Advertisment

போலீஸ் ஸ்டேஷன் முத்துபாண்டி கோட்டையோ! எல்லை மீறும் அண்ணா : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil serial News

அண்ணா - கார்த்திகை தீபம் - இதயம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

மீண்டும் மிரட்டும் சிதம்பரம்.. பாட்டி வைத்த அடுத்த போட்டி

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அருண் நீச்சல் தெரியாமல் குளத்தில் விழ, சிதம்பரம் சக்தியை அறிந்த தீபா சத்தம் போட்டு அருணை காப்பாற்றிய நிலையில் இன்று, மீண்டும் தீபாவுக்கு போன் பண்ணு சிதம்பரம், இன்னும் என்ன எதுவும் சொல்லல பண்ணதெல்லாம் போதாதா பெருசா பண்ணனுமா என்று மிரட்டுகிறார்.

இதைத் தொடர்ந்து செல்பி பாட்டி அடுத்த போட்டியை அறிவிக்கிறார். அதாவது புருஷன் பொண்டாட்டி அப்படியே தங்களது கதாபாத்திரத்தை மாற்றி நடித்துக் காட்ட வேண்டும் என்பதுதான் போட்டி என்று கூறுகிறார். இதனைத் தொடர்ந்து முதல் ஆளாக ஐஸ்வர்யா அருண் ஆகவும், அருண் ஐஸ்வர்யாவாகவும் மாறுகிறான்.

அருணாக நடிக்கும் ஐஸ்வரியா தீபாவுக்கு சப்போர்ட் பண்ணி பேச ஐஸ்வர்யாவாக நடிக்கும் அருண் இந்த வீட்ல எல்லா பிரச்சனையும் அவளாலதான் அதனாலதான் அவகிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன் என்று கூறுகிறான். அதன் பிறகு மீனாட்சி ஆனந்தாகவும் ஆனந்த் மீனாட்சி ஆகவும் மாறி சமையல் பற்றி பேசி நடித்துக் காட்டுகின்றனர்.

தொடர்ச்சியாக அபிராமி அருணாச்சலமாகவும் அருணாச்சலம் அபிராமியாகவும் மாறி நடிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

ஜெயிலில் இருந்து தப்பிய சண்முகம்.. பரணி கொடுத்த வார்னிங்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சண்முகத்தை கைது செய்து ஸ்டேஷனுக்கு கூட்டிச்சென்ற நிலையில் இன்று, ரத்னாவை கூட்டிக்கொண்டு சவுந்தரபாண்டி வீட்டிற்கு வரும் பரணி, சண்முகம் இந்த மாதிரி பண்றவன் கிடையாது அது எனக்கு நல்லாவே தெரியும். இது எல்லாம் உங்களுடைய சதி தானே என்று சத்தம் போட, இது எனக்கும் இருக்கும் என்று சம்பந்தமும் இல்லை என சௌந்தரபாண்டி கூறுகிறார்.

திரும்பவும் அவனை விடலனா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அவர்களுக்கு வார்னிங் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகிறாள் பரணி. மறுபக்கம் சண்முகம் ஸ்டேஷனிற்குள் முருகன் பாட்டை போட்டு தாயாக கேட்டுக் கொண்டிருக்க, முத்துப்பாண்டி பிரியாணி சாப்பிட்டு அவனை அடிக்க தயாராகிறான். அந்த நேரம் பார்த்து சௌந்தரபாண்டி போன் போட்டு அவனை அடிக்கிறது நான் என் கண் குளிர பார்க்கணும் என்று சொல்ல வீடியோ கால் பண்ணவா என்று முத்துப்பாண்டி கேட்க வேண்டாம் நான் நேரிலேயே வரேன் என்று சொல்லி கிளம்புகிறார் சௌந்தரபாண்டி.

சௌந்தரபாண்டி கிளம்புவதை பார்த்த பாக்கியம் சண்முகத்த விட்டுட சொல்லுங்க என்று சொல்லி கேட்க, அதெல்லாம் முடியாது விடலன்னா என்ன பண்ண போற அன்னைக்கு உன் புள்ள மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டு கொளுத்திப்பேனு மிரட்டுன மாதிரி மிரட்ட போறியா? கொளுத்திகிட்டு சாவு என்று அங்கிருந்து வந்து விடுகிறார். இங்கே ஸ்டேஷனில் ஒரு போலீஸ், முத்துப்பாண்டி உங்களுக்கு எதிரா பெருசா சதி திட்டம் நீங்க இங்க இருந்து தப்பிச்சு போயிடுங்க என்று சண்முகத்தை தப்பிக்க வைக்கிறார்.

அவன் ஸ்டேஷனுக்கு வரும் சனியன் சௌந்தரபாண்டியை வழிமறித்து அவர்களுடன் செல்பி எடுத்து தர்மகத்தா தேர்தல்ல நிற்க வேண்டாம் என்று சொல்லி என்னை சீண்டி விட்டுட்டீங்க, இனிமே நான் சும்மா இருக்க மாட்டேன் என் அப்பா அருளோட உன்ன சூரசம்சாரம் பண்ணுவேன் என்று வெறுப்பேற்றி விட்டு செல்ல, சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதயம்:

ஆபீஸில் ஐடி ரெய்டு.. கைதாகும் நிலையில் ஆதி, பாரதி எடுத்த முடிவு

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதியின் ஆபீசுக்கு ஐடி ரெய்டு  வந்துவிட பாரதி அக்கௌன்ட்சை பார்த்துக் கொண்டு வந்த நிலையில் அவர் வேலையை டிசைன் செய்து விட்டு சென்று விட்டதால் பைல் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இதனால் ஆதி கைதாகும் நிலை ஏற்பட, இன்று, லதா மற்றும் கேசவ் யாருக்கும் தெரியாமல் தப்பித்து வெளியே வந்து பாரதிக்கு தகவல் கொடுத்து அவளை உடனடியாக வர சொல்லி அழைக்கின்றனர்.

கை நீட்டி சம்பளம் வாங்கி இருக்கும் அதனால் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் பாரதி, ஆபீசுக்கு கிளம்பி வருகிறாள். ஐடி அதிகாரிகள் ரூல்ஸ் எல்லாம் பேச பாரதியின் ரூல்ஸ் பேசி பதிலடி கொடுத்து எல்லாத்துக்கும் ஆன கணக்கு எங்ககிட்ட சரியா இருக்கு நாங்க கம்பெனியை தவறான விதத்தில் நடத்தவில்லை என கூறுகிறாள்.

இங்கு நடக்கும் விஷயங்களை எல்லாம் ஒருவன் பவானிக்கு தகவல் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment