Advertisment

லீக்கான மாஸ்டர் ப்ளான்... மனைவியை மன்னிக்காத கணவன் : ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகள் பெற்று வரும் அண்ணா சீதாராமன் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Serial Anna Kd Sr

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காப்பற்றப்படும் கனி.. தாய் மாமாவுக்கு தெரிய வரும் சௌந்தரபாண்டியின் ப்ளான்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனிக்கு நடந்த விஷயத்தால் பொண்ணு ராசி இல்லாதவள் என்று பேச தொடங்க தாய் மாமா இந்த கல்யாணம் நடக்காது என்று கவிதாவை அழைத்து கொண்டு கிளம்பிய நிலையில் இன்று, முத்துபாண்டிக்கும் கவிதாவின் தாய் மாமாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்ற சண்முகம் இடையில் புகுந்து இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும், கவிதா என்னுடைய தங்கச்சி. நான் இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி டீம் சந்தோசப்படுகின்றனர்.

இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி முத்துபாண்டியை கூப்பிட்டு தாலி கட்டும் நேரத்தில் சனியன் குண்டிலியம் பொடியை அக்னி குண்டத்தில் போடுவான், புகையாக கிளம்பும். இந்த நேரத்தில் ரத்னா கழுத்தில் தாலியை கட்டிடு என்று பிளானை சொல்ல இதை கவிதாவின் தாய் மாமா கேட்டு விடுகிறார். உடனே இந்த விஷயத்தை எல்லாரிடமும் சொல்கிறேன் என்று அவர் வெளியே வர சௌந்தரபாண்டி ஆட்கள் அவரை பிடித்து அடித்து சரக்கு ஊற்றி படுக்க வைத்து விடுகின்றனர்.

நைட் நேரத்தில் சண்முகம் தூக்கம் வராமல் உலாத்தி கொண்டிருக்க பரணி என்னாச்சு என்று கேட்கிறாள். சண்முகம் எனக்கு என்னவோ மனசு ஒரு மாதிரி இருக்கு என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விவாகரத்து செய்ய முடிவெடுத்த சீதா.. ராம் சொன்ன வார்த்தை

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலி, ப்ரியா, சத்யா ஆகியோர் சீதாவிடம் வந்து வம்பிழுக்க அவர் செய்த விஷயங்களை சொல்லி நான் திரும்பவும் கம்பளைண்ட்டை ஸ்டார்ட் பண்ணட்டுமா என ஷாக் கொடுத்த நிலையில் இன்று, சீதா ராஜசேகரை கூப்பிட்டு வைத்து பாஸ் பாவம் அப்பா, அவருக்காக ஒரு முடிவு எடுத்திருக்கேன். லாயரை வர சொல்லி இருக்கேன், அவர் வரும் போது நீங்க இருக்கணும் என சொல்கிறாள்.

பிறகு கொஞ்ச நேரத்தில் லாயர் வீட்டிற்கு வந்து டிவோர்ஸ் பேப்பரை எடுத்து கொடுக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். நான் கொலை செய்ததாக தீர்ப்பு வந்து விட்டால் பாஸோட சேர்ந்து வாழ முடியாது, அது அவருக்கும் நல்லது இல்ல. அதனால் நான் அவரை விவாகரத்து செய்ய போறேன். குழந்தையையும் பெத்து அவர் கிட்ட கொடுத்துடுவேன் என்று சொல்ல ஷாக் ஆகின்றனர். எல்லாரும் சீதாவுக்கு எடுத்து சொல்லியும் அவள் தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள்.

சத்யன் சேது சொன்னா மட்டும் தான் சீதா கேட்பாள். அவரை வைத்து சீதாவிடம் பேசுங்கள் என்று ஐடியா கொடுக்கிறான். இதனை தொடர்ந்து ராமுக்கு சீதா பால் கொண்டு வர ராம் அவளை கண்டு கொள்ளாமல் இருக்கிறான். இந்த நேரத்தில் சீதா விவாகரத்து பேப்பரை எடுத்து கொடுக்க ராமும் அதிர்ச்சி அடைகிறான். செய்த தப்புக்காக நீ தண்டனையை அனுபவச்சிட்டு வா, அதுவரைக்கும் உனக்காக நான் காத்திருப்பேன் என்று சொல்ல அது சரி வராது பாஸ்.

உங்க பேருக்கும் அது நல்லதாக இருக்காது என்று சொல்லி சீதா கண்ணீருடன் படுத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மன்னிக்க மறுக்கும் கார்த்திக்.. தீபா செய்ய போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பர்த் டே பங்க்ஷனில் தீபா தான் பல்லவி என்ற உண்மையை கார்த்திக் உடைக்க எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்று, கார்த்தி சொன்ன விஷயத்தை கேட்டு மீனாட்சி, அருணாச்சலம் ஆகியோர் சந்தோஷப்பட அபிராமி இவ்வளவு பெரிய உண்மையை மறைத்திருக்கனா நீ எவ்வளவு பெரிய கல் நெஞ்ச காரியா இருப்ப என கோபப்படுகிறாள்.

பிறகு கார்த்திக் தீபா தம்பிக்காக பாட ஒத்துக்கிட்டா. இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு பால அடிச்சு சத்தியம் செய்ததால் யார்கிட்டயும் சொல்லாம இருந்தா, அவளை நான் பெரிய பாடகி ஆக்குவேன் என்று சொல்கிறான். அதுமட்டுமின்றி நம்ம கம்பெனியில மட்டும் இல்லாம மத்த நிறைய கம்பெனிகள்ல தீபாவ பாட வைப்பேன் என்று சொல்ல அபிராமி நம்ப கம்பெனியில் பாடுனா போதாதா என்று கேட்க மற்றும் கம்பெனிகளில் பாடினால் தீபாவால் நம்ம குடும்பத்துக்கு தான் பெருமை என்று சொல்கிறான்.

இதைத்தொடர்ந்து தீபா கண்ணீருடன் ரூமுக்கு சென்று விட கார்த்திக் பின்னாடியே வர காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் தீபா. நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் இருந்தேன். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொல்லி இருந்ததும் இதைப் பற்றி சொல்ல தான் என்று கண் கலங்கி அழுகிறாள். மேலும் என்னை மன்னிச்சுடுங்க என்று காலில் விழ கார்த்திக் அது மட்டும் முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறான். மீனாட்சி என்னாச்சி கார்த்திக் என்ன சொன்னான் என்று கேட்க தீபா நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்படுகிறாள்.

அடுத்ததாக அபிராமி கல்யாணம் ஒன்றிற்கு ஐஸ்வர்யாவை கூட்டி செல்ல முடிவெடுக்க கார்த்திக் தீபாவை அழைத்து செல்லுங்கள், கல்யாண பெண்ணுக்கு எடுப்பதாக சொல்லியிருந்த புடவையை தீபாவே எடுக்கட்டும் என சொல்ல அபிராமியும் சம்மதம் தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment