Advertisment

உச்சக்கட்டத்தில் சதி வேலை... அறியா பிள்ளையாக ஹீரோ : அண்ணா இன்று என்ன செய்வார்?

ஜீ தமிழின் அண்ணா சீரியலின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna serial

அண்ணா சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அண்ணா சீரியலின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில், எல்லோரும் அமர்ந்து சேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். முத்துப்பாண்டி எதிரில் உட்கார்ந்து ரத்னாவையே பார்க்கிறான். மற்றவர்கள் பார்க்கும்போது கவிதாவை பார்க்கிறான் கவிதா வெட்கப்படுகிறாள். கவிதாவை மட்டுமே முத்துப்பாண்டி பார்ப்பதாக எல்லோரும் நினைத்து ரகசியமாக பேசி சிரித்து கொள்கின்றனர். அதை கவனித்த சௌந்தரபாண்டியன் முத்துப்பாண்டியை தனியாக அழைத்து முட்டாப்பயலே ரத்னாவ பாத்து ஜொல்லுவிட்டு காட்டிகுடுத்துடாத என்கிறார்.

Advertisment

பாத்தா என்னப்பா என்கிறான். உன்ன யார்டா இன்ஸ்பெக்டர் வேலைக்கு எடுத்தது என்று திட்டி கவிதாவை தனியா அழச்சு எல்லாருக்கும் ஒரே கலர்ல ஒரே மாதிரி பட்டு புடவை எடுக்க சொல்லு என்று சொல்ல, அப்பா ரத்னாவுக்கு மட்டும் கொஞ்சம் விலை அதிகமா நல்லதா எடுத்துக்கலாம் என்கிறான் முத்துப்பாண்டி. லூசு பயலே எல்லாரும் ஒரே சேலையில் இருந்தாதானே தாலி கட்டும்போது மாத்தி கட்ட வசதியா இருக்கும் புரியுதா என்று சொல்லி போ போயி அந்த கிறுக்கி கவிதாவ அழச்சு சொல்லு என்கிறார்.

முத்துப்பாண்டி கவிதாவை பார்த்து சிரித்து லேசாக ஜாடை காட்டி செல்ல கவிதாவும் எழுந்து செல்கிறாள். எல்லோரும் கவனித்து சிரித்து கொள்கின்றனர். தனியாக வந்த கவிதாவிடம் இங்க பாரு உனக்கு காஸ்ட்லியாவும் மத்தவங்களுக்கு கம்மியாவும் சேலை எடுத்தா நல்லா இருக்காது. பரணிக்கும் உனக்கு நல்ல காஸ்ட்லியா இருக்கணும். அப்படி எடுத்தா அவங்க சங்கடப்படுவாங்க. அதனால எல்லாருக்கும் ஒரே மாதிரி புடவையா ஒரே கலர்ல எடுத்துக்குங்க புரியுதா என்று சொல்கிறான்.

இதை கேட்ட கவிதா, மாமா நீங்க ரொம்ப நல்லவர் மாமா என்கிறாள். போகப்போக தெரியும் எந்தளவுக்கு நல்லவருன்னு என்று முத்து பாண்டி சொல்ல, ஸோ ஸ்வீட் மாமா என்று சொல்லி செல்கிறாள். புடவையை எடுத்து கவிதா சோல்டரில் வைத்து முத்துப்பாண்டியை பார்க்க நல்லா இல்லை என்கிறான். ஒவ்வொன்றாக எடுத்து பார்க்க நல்லா இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தவன், ஒரு சேலையை ரத்னா எடுத்து கவிதா சோல்டரில் வைத்து பார்க்க சூப்பர் என்கிறான்.

இந்த புடவைதா எனக்கு பிடிச்சிருக்கு இதே மாதிரி எல்லாருக்கும் குடுங்க என்கிறாள் கவிதா. கல்யாணம் பொண்ணு நீ தான் நாங்க இல்ல என்கிறாள் பரணி. அப்படி எல்லாம் பிரிச்சு பாக்க முடியாது எல்லாருக்கும் ஒரே மாதிரி எடுத்தா எடுங்க இல்லாட்டி எனக்கு பட்டு புடவை வேண்டாம் என்று சொல்லி முத்து பாண்டியை பார்க்க சூப்பர் என்கிறான். சொல்லி பார்க்கின்றனர் கவிதா எதையும் கேட்பதாக இல்லை.

ஒரே மாதிரி ஒரே விலையில் ஒரே கலர்ல எடுக்கணும் இல்லன்னா எனக்கு சேலையை வேண்டாம் நா பழைய சேலை கட்டிக்கிறேன் என்று அடம் பிடிக்க என்னடா இப்படி இருக்கிறா சரி கவிதா ஆசப்படி நடக்கட்டும் என்று சொல்கின்றனர். இப்படி ஒரு பொண்ண நா பாத்ததே இல்லம்மா தங்கமான பொண்ணா இருக்கு என்று பரணி பாராட்ட, எல்லோரும் சந்தோஷமாகி ஒரே மாதிரி ஒரே கலரில் பட்டு புடவை எடுத்துக்கொள்கின்றனர். முத்துபாண்டி சௌந்தரபாண்டி ஹாப்பி.

அடுத்ததாக எல்லோரும் சாப்பிடுகின்றனர். சண்முகம் சாப்பிட்டு கை கழுவ முத்துபாண்டி தண்ணி ஊத்துகிறான். மச்சா நீ ரொம்ப நல்லவனா மாறிட்டியா நடிக்கிறான்னு தெரியல. என்று சொல்ல, டேய் நீ நம்பனுன்னு எனக்கு ஒன்னும் கவல இல்ல, ஊ தங்கச்சி எனக்கு வேண்டா என்கிறான், நீ கேட்டாலும் கிடைக்காது என்கிறான் சண்முகம். எலே வெறும் பயலே முத்துபாண்டி மனச மாத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க பட்ட பாடு எனக்குத்தா தெரியும், எதாவது பேசி அவ மனச கலச்சிடாத என்கிறார் சௌந்தர பாண்டியன்.

நல்லா கேட்டுக்கங்க மாமனாரே கவிதா ஏ கூட பொறக்காத தங்கச்சி, அவளுக்கு ஒன்னுன்னா நா வந்து நிப்பேன் என்று சொல்லி கை கழுவி விட்டு செல்கிறான். எல்லோரும் புறப்பட்டு செல்கின்றனர். அவர்களோடு கவிதாவும் அக்காவும் செல்கின்றனர். முத்துபாண்டி ரத்னாவை பார்த்து கவிதாவை பார்ப்பதுபோல ஏம்மாத்துகிறான். கவிதா வெக்கப்படுகிறாள். சிவபாலன் இசக்கியை பார்க்க, இசக்கி சிவபாலனை பார்க்கிறாள். பரணியும் அவர்களுடன் செல்கிறாள். பாக்யா வாசலுக்கு வந்து வழியனுப்ப, சௌந்தர பாண்டி முத்துபாண்டி சனியன் சிரிக்கின்றனர்.

அடித்து ரத்னா ஸ்கூலில் குழந்தைகளை கூட்டிக்கொண்டு டூர் போக வேண்டிய சூழ்நிலை உருவாக ஹட் மாஸ்டர் ரத்னாவை போயிட்டு வர சொல்ல ரத்னா சண்முகத்துக்கு போன் போட்டு கேட்க அவன் போயிட்டு வர சொல்லி அனுமதி கொடுக்கிறான். பணமேல் துணியும் வேண்டும் வீட்டு சாவி இசக்கியிடம் இருக்கிறது என்று சொல்ல, சண்முகம் சாவியை வாங்கிக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்ப முத்து பாண்டி எங்க போறீங்க மச்சான் என்று கேட்க ரத்னா ஸ்கூல் வரைக்கும் என்று சொல்ல நானும் வரேன் என்று இருவரும் வருகின்றனர்.

ரத்னா டூர் பாகம் விஷயம் தெரியாமல் வரும் முத்துப்பாண்டி தூரமாக நின்றுவிட சண்முகம் சாவியையும் பணத்தையும் கொடுத்துவிட்டு முத்துப்பாண்டிக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு என்று சொல்ல அவளும் முத்துப்பாண்டிக்கு வாழ்த்து சொல்ல இப்படி சொன்னா எப்படி நேர்ல வந்து சொல்லுங்க என சொல்கிறான். ரத்னாவும் கண்டிப்பா நேர்ல வந்து உங்களுக்கு உங்க பொண்டாட்டிக்கும் வாழ்த்து சொல்லுவேன் என்று சொல்ல நீதானடி என் பொண்டாட்டி என மைண்ட் வாய்ஸ் நினைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment