Advertisment

உண்மை தெரிந்த கார்த்தி... பதிலடி கொடுக்கும் தீபா : ஆக்ஷன் சீன் ஆரம்பமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகள் பெற்று வரும் கார்த்திகை தீபம் மற்றும் இதயம் சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil KD ANNA DI

ஜீ தமிழ் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பயங்கர கோபத்துடன் தர்மலிங்கம் வீட்டுக்கு வந்த கார்த்திக்.. சிதம்பரத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தான் பல்லவி என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வந்ததை தொடர்ந்து இன்று, தீபா தான் பல்லவி என்பதை அறிந்த கார்த்தி கோபத்துடன் நேராக தீபா வீட்டிற்கு வந்து தர்மலிங்கத்திடம் இவ்வளவு நாளா தீபா பாடிட்டு இருந்த விஷயத்தை எதுக்கு என்கிட்ட இருந்து மறைச்சீங்க இது ரொம்ப பெரிய தப்பு என்று சொல்ல அவர் நீங்க கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கு ஆனா நடந்த விஷயங்களை முழுசா கேளுங்க என்று ரூபாஸ்ரீ சத்தியம் வாங்கியது, தம்பிக்காக பாடுவது என அனைத்து விஷயங்களையும் சொல்கிறார்.

இனியனும் மாமா நீங்க அக்காவை தப்பா நினைக்காதீங்க, உங்களுக்கு கோபம் இருந்தால் என்னை கூட அடிச்சுக்கோங்க என்று சொல்ல, கார்த்திக் சமாதானமாகி அங்கிருந்து கிளம்பி வருகிறான். இளையராஜாவிடம் பல்லவியாக பாடிக் கொண்டிருப்பது என்னுடைய மனைவி தீபா தான் என்று சொல்ல அவனும் ஷாக் ஆகிறான். மேலும் கார்த்திக் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லப் போவதாக சொல்ல இதனால் தீபாவுக்கு பிரச்சனை வராதா என்று இளையராஜா கேட்கிறான்.

இல்ல தீபா எவ்வளவு நாளா சுமந்திருந்த சுமையை இறக்கி வைக்கட்டும் என கூறுகிறான். மறுபக்கம் மீண்டும் தீபாவை வழிமறிக்கும் சிதம்பரம் தனக்காக பாட கூப்பிட தீபா முடியாது என்று மறுக்க, கார்த்தி இடம் பல்லவி நீ தான் என்ற உண்மையை சொல்லிவிடுவேன் என மிரட்ட போய் சொல்லுங்க என்று தீபா பதிலடி கொடுக்கிறாள். பிறகு மீனாட்சி அந்த ஆள் பொய் சொல்லிட போறாரு என்று சொல்கிறாள்.

இதற்கு தீபா, பொய் சொல்லட்டும் அப்போதாவது அவருக்கு விஷயம் தெரியட்டும், நானே அவரிடம் சொல்லலாம் என்று தான் இருக்கிறேன் என்று சொல்கிறாள். அதேபோல் சிதம்பரம் கார்த்தியை சந்தித்து பல்லவி தீபா தான் என்ற உண்மையை உடைக்க இது எனக்கே தெரியும் என்று கார்த்திக் அதிர்ச்சி கொடுக்கிறான். நீங்க என்னோட மியூசிக் கேரியரை கெடுக்க என்னென்னமோ பண்ணுங்க இனிமேல் உங்களோடு தெரியல நான் அழிக்கிறேன் என்று கார்த்திக் சவால் விடுகிறான்.

இதை கேட்டு சிதம்பரம் அங்கிருந்து ஆவேசத்துடன் கிளம்பி வரும்போது வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு கார் ஆக்சிடென்ட் ஆகிறது. அதன் பிறகு அபிராமி கார்த்திக் ஜாதகத்தை கொண்டு பொய் ஜோசியர் ஒருவரிடம் ஜாதகம் கேட்க அவர் இப்போதைக்கு நேரம் சரியில்லை அவருடைய மனைவி தொடர்ந்து 52 நாட்கள் விளக்கு போட வேண்டும் தவறினால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உண்மையை உளறி கொட்டிய கேசவ்.. பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த சாரதா

இதயம், சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி தான் ஆதியின் காதலி என கேசவ் உளற சாரதா அவனது பளாரென அறைந்த நிலையில் இன்று ஆதியை பார்த்துக்கடானு உன்னை ஆபிஸ் அனுப்பி வச்சா நீயும் அவனோட சேர்ந்து உண்மையை மறைச்சிருக்க என்று திட்டுகிறாள். அதோடு அந்த பாரதியும் என்கிட்ட நல்லவள் மாதிரி நடிச்சு இருக்கா என்று கோபப்படுகிறாள். எனக்கு இந்த விஷயம் தெரியும்னு ஆதிக்கு சொல்ல கூடாது, அப்படி அவனுக்கு உண்மை தெரிந்தால் என்னை உயிரோடவே பார்க்க முடியாது என கேசவ்விற்கு செக்மேட் வைக்கிறாள்.

அதனை தொடர்ந்து இங்கே பாரதி ஆதி சொன்ன வார்த்தைகளால் பதற்றத்தில் இருக்க சாரதா போன் செய்வதை பார்த்து இன்னும் பதறுகிறாள். இருப்பினும் போனை எடுக்க யாருக்கும் தெரியாமல் யாரிடமும் சொல்லாமல் நான் சொல்லும் இடத்திற்கு வர சொல்கிறாள் சாரதா. பிறகு பாரதி சாரதாவை சந்திக்க செல்கிறாள். சாரதா பாரதியை கண்டபடி பேசி அவமானப்படுத்துகிறாள், எக்காரணத்தை கொண்டும் நீ ஆதியோட வாழ்க்கையில் வரவே கூடாது.

நானும் நீயும் பேசிய விஷயம் வெளியில் தெரியவும் கூடாது என எச்சரித்து அனுப்ப கண்ணீருடன் வீட்டிற்கு வருகிறாள். மரகதம் கூப்பிடுவது கூட கவனிக்காமல் ரூமுக்கு வரும் பாரதி வாசுவின் போட்டோ முன்பு நின்று எல்லாரும் என்னை தப்பாவே நினைச்சிட்டு இருக்காங்க என்று அழுகிறாள். தமிழ் வரைந்த குடும்ப போட்டோ பாரதி கண்ணில் பட அதையும் கிழித்து போட்டு கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment