/indian-express-tamil/media/media_files/PHxWAuvULF2ck3gAXRfJ.jpg)
கார்த்திகை தீபம் சீரியல்
போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. கார்த்தியால் மண்ணை கவ்விய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் தீபாவை கடத்த சொல்லி கை காட்ட மைதிலி அங்கு வந்து நிற்க அஞ்சு கொலை ஆறுமுகம் மைதிலியை கடத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, ஐஸ்வர்யா கரெக்டா பொண்ண கடத்திட்டியா என்று அஞ்சு கொலை ஆறுமுகம் மீது சந்தேகப்பட அவன் கோபப்பட்டு கிளம்பி செல்ல நான் உன்னை நம்புறேன் சமாதானப்படுத்துகிறாள். அதைத்தொடர்ந்து ரியா வீட்டில் ரெடி ஆகிக் கொண்டிருக்க திடீரென வீட்டில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்து கதவை திறக்க போலீஸ் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
இன்னைக்கு ஒரு நாள் நீ ஸ்டேஷனில் இருக்கணும் என்று சொல்லிக் கூப்பிட, ரியா எதுக்கு என்று காரணம் கேட்க காரணம் எல்லாம் சொல்ல முடியாது என சொல்கின்றனர். அதைத்தொடர்ந்து ரியா ரெடியாகி விட்டு வந்ததும் என உள்ளே சென்று ரம்யாவுக்கு போன் போட்டு போலீஸ் வந்திருக்கும் விஷயத்தை சொல்லி எல்லாம் கார்த்திக் வேலையாக தான் இருக்கும். நீ உஷாரா இரு என சொல்லி போலீஸ் உடன் கிளம்பி செல்கிறாள்.
மறுபக்கம் ஐந்து கொலை ஆறுமுகம் கடத்தியது தீபா இல்லை, அவளோட அண்ணி மைதிலி என தெரிந்து, தீபாவுக்கு போன் போட்டு உன் அண்ணியை கடத்தி வச்சிருக்கேன் ஒழுங்கா மரியாதையா நான் சொல்ற இடத்துக்கு வா என்று மிரட்டுகிறான். தீபாவும் வருவதாக சொல்லி ஃபோனை வைக்க அடுத்து கார்த்திக் இந்த குடோனுக்கு வந்து அதிர்ச்சி கொடுத்து ரவுடிகளுடன் சண்டையிடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.