மனைவியை பின் தொடரும் கணவன்... மச்சானை அழிக்க நினைக்கும் மாமன் : என்ன நடக்கிறது? ஜீதமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம் சீதாராமன் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம் சீதாராமன் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Anna KD mkk

அண்ணா - கார்திகை தீபம் - சீதாராமன்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பரணிக்குதெரியவந்தசௌந்தரபாண்டியின்சூழ்ச்சிகள்.. அடுத்துநடக்கபோவதுஎன்ன?

அண்ணா  சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துபாண்டியை கொல்ல போன சண்முகத்தை பரணி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் இன்று வீட்டுக்கு வந்த ஷண்முகம் இசக்கியிடம் அவனை கொல்லுற வரைக்கும் இந்த தாலி கழுத்திலே இருக்கட்டும் என கூறுகிறான். பிறகு பரணி சண்முகத்திடம் அன்பாக பேச முயற்சி செய்ய உன் அண்ணனை காப்பாத்த இப்படி செய்யாத என சண்முகம் கோபப்படுகிறான்.

Advertisment

என்ன இருந்தாலும் அவன கொல்லாமல் விட மாட்டேன் என்று புலம்ப பரணி ஊசி போட்டு அவனை தூங்க வைக்கிறாள். மறுபக்கம் சௌந்தரபாண்டி பாண்டியம்மா ஆகியோர் பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷயத்தை கனி மாத்தி குடிச்சிட்டா என்று பேசிக் கொண்டிருக்க, இதை சிவபாலன் கேட்டுவிட இதை இவர்கள் யாரோ ஒட்டு கேட்டு விட்டதாக உணர்கின்றனர். உடனே இந்த விஷயங்கள் வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும் அவன் யாருன்னு கண்டுபிடிச்சு கொன்னுடனும் என்று சொல்ல சிவபாலன் எஸ்கேப் ஆகிறான்.

அடுத்து மறுநாள் காலையில் பரணி வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருக்க அங்கு வந்த சிவபாலன் கனிக்கு இப்படி ஆனதற்கான காரணத்தை சொல்ல பரணி இந்த விஷயத்தை வேற யாரிடமும் சொல்லாத, நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி அனுப்புகிறாள்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெள்ளை புடவையால் வெடித்த பிரச்சனை.. அவமானப்பட்ட அபிராமி கொடுத்த அதிர்ச்சி

Advertisment
Advertisements

கார்த்திகை தீபம் இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று, இருவரும் கல்யாண வீட்டிற்கு வர அங்கிருந்தவர்கள் பகையை எதுவும் மனதில் வச்சிக்காமல் வந்திருக்கீங்க என்று வரவேற்று நலங்கு வைக்க சொல்ல இவர்களும் நலங்கு வைத்து அந்த பெண்ணிற்காக எடுத்த புடவையை கொடுக்க அதை வாங்கி பிரித்த கல்யாண பெண் வெள்ளை புடவையும் விபூதியும் இருப்பதை பார்த்து பயத்தில் கீழே போட்டு விட அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்

நீ பழைய பகையை மனசில் வச்சி தான் இப்படி கீழ்த்தரமான வேலை பண்ணிருக்க என்று அபிராமியை திட்டி வெளியே துரத்த, தீபா கண் கலங்கி நிற்கிறாள், அபிராமி நீ கோவிலில் விளக்கு போடலைனு திட்டினதுனால தான் இப்படி பண்ணி இருக்கே என்று தீபாவை திட்டுகிறாள், இனிமே நீ நான் குடிக்க தண்ணி கூட கொடுக்க கூடாது என்று ஆவேசப்படுகிறாள்.

இங்க நடந்த விஷயம் எதுவும் கார்த்திக்கு தெரியவும் கூடாது என கண்டிஷன் போடுகிறாள். னால், இங்கிருந்து இதை பார்த்த கார்த்தியின் பெரியம்மா ஒருவர் கார்த்திக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி எனக்கு என்னமோ தீபா மேல தப்பு இருக்க மாதிரி தெரியல, அபிராமியும் இப்படி செய்ய கூடிய ஆள் கிடையாது, ஏதோ தப்பா நடந்திருக்கு என்று சொல்ல நான் பார்த்துக்கறேன் என்று கார்த்திக் போனை வைக்கிறான்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அர்ச்சனாவை கொல்ல துணிந்த மர்ம கும்பல்.. சீதாவால் ராமுக்கு வந்த சந்தேகம்

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவிலில் வைத்து மர்ம நபர்கள் மகாவை சுட முயற்சி செய்த நிலையில் இன்று, மீராவும் சீதாவும் சேர்ந்து மகாவை காப்பாற்றி விட வீட்டிற்கு வரும் போலீஸ் ராமிடம் இது என்னவோ குடும்ப பகை மாதிரி இருக்கு, யாருனு கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கிறோம் என்று சொல்லி கிளம்பி செல்கின்றனர்.

இதனையடுத்து ராஜசேகர் அப்படினா அடுத்த டார்கெட் சேது தான் என்று சொல்ல ராம் அதிர்ச்சி அடைகிறான். அப்பாவை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என முடிவெடுத்து இரவெல்லாம் தூங்காமல் வெளியில் காவல் காக்கிறான், அடிக்கடி ரூமுக்குள் வந்து அப்பாவை கண் கணித்து கொண்டே இருக்கிறான்.

அதுமட்டுமின்றி சேதுவின் ரூமையும் மாற்றி கொண்டே இருக்கிறான். இந்த நிலையில் சீதா யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் தனியா வெளியே செல்ல ராம் இதனை பார்த்து விட்டு அவளை பின் தொடர்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: