Advertisment

திருமணத்திற்கு மீறிய உறவு... கட்டாய திருமணம் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil Kd Ann

ஜீ தமிழ் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பரணி கொடுத்த வார்னிங்.. நடுநடுங்கிய சௌந்தரபாண்டி, நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவபாலன் கனிக்கு இப்படி ஆனதற்கு சௌந்தரபாண்டியன் திட்டம் தான் காரணம் என்ற உண்மையை பரணியிடம் கூறிய நிலையில் இன்று, பரணி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சிவபாலனை அனுப்பி விட்டு நேராக வீட்டிற்கு வந்து பாண்டியம்மா முடியை பிடித்து இழுத்து நீ வந்ததுக்கு அப்புறம் தான் இவ்வளவு பிரச்சனை என்று ஆவேசப்படுகிறாள்.

சௌந்தரபாண்டி பரணியை தடுத்து நிறுத்த இவள், கனியை கொல்ல முயற்சி செய்தது நீங்க தான் என்ற விஷயம், சண்முகத்திற்கு தெரிந்தால் உங்க ஒருத்தனையும் உயிரோட விட மாடடான் என்று எச்சரித்து செல்கிறாள். இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி, பாண்டியம்மா ஆகியோர் பரணி சொல்றதும் சரி தான் என்று சொல்கிறார்கள், முத்துபாண்டியிடம் இப்போதைக்கு இசக்கியை நீ ஏத்துக்கறதா சொல்லு என்று சொல்கின்றனர்.

இங்கே சண்முகம் சாப்பிடாமல் இருக்க பரணி அவனை திட்டி சாப்பிட சொல்ல அவன் வேண்டாம் என்று மறுக்கிறான். இதனால் பரணி சரி நீ முத்துபாண்டியை கொன்னுட்டா உனக்கு என்ன அவார்டா தர போறாங்க, ஜெயில்ல தான் போடுவாங்க. அப்புறம் உன் 4 தங்கச்சிங்க நிலைமை என்ன என்று கேட்கிறாள். அப்போதும் சண்முகம் சாப்பிடாமல் இருக்க பரணி கனியை கை காட்டி ஆஸ்ப்பித்திரி வரைக்கும் போய்ட்டு வந்தவ, நீ சாப்பிடாமல் சாப்பிட மாட்டேனு பச்ச தண்ணி கூட குடிக்காமல் இருக்கா என்று சொன்னதும் சண்முகம் தங்கைகளுக்காக சாப்பிட மறுபக்கம் முத்துப்பாண்டி இசக்கியை ஏற்று கொள்ள முடிவு செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வசமாக வந்து சிக்கிய ஆனந்த்.. ஒரு பக்கம் கார்த்திக், மறுபக்கம் மீனாட்சி, நடக்க போவது என்ன?

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் கல்யாண வீட்டில் அபிராமி அவமானப்பட்ட விஷயத்தையும் புடவை மாறிய விஷயத்தையும் கார்த்தியின் பெரியம்மா போன் செய்து கூறிய நிலையில் இன்று, இந்த விஷயம் அறிந்து கார்த்திக் ஆபிசில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் ஆனந்த் காரை பார்க்க அதில் அவன் அந்த பெண்ணுடன் சென்று கொண்டிருக்கிறான், அந்த பெண் டிரஸ் எடுக்க வேண்டும் என்று அவனை ஒரு கடைக்கு அழைத்து செல்கிறாள்.

இதே கடைக்கு மீனாட்சியும் தனது கல்யாண நாளிற்காக துணி எடுக்க வந்திருக்கிறாள். அந்த பெண் ட்ரெஸ் எடுக்க ஆனந்தையும் கூப்பிட முதலில் தயங்கும் அவன் பிறகு கடைக்குள் வருகிறான். இங்கே மீனாட்சி அவனுக்காக ஒரு ஷர்ட் எடுத்து அதை போட்டோ எடுத்து அனுப்பி ஓகேவா என்று கேட்கிறாள், ஆனந்த் அதை பார்த்து ஓகே என்று சொல்ல இதே ட்ரெஸ்ஸை ஆனந்தத்துடன் வந்த பெண் எடுத்து விட அவளுக்கும் மீனாட்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

ஆனந்த் மீனாட்சி இங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான், இதனால் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்ய பின் தொடர்ந்து வந்த கார்த்திக் இந்த கடைக்குள் நுழைய ஆனந்த் மேலும் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ஆனந்த் கார்த்திக், மீனாட்சியிடம் சிக்கி கொள்வானா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதாவை சுற்றி வளைத்த ராம்.. அர்ச்சனாவை கொல்ல வந்தது யார்?

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ், அர்ச்சனா என அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களை கொல்ல சதிவேலை நடந்த நிலையில் இன்று, எதிரிகள் டீமின் அடுத்த குறி சேதுவாக இருக்கலாம் என்று ராம் இரவெல்லாம் தூங்காமல் வீட்டுக்கு வெளியே காவல் கிடக்கிறான், அடிக்கடி சேதுவின் ரூமுக்குள் வந்து கவனித்து கொள்ள சீதா யாருக்கும் தெரியாமல் நடு இரவில் கையில் ஒரு பேக்குடன் வெளியே செல்கிறாள்.

இதனை கவனித்த ராம் அவளை பின்தொடர்ந்து செல்கிறான், ஓரிடத்தில் சீதா யாரையோ ஒருவரை சந்தித்து அவரிடம் இந்த பையை கை மாற்ற ராம் இவர்களை சுற்றி வளைக்கிறான், அந்த பேக்கில் என்ன இருக்கிறது என்று கான்ஸ்டபிளை விட்டு செக் செய்ய பழம், பூ என பூஜைக்கு தேவையான பொருட்கள் மட்டும் தான் இருக்கின்றன. இருப்பினும் வீட்டிற்கு வந்த ராம் சீதாவை வளைத்து வளைத்து சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறான்.

இறுதியாக ராம், சீதா ரூமுக்குள் இருக்கும் போது சீதா நம்பிக்கை என்பது கூட இருக்கவங்கள மேல இருக்கனும் பாஸ், ஆதாரங்கள் மேலயும் கை ரேகை மேலயும் இருக்க கூடாது என கண்ணீருடன் பேசுகிறாள். மேலும் உங்க அம்மா தான் என் வயிற்றில் குழந்தையாக வந்து பிறக்க போறாங்க என்று கண்ணீருடன் சொல்ல ராமும் எமோஷன் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment