Advertisment

தங்கையை பார்க்க வரும் அக்கா... மருமகளை வீழத்திய மகிழ்ச்சியில் மாமியார் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Serial

ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

தீபா வைத்த ட்விஸ்ட்.. ரியா கழுத்தில் தாலி கட்டிய ஆனந்த்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பிரியா ஆனந்த் பேன் ரிஜிஸ்டர் ஆபீஸ் இருந்த நிலையில் இன்று, தீபா கார்த்திக்கு தொடர்ந்து போன் செய்ய போன் எடுக்காமல் இருக்க பிறகு கார்த்திக் மீட்டிங் முடிந்தது போனை எடுத்து தீபாவுக்கு கால் பண்ணுகிறான். அப்போது தீபா, ரியா ஆனந்த்துடன் ரெஜிஸ்டர் ஆஃபீஸில் இருக்கு விஷயத்தை சொல்ல கார்த்தி நீங்க கல்யாணத்தை நிறுத்துங்கள் நான் கிளம்பி வரேன் என்று சொல்கிறான்.

பிறகு தீபா ரெஜிஸ்டரை சந்தித்து ஆனந்த் ஏற்கனவே திருமணமானவர் என்ற விஷயத்தை உடைக்க ரெஜிஸ்டர் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது என சொல்லி ஆபீஸில் வேலை செய்யும் ஆபீஸ் பாயையும் திட்டுகிறார். இதை இடத்தில் ஆனந்த் மற்றும் ரியா இங்க முடியாதுனா எங்களால கல்யாணம் பண்ண முடியாதா? கோவிலில் கல்யாண மண்டபம் என சொல்லி கிளம்பி செல்கின்றனர்.

பிறகு கார்த்திக் வந்ததும் தீபா நடந்த விஷயத்தை சொல்ல இருவரும் சேர்ந்து கோவில் கோவிலாக தேடுகின்றனர். இறுதியாக ஒரு கோவிலில் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி கட்டி நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சண்முகம் வீட்டிற்குள் நுழைந்த பாக்கியம், இசக்கி.. தேடி வந்த முத்துப்பாண்டி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோட்டில் பாக்கியமும் இசக்கியும் கனியை பார்ப்பதற்காக கிளம்பி வந்த நிலையில் இன்று, வீட்டுக்கு வந்த முத்துப்பாண்டி பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் இல்லாமல் இருப்பதை பார்த்து சௌந்தர பாண்டியிடம் கேட்க, அவங்க சண்முகம் அவமானப்படுத்தி அனுப்புனதில் மனசு உடைந்து கோயிலுக்கு போய் இருப்பாங்க என்று சொல்கிறான். முத்துப்பாண்டி இல்ல அவங்க அங்க திரும்ப போய் இருக்க வாய்ப்பு இருக்கு என்ன சொல்ல சௌந்தரபாண்டி சரி நீ போய் பாரு என சொல்கிறார்.

மறுபக்கம் பாக்கியமும் இசக்கியும் யாருக்கும் தெரியாமல் பின்பக்கமாக சண்முகம் வீட்டிற்குள் வந்து கனியை பார்த்து கொஞ்சுகின்றனர். அடுத்ததாக முத்துப்பாண்டி வர எதிரே வரும் சண்முகம் அவனைப் பார்த்து எங்கு வந்த என்று கேட்க என் அம்மாவும் இசக்கியும் இங்கதான் இருக்காங்க என்று சொல்கிறான். அவங்க இங்கு இல்லை என சண்முகம் சொல்லி வீட்டிற்கு அழைத்து வர இதைப் பார்த்து பரணி இருவரையும் கனி இருக்கும் குடிசைக்குள் மறைத்து வைக்கிறாள்.

பாரு இங்க அவங்க யாருமில்லை என்று சண்முகம் முத்துப்பாண்டியை திட்டி அனுப்ப வீட்டுக்கு வந்த அவன் அங்க அவங்க இல்லை என சொல்கிறான். அதே சமயம் ரத்னா மற்றும் வெங்கடேஷ் அன்னோன்யமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பயங்கர கடுப்பா இருந்தது எனக்கு கிடைக்காதுனா நான் யாருக்கும் கிடைக்கக்கூடாது என சொல்ல சௌந்தரபாண்டி சரி அதுக்கு ஒரு வழியை பண்ணிடலாம் என கூறுகிறார்.

அதன் பிறகு பாக்கியமும் இசக்கியும் வீட்டுக்கு வர எங்க போயிட்டு வரீங்க என்று கேட்க கனிக்கு ஜாதகம் பார்க்க போனதாக சொல்லி சமாளிக்கின்றனர். அவன்தான் உங்களை மதிக்கிறது இல்லயே அப்புறம் எதுக்கு இந்த வேலை என்று கேட்க நான் அப்படித்தான் பண்ணுவேன் என பதிலடி கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து சண்முகம் கனிக்கு பிடித்த ஸ்வீட்டை வாங்கி வர கனி அண்ணனை பார்க்க வெக்கப்படுகிறாள்.

சண்முகம் அண்ணன் கிட்ட என்ன வெட்கம் என்ன சொன்னது வெளியே வந்து சண்முகத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

ஜெயித்த கர்வத்தில் நான்சி.. ஷாக் கொடுத்த மகளிர் குழு பெண்கள்

சீதாராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் போலீஸ் கைது செய்த பெண்கள் அனைவரையும் வெளியே கொண்டு வந்த நிலையில் இன்று அவர்கள் சீதாவை சந்தித்து இனிமே எங்களால உங்களுக்கு உதவ முடியாது என கிளம்பிச் செல்ல, அதைப்பார்த்து நான்சி சந்தோஷப்படுகிறாள். என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் சீதா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாள்.

மகளிர் குழு பெண்கள் கிளம்பிச் செல்லும் போது வழியில் கண் தெரியாத ஒரு பாட்டியை சந்திக்க பரிதாபப்பட்டு அவரிடம் உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்க அந்த பாட்டி என் பேரனோட வந்தேன் ஆனா அவன் என்ன நம்ப வச்சு நடுரோட்டில் விட்டு போயிட்டான் என கண்ணீர் விடுகிறார். சீதாவுக்கு நாம இதே துரோகம் தான் பண்ணி இருக்கோம் என உணரும் மகளிர் பெண்கள் மீண்டும் சீதா வீட்டுக்கு வருகின்றனர்.

அங்கு நாங்க சொன்னா மாதிரி வேலையை செய்து முடித்து தருகிறோம் என வாக்கு கொடுக்க சீதா சந்தோஷமடைகிறாள். பிறகு சேது துரை ஆகியோர் ஸ்டேஷனுக்கு வந்து ஜெயிலில் இருக்கும் சுபாஷ் மற்றும் அர்ச்சனாவை சந்தித்து இனிமே என் முகத்திலேயே முழிக்காதீங்க வீட்டுக்கு வராதீங்க என சொல்கிறார். ராம் தங்கச்சிங்களுக்காக இவங்கள மன்னிச்சிடுங்க என்று சொல்ல சேது இருவரையும் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார்.

இவர்கள் டல்லாக இருப்பதை பார்த்து மகள்கள் மூன்று பேரும் என்னாச்சு என்று கேட்க வேலை செஞ்சுட்டு வராங்க என்று சமாளிக்கின்றனர். மறுபக்கம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைகள் விறுவிறுப்பாக நடக்க சுபாஷ் அர்ச்சனா எல்லாமே முடிஞ்சு போச்சு இனி என்ன செய்வது என கேட்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment