Advertisment

அந்த பக்கம் ஏமாற்று வேலை... இங்கே சந்தேக புத்தி : நெகடீவ் பாதையில் ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்று வரும் சீரியல்களாக அண்ணா கார்த்திகை தீபம் சீதாராமன் உள்ளிட்ட சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil KD Anna SR

ஜீ தமிழ் சீரியல்கள்

அர்ச்சனாவுக்கு ஆப்பு.. செம ட்விஸ்ட் கொடுத்த ராம்.. அடுத்து என்ன?

Advertisment

சீதா ராமன் சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் ஷேரை அர்ச்சனாவுக்கு எழுதி கொடுக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்திருந்த நிலையில் இன்று, எல்லாரும் ஷேரை மாற்றி எழுத ஒன்று கூடி இருக்க வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கும் அர்ச்சனாவின் தங்கை கல்பனா உனக்காக கையெழுத்து போட கோல்ட் பேனா வாங்கி வந்திருக்கேன் என்று எடுத்து கொடுக்க அர்ச்சனா மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறாள்.

கடைசியில் செம ட்விஸ்ட்டாக ராம் பேனாவை வாங்கி சீதாவை கையெழுத்து போட சொல்லி கூப்பிட எல்லாரும் ஷாக் ஆகின்றனர், துரை உங்க பேரில் ரெடி பண்ண டாகுமெண்ட் இங்க இருக்கு என்று சொல்லி அதை கிழித்து போட ராம் சொன்ன காரணத்தால் சீதாவும் கையெழுத்து போட அர்ச்சனா கோபத்துடன் ரூமுக்கு சென்று விடுகிறாள்.

ரூமில் எனக்கு என்னவோ மகா மேலயே சந்தேகம் இருக்கு என எல்லாரும் ஒன்று சேர்ந்து பேசி கொண்டிருக்க மறுபக்கம் ராம், துரை, மீரா, சத்யன் ஆகியோர் சீதாவுக்கு ஷேர் வந்ததை நினைத்து சந்தோசமாக இருக்கின்றனர். பிறகு மகா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அர்ச்சனாவை சாமாதானப்படுத்தி எல்லாரையும் ஒன்று கூட்ட ராம் டீம் மீண்டும் அர்ச்சனாவை அவமானப்படுத்தி அனுப்புகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பரணிக்காக ஷண்முகம் எடுத்த முடிவு.. சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் நடக்க போவது என்ன?

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி மாடசாமியிடம் சண்முகம் தான் தனக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாக நினைத்து சண்டையிட்ட நிலையில் இன்று சண்முகம் மாடசாமி வீட்டிற்கு வந்து உனக்கு போன் பண்ணி நானா பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன் என்று சண்டையிட உன் பொண்டாட்டி கிட்ட நீ தான் பணம் கொடுக்க வேண்டான்னு நான் சொல்லல, இலவச ஹாஸ்பிடல் ஆரம்பித்தா அதுல எப்படி பணம் வரும், எனக்கு எப்படி பணம் கட்ட முடியும் அதனால் தான் கொடுக்கவில்லை என சொல்கிறார்.

பிறகு மாடசாமி சௌந்தரபாண்டிக்கு போன் செய்து சண்முகம் வந்து சண்டை போட்ட விஷயத்தை சொல்ல அவர் நான் சொல்ற மாதிரி செய் என்று ஏதோ சொல்ல மாடசாமி சண்முகத்தை கூப்பிட்டு உன் வீட்டு பாத்திரத்தை வேண்டும்னா எடுத்து வந்து கொடு பணம் தரேன் என்று சொல்ல சண்முகம் அவனிடம் கோபப்பட்டு வீட்டிற்கு வருகிறான். வீட்டில் பரணி பணம் கிடைக்கவில்லை என்பதால் சாப்பிடவே இல்லை என ரத்னா மூலமாக ஷண்முகத்திற்கு தெரிய வருகிறது.

உடனே அவன் வைகுண்டத்தை தனியாக அழைத்து சென்று பரணிக்கு பணத்தை ரெடி பண்ண வீட்டு பத்திரத்தை கேட்கிறான். உனக்கு இருக்கிறது இந்த வீடு ஒன்னு தான் என்று சொல்ல அதையெல்லாம் நான் பணத்தை சரியா கட்டிடுவேன் என்று சொல்ல வைகுண்டம் அந்த மாடசாமி கிட்ட மட்டும் வீட்டை வைக்க வேண்டாம் என்று சொல்கிறான். ஆனால் சண்முகம் இவன் கிட்ட வச்சா மட்டும் தான் பரணிக்கு சந்தேகம் வராது என்று சொல்கிறான்.

அதோடு பத்திரத்தை வாங்கி வந்து மாடசாமியிடம் கொடுத்து நான் வீட்டு பத்திரத்தை கொடுத்த விஷயம் பரணிக்கு தெரிய வேண்டாம் என்று சொல்லி கிளம்ப மாடசாமி பரணிக்கு பணத்தை கொடுக்க வீட்டிற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பல்லவியுடன் வீட்டிற்கு வந்த கார்த்திக்.. அபிராமி எடுத்த முடிவு

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவியாக ஒரு பெண் கார்த்திக்கிடம் அறிமுகமாக தீபா உண்மையை சொல்லாமல் மறைத்து விட்ட நிலையில் இன்று, தீபா ரூபஸ்ரீயிடம் அடுத்து என்ன செய்வது என பேசி விட்டு வீட்டிற்கு வர கார்த்திக் பல்லவியை கூட்டி கொண்டு வீட்டிற்கு வந்து எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான். இந்த பொண்ணு ஏற்கனவே நம்ம வீட்டிற்கு வந்து பாடி இருக்கா என்று சொல்ல அபிராமி என்னப்பா சொல்ற, இவங்களை நான் பார்த்ததே இல்லையே என்று கேள்வி எழுப்புகிறாள்.

உடனே கார்த்திக் ரூபஸ்ரீ உண்மையாக பாடகி கிடையாது, அவங்களுக்காக இவங்க தான் குரல் கொடுத்துட்டு இருந்தாங்க என்று நடந்த விஷயங்கள் அனைத்தும் சொல்ல அபிராமி, அருணாச்சலம் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். திரும்பவும் எதுக்கு இவங்களை இங்கே கூட்டிட்டு வந்த என்று கேட்க இவங்க தான் நமக்காக பாட போறாங்க, ரெக்கார்டிங் இருக்கு என்று சொல்ல அபிராமி எப்போ என்று கேட்கிறாள்.

கார்த்திக் நீங்களே நல்ல நாளா பார்த்து சொல்லுங்க என்று கேட்க புதன்கிழமை நல்ல நாள் தான் அன்னைக்கே வச்சிக்கலாம் என்று சொல்ல பல்லவி அதுக்கு ரெண்டு நாள் தான் இருக்கு, நான் ஊருக்கு போயிடு திரும்பி வருவது கஷ்டம், அதனால் எனக்கு தங்கிக்க இடம் ஏற்பாடு பண்ணி தாங்க, இந்த வீட்லயே கூட ஓரமாக இருந்துகிறேன் என்று சொல்கிறாள்.  ஆனால் கார்த்திக் ஹோட்டலில் ரூம் புக் பண்ணுவதாக சொல்ல அபிராமி வேண்டாம் இங்கயே தங்கட்டும் என்று சொல்லி விடுகிறாள்.

மேலும்  வீட்டில் ஒரு சிறிய பூஜை இருக்கு, அதுக்கு நீங்க தான் பாடணும் என பல்லவியை பாட சொல்கிறாள். அவளும் வேறு வழியின்றி பாட ஒப்பு கொள்கிறாள். பிறகு ஐஸ்வர்யா மற்றும் பல்லவி ரூமுக்குள் சந்திக்க நீ பெரிய ஆளா இருக்க என்று பல்லவியை பாராட்டுகிறாள். மேலும் நீ பாடும் போது கார்த்திக் இருக்க கூடாது அதுக்கு ஏதாவது பிளான் போடணும் என யோசித்து சிதம்பரத்துக்கு தகவல் கொடுக்கின்றனர்.

தீபாவும் மீனாட்சியும் நடப்பது புரியாமல் நிற்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment