Advertisment

கணவனிடம் மாட்டிக்கொண்ட மனைவி... மச்சான் மீது சந்தேகத்தில் மாமா : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Anna KD mkk

அண்ணா - சீதாராமன் - கார்த்திகை தீபம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

தீபா தான் பல்லவி என அறிந்த கார்த்திக்.. அடுத்து எடுத்த முடிவு என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியாக பாடுவதற்காக ஆசிரமத்துக்கு வந்து விட்ட நிலையில் இன்று கார்த்தியும் இளையராஜாவும் பல்லவி யார் என்பதை பார்ப்பதற்காக ஆசிரமத்துக்கு வந்து கொண்டிருக்க வழி மறிக்கும் ரவுடிகள் அவர்களை தாக்க இருவரும் மயங்கி விடுகின்றனர். பிறகு ரவுடிகள் ரூபாஸ்ரீக்கு தகவல் கொடுக்க அவள் பணத்தையும் போட்டு விடுகிறாள்.

ஆசிரமத்தில் தீபா படுவதற்காக தயாராக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கார்த்திக் கண் திறந்து ஆசிரமத்துக்கு கிளம்பி வருகிறான், கொட்டும் மழையில் ஒரு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் போது திடீர்ன்னு ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்க குடையை எடுத்து கொண்டு கார்த்திக் நடந்தே வருகிறான்.

ஆசிரமத்தில் தீபா பாட்டு பாடி கொண்டிருக்க கார்த்திக்கும் அங்கு வந்து விட குரலை கேட்டு பல்லவி தான் என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே வந்து பார்க்க பாடுவது தீபா என தெரிந்து அதிர்கிறான். நாம ரசித்த குரலுக்கு சொந்தக்காரி தனது மனைவி தான் என்பது அறிந்து சந்தோஷப்படுகிறான்.

பாடி முடித்து தீபா வீட்டிற்கு கிளம்ப கார்த்திக் தீபாவுக்கு நாம இங்கே வந்த விஷயம் தெரிய கூடாது என மறைந்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சௌந்தரபாண்டி போடும் அதிரடி பிளான்.. சண்முகத்திடம் பம்மிய முத்துப்பாண்டி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் உன் அண்ணன் பொண்ணுங்களை கூட்டிட்டு வா என்று சொல்லிய நிலையில் இன்று, கவிதாவும் பாக்கியமும் பரணியை கூப்பிட்டு கொண்டு செல்வதற்காக சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர். பரணியை கூப்பிடுவது மட்டுமின்றி சண்முகத்தின் நான்கு தங்கைகளையும் கூப்பிட சண்முகம் முதலில் தயங்குகிறான், இருப்பினும் அனுப்பி வைக்க முடிவெடுக்க கவிதா நீங்களும் வாங்க அண்ணே என்று சொல்ல எல்லாரும் சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர்.

சௌந்தரபாண்டி வீட்டில் அமோக வரவேற்பு கொடுக்க முத்துப்பாண்டி சண்முகத்திடம் தன்மையாக பேச சண்முகம் சந்தேப்படுகிறான், இப்போ தான் எனக்கு கல்யாணம் ஆக போதே, இன்னமும் எதுக்கு பகை என்று பேச சௌந்தரபாண்டி நாம நிறைய பாவம் பண்ணி இருக்கோம், எல்லாருக்கும் சேர்த்து புடவை எடுத்து கொடுக்கலாம் என்று சொல்கிறார்.

ஏற்கனவே புடவையுடன் வந்த கடைக்காரர் புடவைகளை காட்ட தொடங்க சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் எல்லாருக்கும் ஒரே மாதிரி புடவை எடுக்க சொல்லு. அப்போ தான் நம்ம பிளானை க்ரெக்கா நடத்த முடியும் என திட்டத்தை சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

அர்ச்சனா, சுபாஷ்க்கு வந்த மிரட்டல்.. ஜெயிலுக்குள் அடைக்கப்படும் சீதா

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவை கைது செய்த நிலையில் இன்று, ராம் சீதாவை கைது செய்து அழைத்து செல்ல அனைவரும் அதிர்ச்சியடைய உமா மயங்கி விழுகிறாள். அதன் தொடர்ச்சியாக ராம் சீதாவை ஜெயிலுக்குள் அடைக்க சீதா ராமுடனான நினைவுகளை நினைத்து பார்க்கிறாள். அதே போல் ராம் சீதா தனக்காக போலீஸ் ட்ரஸ் தைத்து கொடுத்தது, தனது கனவை அவளது கனவாக நினைத்தது போன்றவற்றை நினைத்து பார்த்து அவளையே கைது செய்ய வேண்டியதாகி விட்டது என வருந்துகிறான். 

வீட்டில் அர்ச்சனா சீதாவா மகாவை கொன்னா? அப்படினா கல்பனா எதுக்கு பணத்தை கேட்கிறாள் என குழப்பத்தில் இருக்க, கல்பனா போன் செய்து பணத்தை கேட்டு மிரட்டுகிறாள். இப்போ மகாவும் இல்ல அந்த சீதாவும் போய்ட்டா அப்புறம் என்ன பணத்தை சீக்கிரமா அனுப்பு. நான் எனக்கு ஒன்னும் கேட்கல என்று சொல்கிறாள். அதே போல் சுபாஷ் ரவுடிக்கு போன் செய்து மகாவை நீ கொல்லலயா என்று கேட்க அவன் நான் தான் கொன்னேன் என்று பணத்தை கேட்டு மிரட்டுகிறான். இதனால் இருவரும் குழப்பம் அடைகின்றனர்.

ஸ்டேஷனலில் ராமை போலீஸ் அதிகாரி ஒருவர் உங்க கடமையை சரியா செய்திருக்கீங்க என்று பாராட்ட சேது, துரை, சத்யன், சீதாவின் அப்பா ராஜசேகர் ஆகியோர் வந்து சீதா தப்பே பண்ணல என்று சொல்ல ஆதாரங்கள் எல்லாம் சீதாவுக்கு எதிராக தான் இருப்பதாக சொல்கிறான் ராம். சீதாவை ஜாமினில் வெளியே எடுப்போம் என்று சொல்ல ராம் ஒரு போதும் நான் அதை செய்ய விட மாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறான்.

ஜெயிலுக்குள் சீதா சாப்பிடாமல் இருக்க அந்த விஷயம் அறியும் ராம் உனக்காக இல்லனாலும் குழந்தைக்காக சாப்பிடு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment