Advertisment

மகாவின் கதை முடிவு... முத்துப்பாண்டி முடிவாரா? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதாராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
anna KD SR

ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதாராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

பல்லவியை கண்டுபிடிக்க கார்த்திக் எடுத்த முடிவு, பணத்தாசையில் வந்து சிக்கிய கோகிலா

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் அபிராமி குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட ஐஸ்வர்யா செய்த சதியால் தீபா கெட்ட பெயர் வாங்கிய நிலையில் இன்று, ஆபீஸில் சிதம்பரம் பல்லவி பற்றி உங்களுக்கு தெரிந்தாலே மன கஷ்டம் தான் இருக்கும் என கூறிய விஷயங்களை நினைத்து இன்னும் பத்து நாளில் பல்லவியை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறான் கார்த்திக்.

ஏற்கனவே சிதம்பரத்துக்கு சவால் விட்ட விஷயங்களை நினைத்து பார்க்கிறான். பிறகு இளையராஜா வர அவனிடம் கார்த்திக் எனக்கு தெரிஞ்சு பல்லவி எனக்கு பரிச்சயமான ஒருத்தவங்களா தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன், அதனாலதான் சிதம்பரம் அப்படி சொல்லி இருக்கார் என்று சொல்கிறான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஆசிரமத்தில் இருந்து சிஸ்டர்ஸ் சிலர் கார்த்திகை பார்க்க வருகின்றனர்.

பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் நடத்தி வருவதாகவும், இந்த ஆசிரமம் தொடங்கி 25 வருடம் ஆகிவிட்டது அதை கொண்டாடுவதற்கு ஒரு சில ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர். கார்த்திக் டொனேஷன் ஏதாவது வேண்டுமா என்று கேட்க, அவர்கள் பல்லவி பாடிய பாடல் குழந்தைகள் எல்லோருக்கும் ரொம்ப பிடித்து விட்டது அவர்களை வைத்து பாட வைத்தால் அவர்கள் இன்னும் சந்தோஷப்படுவார்கள் அதற்கான ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்கிறார்கள்.

இதை கேட்டு யோசிக்கும் கார்த்திக் பிறகு சம்மதம் தெரிவிக்கிறான். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது உணவுக்கான தலைமையில் தானே ஏற்றுக் கொள்வதாக சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறான். பிறகு பல்லவியை கண்டுபிடிக்க என்ன செய்வது என யோசிக்க, கார்த்திக் எனக்கு சவுண்ட் இன்ஜினியரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி அவரது வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். சவுண்ட் இன்ஜினியர் வீடு பூட்டப்பட்டு இருக்க பக்கத்து விசாரிக்க யாரோ 4 ரவுடிகள் வந்து அவர்களை அடித்து விட்டு சென்றதாகவும் ஹாஸ்பிடலில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதை கேட்டு, இருவரும் கிளம்பி ஹாஸ்பிடல் வருகின்றனர். சவுண்ட் இன்ஜினியர் மனைவியை சந்தித்து நடந்தவற்றை கேட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வருகின்றனர். பிறகு இளையராஜா ஒரு ஐடியாவை சொல்ல கார்த்தியும் அதற்கு சம்மதம் கூறுகிறான். அதைத்தொடர்ந்து ரூபஸ்ரீயின் பாட்டி கோகிலா நடந்து வரும்போது கீழே ஒரு நூறு ரூபாய் கிடைக்க அதை எடுத்து சந்தோஷப்படுகிறார் திரும்பவும் நடந்து வரும்போது கொஞ்சம் தூரத்தில் இன்னொரு 100 ரூபாய் நோட்டு கிடைக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சௌந்தரபாண்டியின் பிளானால் சண்முகத்துக்கு காத்திருக்கும் சிக்கல், பரணி செய்த வேலை

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி, பாக்கியம் கோவிலுக்கு வந்திருக்க பாண்டியம்மா சௌந்தரபாண்டி ஆகியோர் முத்துப்பாண்டி கல்யாணம் பற்றி பேச கல்யாணம் நடக்கப்போவது உண்மைதான் என நம்பி விடுகின்றனர். அடுத்ததாக கோவிலில் திண்ணையில் உட்கார்ந்து இருக்கும் ஒரு குழந்தை தவறி கீழே விழப் போக பரணி குழந்தையை தூக்க ஓடி வர பரணியை முந்திக்கொண்டு கவிதா வந்து காப்பாற்றி விடுகிறாள். முத்துப்பாண்டிக்காக பார்த்திருக்கும் பெண்தான் இந்த கவிதா என தெரிய வருகிறது.

கவிதாவை பார்த்ததும் முத்துப்பாண்டிக்கு பிடித்து போக முத்துப்பாண்டியை பார்த்ததும் கவிதாவுக்கு பிடித்து போகிறது. அதன்பின் கவிதா முத்து பாண்டியிடம் பேச ஆசைப்பட பாக்கியம் அவனை அனுப்பி விட முத்துப்பாண்டி ஹாய் சொல்ல கவிதா ஹலோ மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ என அவனை கலாய்க்கிறாள். அப்பா அம்மா இல்லாத கவிதாவுக்கு சாரைப்பாம்பு என்ற ஒரே ஒரு தாய் மாமா மட்டும்தான் இருக்கிறார். தட்டு மாத்த ஏற்பாடுகள் நடக்க சாரைப்பாம்பு இல்லாமல் இருக்க சௌந்தரபாண்டி அவர் வர மாட்டார் என்று சொல்ல பரணி அதெல்லாம் வருவார் என்று சொல்லி பாக்கியத்தை கூட்டிக்கொண்டு சண்முகம் வீட்டிற்கு வருகிறாள்.

சண்முகத்திடம் முத்துப்பாண்டிக்கு கல்யாணம் ஏற்பாடுகள் நடக்கிறது இந்த கல்யாணம் நடந்தால் அவன் ரத்னா பக்கம் திரும்ப வரமாட்டான் அதுக்காக நீங்க இந்த கல்யாணத்தை நடத்தி கொடுக்க வரணும் என வைகுண்டம் மற்றும் சண்முகத்தை கூப்பிட, சண்முகம் வர மறுக்கிறான். பிறகு முதல்ல இந்த கல்யாணம் உண்மையா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள நாம அங்க போகணும் என முடிவெடுத்து சண்முகம் தட்டு மாற்றும் இடத்திற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதாராமன்

சுட்டுத் தள்ளப்பட்ட மகா.. ராம் எடுத்த சபதம், சிக்க போவது யார்?

சீதாராமன் சீரியல் இன்று முதல் புதிய நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அர்ச்சனாவும் கல்பனாவும் சேர்ந்து மகாவை சுட்டுக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இன்று மகா இரவு நேரத்தில் ஹாலில் அங்கம் இங்குமாக நடந்து கொண்டிருக்கிறாள். இன்று சுபாஷ் ஏற்பாடு செய்த ஆள் ஒரு பக்கம், அர்ச்சனா ஒரு பக்கம், கல்பனா ஒரு பக்கம் என துப்பாக்கியுடன் மறைந்திருந்து மகாவை தாக்க ப்ளான் போடுகிறார்கள்.

திடீரென மகா குண்டடிப்பட்டு கீழே சரிந்து விழுந்து உயிரை விடுகிறாள். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. அர்ச்சனா கல்பனாவிற்கு ஃபோன் போட்டு நீ சொன்னா மாதிரியே செஞ்சிட்ட என்று சொல்ல, சுபாஷ் இங்கே தான் ஏற்பாடு செய்த ஆளை மகாவை சுட்டு தள்ளியதற்காக பாராட்ட யார் இந்த கொலையை செய்தது என குழப்பம் ஏற்படுகிறது.

பயிற்சிக்கு சென்று இருந்த ராம் வீடு திரும்பி மகாவுக்கு இறுதி சடங்குகளை செய்கிறான். அதுமட்டுமல்லாமல் சித்தியை கொண்டது யாராயிருந்தாலும் சும்மா விடமாட்டேன். கண்டிப்பாக தண்டனை வாங்கித் தருவேன் என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment