Advertisment

மாமனார் குடும்பத்தை காப்பாற்றும் மருமகன்... மாமியாரால் மருமகனுக்கு வரும் ஆபத்து : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, சீதாராமன் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Anna Serial KD SR

அண்ணா - சீதாராமன் - கார்த்திகை தீபம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தர்மலிங்கம் குடும்பத்தோடு வீட்டுக்கு வந்த கார்த்திக்.. ஐஸ்வர்யாவுக்கு விழுந்த அறை - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தர்மலிங்கம் குடும்பத்தை தனது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் இன்று, கார்த்திக் தர்மலிங்கம் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து இவங்க மகளுக்கு நகை வாங்குவதற்காக வீட்டை சேட்டு கிட்ட விற்குவிட்டார்கள். அதனால வீட்டை விட்டு காலி பண்ண சொல்லிட்டாரு இவங்களுடைய இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம். அதனால் தான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறான்.

உடனே ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து தர்மலிங்கம் குடும்பத்தை கண்டபடி பேசி அவமானப்படுத்துகின்றனர். எனக்கு தெரிஞ்சு கார்த்திக் தான் ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணி இருப்பான், நகை வாங்கி கொடுக்கவும் அவன் தான் கொடுத்திருப்பான். இவங்க எதுவும் செலவு பண்ணி இருக்க மாட்டாங்க என்று பேசுகின்றனர்.

ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா கார்த்திக் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி? ஒரு வேலை பண்ணுங்க செத்த மூணா பிரிச்சு கொடுத்துடுங்க என்று சொல்ல, அபிராமி உச்சகட்ட டென்ஷன் ஆகி ஐஸ்வர்யாவை அடித்து விடுகிறார். இப்படியான நிலையில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வயசுக்கு வந்த கனி.. சண்முகத்துக்கு பிபி ஏற்றிய சௌந்தரபாண்டி, நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாண்டியம்மா மற்றும் முத்துப்பாண்டி என மூவரும் சேர்ந்து சண்முகத்தின் குடும்பத்தை பிரிக்கணும் என திட்டம் போட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கனி அவளை விட்டுவிடுகிறேன் என்று சொன்னீங்க அவ அண்ணனை காட்டிக் கொடுக்கல, அவ அந்தக் குடும்பத்தோடவே இருக்கக் கூடாது என பிளான் போடுகின்றனர்.

மறுபக்கம் சண்முகம் கடையில் இருக்க பரணி போன் செய்து உடனே என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று சொல்ல என்னால வர முடியாது என்று சொல்ல பரணி நீ இப்ப வந்தே ஆகணும் என்று கோபப்பட சண்முகம் கிளம்பிச் செல்லும்போது ஒருவர் வந்து கல்யாணம் என பத்திரிக்கை கொடுக்க, சண்முகம் கல்யாணமெல்லாம் பண்ணாத வாழ்க்கை நல்லா இருக்காது என அட்வைஸ் செய்துவிட்டு செல்கிறான்.

பரணியை பிக்கப் செய்து கொண்டு மெதுவாக வண்டியை ஓட்ட பரணி வேகமாக போ என்று சொல்ல சண்முகம் அவ்வளவுதான் போக முடியும் என்று சொல்ல கனி வயித்துக்கு வந்துட்டா என்ற விஷயத்தை கூறுகிறாள் பரணி. இந்தச் செய்தியை கேட்டு உச்சகட்ட சந்தோஷமடையும் சண்முகம் கனி எப்போதும் என் கூடவே இருக்கணும் கல்யாணம் ஆனாலும் அவள் என் கூடவே இருக்கணும் என்று முருகனை வேண்டிக்கொள்கிறான்.

இதை கேட்டு, பரணி, இப்போ உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் உன்கூட தான் இருக்கேன் அப்படித்தான் கனியும் அவ மாமியார் வீட்டுக்கு போவா.. கனி உன் கூடவே இருக்கணும்னா நான் என் அம்மா வீட்டுக்கு போயிடவா என்று பரணி கேட்க நீ சரினு சொல்லு இப்பவே நான் கூட்டிட்டு போய் விடுகிறேன் என்று சொல்ல பரணி கோபப்படுகிறாள். பிறகு பரணி வேகமா போ என்று சொல்ல சண்முகம் வீட்டுக்கு வந்து கனியை பார்க்க செல்கிறான்.

பரணி அவனைத் தடுத்து நிறுத்தி நீ எங்க போற இங்கேயே இரு என்று வெளியே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்று கனியை பார்த்து ஆசீர்வாதம் செய்து சந்தோஷப்படுகிறாள். உடனே பாக்கியத்துக்கு தகவல் கொடுக்க அவளை சந்தோஷப்பட பக்கத்தில் இருந்து இதை கேட்ட இசக்கியும் மிகுந்த சந்தோஷப்படுகிறாள். பாக்கியம் கனிக்கு பச்சை முட்டை உடைத்து கொடுங்க, புது துணி எடுத்துட்டு வரேன் என்று கிளம்ப இசக்கி நானும் வரேன் என்று சொல்கிறாள்.

பாக்கியம் சரிபா நடக்கிறத பாத்துக்கலாம் என்று சொல்லி சிவபாலனை ஆட்டோ பிடிக்க சொல்கிறாள். ஆட்டோ பிடிக்க ஓடிவரும் சிவபாலன் சௌந்தரபாண்டியை இடித்து தள்ளி ஓட எங்க இவ்வளவு வேகமா போற என்று கேட்க கனி வயசுக்கு வந்த விஷயத்தை சொல்கிறான். பாக்கியம் மற்றும் இசக்கி இருவரும் கிளம்பி வெளியே வர சௌந்தரபாண்டி நீங்க போகக்கூடாது என தடுக்க நாங்க போவோம் என சண்டை போட்டு பாக்கியம் கிளம்பி வருகிறாள். உடனே பாண்டியம்மா உன் பொண்டாட்டி உன்னை மதிக்கிறது கிடையாது என சௌந்தரபாண்டியை ஏற்றிவிட அவர் சண்முகத்துக்கு போன் போட்டு மரியாதை இல்லாமல் பேசி அவரை கோபத்திற்கு கொண்டு செல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதாவுக்கு வந்த சிக்கல்‌‌.. சுபாஷ் அர்ச்சனாவை போட்டுக் கொடுத்த பெண்கள்

சீதாராமன் சீரியலை நேற்றைய எபிசோடில் நான்சி திட்டத்தின் படி போலீஸ் எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் பெண்களை கைது செய்த நிலையில் இன்று, சீதா நான்சியை பார்த்து பயம் வந்திருச்சா என்று கேட்க நான்சி ஜெயிக்க போறது யாரு தோற்கப் போவது யாருன்னு பார்க்கலாம் என்று சவால் விடுகிறாள். இதனால் சீதாவுக்கு லைட்டாக சந்தேகம் வருகிறது.

உடனே துரைக்கு போன் போட்டு அங்கே எல்லாம் சரியா நடக்குதா என்று கேட்க அவரும் எல்லாம் நல்லபடியா நடக்குது என்று சொல்ல சீதா அமைதியாகி விடுகிறாள். மறுபக்கம் ஸ்டேஷனில் பெண்களிடம் இருந்து போனை புடுங்கி வைக்கின்றனர். லேடி இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபில் இடம் பணத்தை கொடுத்து வீட்டில் கொண்டு போய் கொடுக்க சொல்ல லேட் ஆகிவிட்டது என்ற காரணத்தினால் நாளைக்கு கொடுத்துக்கலாம் என்று வீட்டிலேயே வைக்கிறார்.

மறுநாள் காலையில் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்கு வராத காரணத்தினால் சீதா ஷாக் ஆகிறாள். நான்சியிடம் கேட்க எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறார். பிறகு ராம் வந்ததும் விஷயத்தை சொல்ல ராமும் நான்சியிடம் விசாரிக்க எனக்கு தெரியாது என்று சொல்கிறாள். அதன் பிறகு அர்ச்சனா சுபாஷை விசாரிக்க மூன்று பெண்களின் அவங்களே பிச்சைக்கார வேஷம் போட்டு உங்களுக்காக கோவில்ல வேண்டிக்கிட்டாங்க என்று சொன்னதும் ராம் மற்றும் சீதாவுக்கு சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment