Advertisment

மீண்டும் கணவனை ஏமாற்றும் மனைவி... இந்த முறையாவது மாட்டுவாரா? ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Kd Ann

ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

உண்மையை மறைக்கும் காரத்திக், சிக்குவாளா தீபா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாட போகும் விஷயத்தை சொல்ல அவள் வேண்டாம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு என சொல்கிறாள். இதை கேட்ட தீபா இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடுக்க போவதாக சொல்ல கார்த்திக் அங்கு வந்து விட பேச்சை மாற்றி மழுப்பி விடுகின்றனர்.

இன்னொரு பக்கம் ரூபஸ்ரீ கோகிலா சிக்கி கொண்டதை நினைத்து உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாள். மறுபக்கம் கோகிலா ரவுகளிடம் தப்பிக்க ப்ளான் போட்டு பாத்ரூம் போகணும் கட்டை அவிழ்த்து விடுங்கடா என சொல்ல ரவுடிகள் முடியாது என மறுக்கின்றனர். அடுத்ததாக தீபா சாமி முன்னால் நின்று இந்த ஒருமுறை கார்த்திக்கு தெரியாமல் பாட போறேன், இந்த முறை மட்டும் அவர் கண்ணுல படாமல் காப்பாற்றிடு, பாடி முடிச்சதும் உண்மையை சொல்லிட போறேன் என வேண்டுகிறாள்.

அங்கு வரும் கார்த்திக் முக்கியமான விஷயம் காரணமாக வெளியே செல்வதாக சொல்ல, தீபா பூஜை செய்து ஆரத்தி காட்டி அனுப்பி வைக்கிறாள். கார்த்திக் தீபாவிடம் பல்லவியை கண்டுபிடிக்க செல்லும் விஷயத்தை மறைத்து வெளியே கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

ரத்னாவின் ரூட்டை கிளியர் செய்ய சண்முகம் கொடுத்த வாக்கு, அடுத்து நடக்கப் போவது என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் மற்றும் வைகுண்டம் கோவிலுக்கு வர பாக்கியம், சௌந்தர பாண்டியிடம் விஷயத்தை சொல்லி வரவேற்க கூப்பிட சௌந்தர பாண்டி வர மறுக்கிறார். இதனை தொடர்ந்து ரொம்ப ஓவராக பண்ணா சந்தேகமும் வந்து விடும் என எடுத்து சொல்லி முத்து பாண்டியும் பாண்டியம்மாவும் சௌந்தரபாண்டியை கூட்டி செல்கின்றனர்.

வேண்டா வெறுப்பாக இருவரையும் வரவேற்க சண்முகம் சிரித்த முகத்துடன் வரவேற்றால் தான் வருவோம் என அடம் பிடிக்கின்றனர். வேறு வழியின்றி சௌந்தரபாண்டி சிரித்து கொண்டே அவர்களை வரவேற்க இருவரும் கோவிலுக்குள் வருகின்றனர். கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் கவிதா சண்முகம் வந்ததும் அவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி தனக்கு அக்கா மாமாவை தவிர யாரும் இல்லை என சொல்கிறாள்.

அதை கேட்டு ஷண்முகம் இனிமே உனக்கு அண்ணனாக இருந்து இந்த கல்யாணத்தை நான் நடத்தி கொடுக்கிறேன் என வாக்கு கொடுக்கிறான். பிறகு தட்டு மாற்றுவதற்கான வேலைகள் நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீதா ராமன்:

விசாரணையை தொடங்கிய ராம்.. மகா கொலை கேஸில் மாட்ட போவது யார்?

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்று மகாவின் கொலை கேஸை கையில் எடுத்த நிலையில் இன்று, வீட்டுக்கு வரும் ராம் சித்தி கொலை கேஸில் எல்லார் மீதும் சந்தேகம் இருப்பதாகவும் ஒவ்வொருத்தரையாக விசாரிக்க போவதாக சொல்ல அர்ச்சனா மற்றும் சுபாஷ்க்கு பயம் உண்டாகிறது.

பிறகு ராம் தனது விசாரணையை வீட்டு சமையல்காரியான செல்வியிடம் இருந்து தொடங்குகிறான். செல்வியை தொடர்ந்து சேது, சுபாஷ் ஆகியோரை ரூமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகிறான்.  பிறகு சீதாவை வைத்தும் விசாரணை நடக்க ராம் அர்ச்சனா மீது அதிக சந்தேகத்துடன் ரூமுக்கு அழைக்க அர்ச்சனாவும் பயந்து கொண்டே உள்ளே சென்றாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment