எதிரிக்கு எதிரி நண்பன்: ரியாவுடன் கூட்டணி அமைத்த ரம்யா: கார்த்திக் உண்மையை கண்டுபிடிப்பாரா?

எதிரிக்கு எதிரி நண்பன். உனக்கு ஆனந்த்தோட பொண்டாட்டி ஆகணும், எனக்கு கார்த்திக்கோட பொண்டாட்டி ஆகணும் என ரம்யா ரியாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

எதிரிக்கு எதிரி நண்பன். உனக்கு ஆனந்த்தோட பொண்டாட்டி ஆகணும், எனக்கு கார்த்திக்கோட பொண்டாட்டி ஆகணும் என ரம்யா ரியாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Karthigai Deepam

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திக்கு தீபா விட்ட சவால்.. ரியாவுடன் கூட்டு சேர்ந்த ரம்யா

Advertisment

கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா கீழே விழுந்து காலில் அடிபட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது தீபா ஒரு பெண் சாமியார் தான் என்னை காட்டு அம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க, அவங்க என் கையில் ஒரு கயிறை கட்டி விட்ட பிறகு தான் எனக்குள்ள ஒரு சக்தி வந்தது, என்னை காப்பாத்துனது கூட அவங்க தான் என்று சொல்கிறாள். அடுத்து அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து அந்த சாமியாரை சந்தித்து கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுக்க கேட்கின்றனர். 
முதலில் யோசித்த அவர் பிறகு ஒரு தேதியை குறித்து கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் தர்மலிங்கத்திடம் உங்க ஜோசியர் அப்படி சொன்னாரு, எங்க ஜோசியர் கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுத்து இருக்காரு என்று அபிராமி சொல்கிறாள். அதன் பிறகு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி ஒருவர் வெங்கையா வீட்டிற்கு வந்து நான் தான் ரம்யா நம்பீசன் எனக்கு இன்னும் ரெண்டு நாள் உங்க நிலம் வேண்டும், சாமியார் வருவதாக சொல்கிறார். 

Advertisment
Advertisements

இதை கேட்ட வெங்கையா, நீங்க யார்? நீங்க ரம்யா நம்பீசன் இல்லையே என்று சொல்ல கார்த்திக் என்ட்ரி கொடுத்து நடந்ததை சொல்ல சொல்லி கேட்கின்றான் .இதை தொடர்ந்து வெங்கையா ஒருத்தவங்க போன் மூலமாக நிலத்தை கேட்டாங்க, பணத்தையும் கொடுத்தாங்க அதனால் தான் இப்படி பண்ணேன் என்று சொல்கிறார். கார்த்திக் அந்த நம்பருக்கு போன் போட சொல்ல அது ரம்யாவின் இன்னொரு நம்பர் என்று தெரிய வருகிறது.

ரம்யா போனை எடுத்ததும் நான் கார்த்திக் பேசுறேன் என்று சொன்னதும் போனை கட் செய்து சிம்மை கழட்டி உடைத்து எறிகிறாள். அடுத்து ரம்யா நொண்டியபடி கார்த்திக் வீட்டிற்கு வர மைதிலியும் மீனாட்சியும் சேர்ந்து தீபாவுக்கு கல்யாணம் செய்ய நாள் குறித்த விஷயத்தை சொல்லி வெறுப்பேற்றுகின்றனர். அடுத்து ரியாவை பெயிலில் ஒருவர் வெளியே எடுத்ததாக சொல்லி லாயர் ஒருவர் வெளியே அழைத்து வர அங்கு ரம்யா நிற்கிறாள்.

எதிரிக்கு எதிரி நண்பன். உனக்கு ஆனந்த்தோட பொண்டாட்டி ஆகணும், எனக்கு கார்த்திக்கோட பொண்டாட்டி ஆகணும். ரெண்டு பேரும் சேர்ந்து அந்த வீட்டிற்குள் நுழைவோம் என்று சொல்லி இருவரும் கூட்டு சேருகின்றனர். அடுத்து கார்த்திக் ரூமுக்கு வர தீபா மத்த ரெண்டு பேரை போல் நான் இந்த வீட்டிற்கு முறைப்படி மருமகளா வரல, நமக்கே தெரியாமல் தான் நம்ம கல்யாணம் நடந்தது.

உங்களுக்கு என் மேலே காதல் இருக்கா? இல்ல அம்மா சொல்லியதால் கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்களா என்று கேட்க, கார்த்திக் அம்மா சொல்லி தான் ஓகே சொன்னேன் என்று சொல்கிறான். கல்யாணத்துக்குள்ள என் மேலே உங்களுக்கு காதல் வர வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் தீபா. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Karthigai Deepam Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: