ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்
ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில், அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்
கார்த்திகை தீபம்:
மருதாணியால் மாட்டிக் கொள்ளும் தீபா? கார்த்திக் செய்யப் போவது என்ன?
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க கையில் இருக்கும் மருதாணியை பார்க்காமல் தவறவிட்ட நிலையில் இன்று காலையில் தீப கார்த்திக்கிடம் என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களா என்று கேட்க அவன் சம்மதம் தெரிவித்து கோவிலுக்கு அழைத்து வருகிறான்.
கோவிலுக்கு வந்த இவர்கள் கைரேகை பார்ப்பவரை பார்த்து கைரேகை கேட்கலாம் என்று அவரிடம் செல்ல முதலில் கார்த்திக் தனது கையை காட்டுகிறான். நீங்க ஒரு விஷயத்தை தேடிக்கிட்டு இருக்கீங்க கைக்கு எட்டினது கைநழுவி போயிடுச்சு என்று சொல்ல பல்லவி பற்றி சொல்றாங்களோ என நினைத்துக் கொள்கிறார்.
அதோடு கவலைப்படாதீங்க நீங்க நெனச்சது உங்கள நோக்கி வரும் எனவும் சொல்லி முடித்த பிறகு தீபா தன்னுடைய கையை காட்டுகிறாள். அப்போது கார்த்திக் தீபாவின் கையை பார்க்க அவளின் கையில் இருக்கும் மருதாணியை கவனித்து விடுகிறான். பல்லவி கையில் இருந்ததும் இதே மருதாணி தானே என்ற குழப்பம் கார்த்திக்கு எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்ணா:
பரணியை வெளியே போக சொல்லும் சண்முகம்.. அதிர்ச்சியான குடும்பம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
இந்ந சீரியலின் நேற்றைய எபிசோட்டில் பரணியின் தோழிகள் ஊருக்கு கிளம்ப சண்முகம் பரணி அவர்களை வழி அனுப்ப வந்த இடத்தில் ஒரு குழந்தைக்கு வலிப்பு வந்து உயிருக்கு போராட பரணி அதை பார்த்து ஓடிப் போய் உதவி செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றுகிறாள்.
அதன் பிறகு பரணியின் தோழிகள் நீ சேவை செய்வதெல்லாம் சரிதான் ஆனால் பிராக்டிஸ் இல்லாம பண்ணி உன் பேரை கெடுத்துக்காத என்று சொல்ல சண்முகம் அவளுக்கு தாலி கட்டி கணவ கலைச்சிட்டேன் என்று வருத்தப்படுகிறான். அடுத்து வீட்டுக்கு வந்த சண்முகம் பரணி என் தாக எடுத்து வைத்து நீ உன் வீட்டுக்கு கிளம்பு என்று சொல்ல எல்லோரும் என்னாச்சு என்று பதறுகின்றனர்.
பரணி என் வீட்டுக்கு எதுக்கு போகணும் என்று கேட்க நீ சுதந்திரமா பறக்க வேண்டிய பறவை இது உனக்கு ஜெயில் தான் என்று சொல்கிறான். ஆனால் பரணி சும்மா நடிக்காத 100 நாள் யார் என்ன சொன்னாலும் நான் வீட்டை விட்டு போக மாட்டேன். 100 நாளைக்கு பிறகு ஒரு நாள் கூட இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று பேக் எடுத்துக் கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறாள். அத்துடன் அம்மாவாக நினைத்து மரத்தின் அருகே வந்த சண்முகம் நான் நினைக்கிறது எனக்கு புரியுதா அம்மா என்று வருத்தப்பட்டு பேசுகிறார்.
வைகுண்டம் என்னாச்சு என்று கேட்க சண்முகம் நடந்த விஷயத்தை சொல்ல பரணி சேவை செய்யட்டும் ஆனா அவ நம்ம வீட்ல இருந்தே செய்யட்டும் என சொல்கிறார். இருந்தாலும் சண்முகம் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டிய கிடையாது, நம்ம குல சாமி என பரணியை புகழ்ந்து பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சீதா ராமன்:
செல்வியை வைத்து சீதாவை பணிய வைக்கும் மகா.. நடந்தது என்ன? –
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகா சீதாவை டார்ச்சர் செய்யத் தொடங்கிய நிலையில் இன்று, செல்வி சீதாவிடம் இதையெல்லாம் ராம் சார் கிட்ட சொல்லிடலாம் என்று ஐடியா கொடுத்துவிட்டு வெளியே வர மகா மற்றும் அர்ச்சனா இதை கேட்டு விடுகின்றனர்.
இனிமே நீ சமைக்க கூடாது சீதா தான் சமைக்கணும், அப்படி செய்யலன்னா இன்னும் சம்பளத்துல பிடிச்சு வச்சிருக்க பணம் உனக்கு கிடைக்காது என அதிர்ச்சி கொடுக்கின்றனர். சீதா சமைக்கிறது எனக்கு பிடிக்கிற விஷயம் தானே நான் பாத்துக்குறேன் என்று சொல்லி சமைத்து முடிக்க செல்வி பரிமாற போகும்போது தடுத்து நிறுத்தும் மகா சீதா தான் பரிமாறனும் இல்லனா உனக்கு வேலையும் கிடையாது உன் பணமும் கிடையாது என சொல்ல சீதா செல்விக்காக பரிமாறுகிறாள்.
அது மட்டுமல்லாமல் மதியத்துக்கு ஆபீஸ்க்கு சாப்பாடு கொண்டு வா என்று சொல்ல சீதாவும் கரியரை தூக்கிக்கொண்டு சாப்பாடு எடுத்து போக மகா அவளை நான் சொல்லும் வரை காத்திருக்க சொல் என வெளியேவே நிற்க வைக்கிறாள். பிறகு அவளே கேரியரை தூக்கிட்டு மேலே வரணும் என்று சொல்ல மகாவின் திட்டத்தை புரிந்து கொண்ட சீதா நானும் வரமாட்டேன் என்னுடைய கேரியரும் வராது என சேர் போட்டு உட்கார்ந்து ஷாக் கொடுக்கிறாள்.
மகா துரையை அனுப்ப சீதா அப்போதும் வர முடியாது என மறுப்பு தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரிததுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.