இங்க நாலு பேர் வந்துட்டு போவாங்க நோட்டீஸ் கொடுத்தா தீபா குறித்து விவரம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அருண் சொல்ல கார்த்திக்கும் நோட்டிஸ் கொடுப்பதற்காக கீழே இறங்கி உள்ளே செல்லும் போது போன் கால் வந்து விட அருண் உள்ளே சென்று நோட்டீஸ் கொடுக்கிறான். 
அருண் கொடுத்த நோட்டீஸ் பறந்து போய் தீபம் மற்றும் சக்தி இருக்கும் ரூமுக்குள் விட சக்தி அந்த நோட்டீசை பார்த்து விடுகிறாள். தீபாவை கண்டுபிடிக்க கார்த்திக் செய்த ஏற்பாடு தான் இது என வெளியே ஓடிவந்து பார்க்க அதற்குள் அருண் அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.

இதை வைத்து தீபா குறித்து கார்த்திக் சாருக்கு தகவல் கொடுக்கலாம் என முடிவெடுக்கும் சக்தி மேனேஜரிடம் கார்த்திக் நம்பர் குறித்து விசாரிக்க ஏற்கனவே துங்கா யாராவது கார்த்திக் நம்பர் கேட்டா என்னுடைய நம்பர் தான் கொடுக்கணும் என மிரட்டி வழிக்கு கொண்டு வந்த விஷயம் தெரிய வருகிறது. 
அடுத்து சத்தி வெளியில் முருகன் வீதி உலா வர சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க திடீரென துங்கா அங்கு வந்து நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாயா கொடுத்து பதிலடி.. கடுப்பான கார்த்தி, தரமான சம்பவம் செய்த கதிர் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி குடும்பத்தினர் நலங்கு வைக்க ரகுராம் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று, ஷாரு மற்றும் மாயா என இருவரும் ஒரே மாதிரி புடவை கட்டி இருப்பதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகின்றனர். சீனு இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல என்று கோபப்பட கதிர் சாருவை புடவை மாற்ற சொல்லிடலாம், பிரச்சனை முடிந்தது என்று சொல்கிறான்.

அதன் பிறகு சாருவை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயற்சிக்க மாயா புடவையில் என்ன இருக்கு சீனுவை கட்டிக்க போறது நான் தான் என்று பதிலடி கொடுக்கிறாள். அதன் பிறகு பார்வதி, பத்மா ஆகியோர் சாருவுக்கு தனியாக நலங்கு வைக்கின்றனர். அடுத்து கார்த்திக் கதிரை கூட்டிட்டு என்னமோ கல்யாணத்தை நிறுத்த நினைச்ச.. இப்போ சாரு நாங்க எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக்கிட்டு இருக்கா அவ எனக்கு பாதி பொண்டாட்டி ஆகிட்டா என்று அவனை வெறுப்பேற்ற முயற்சி செய்கிறான்.

கதிர் சாரு கட்டிக்கிட்டு இருக்கிறது நீ எடுத்துக் கொடுத்த புடவை இல்ல நான் எடுத்து கொடுத்த புடவை. நீ எடுத்து கொடுத்த புடவை இங்க இருக்கு என புடவை எடுத்துக்காட்ட கார்த்திக் ஷாக் ஆகிறான்.  இந்த சமயத்தில் அங்கு வந்த தனம் கதிரை வெறுப்பேற்றுவதாக நினைத்து கார்த்தியிடம் புடவை ரொம்ப நல்லா இருக்கு, இதை கட்டிட்டு இருக்கிறது நீங்களே என்னை கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு என்று சொல்ல கார்த்திக் கதிர் தனாவை கட்டிபிடித்து இருப்பது போல நினைத்து பார்க்கிறான்.

பிறகு கார்த்திக் தனாவின் புடவை பிடிக்க போக கதிர் என்ன பிரதர் உன்னோட புடவை பிடிக்க போறீங்க ஜூஸ் எடுத்துக்கோங்க என தடுத்து நிறுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment