பாடகி ஆன மகள்; பாராட்டிவிட்டு திட்டும் தாய்: ஹீரோ விளக்கம் கொடுப்பாரா?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில், மகள் பாடகி ஆனதால், வெளியில் சந்தோஷப்பட்டாலும் வீட்டுக்கு வந்தவுடன், திட்டி சண்டை போடுகிறார்.

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில், மகள் பாடகி ஆனதால், வெளியில் சந்தோஷப்பட்டாலும் வீட்டுக்கு வந்தவுடன், திட்டி சண்டை போடுகிறார்.

author-image
WebDesk
New Update
Karthigai Deepam Serial Ep

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் காலேஜில் ஒரு பெண்ணை காப்பாற்றிய சண்டையில் கார்த்தியின் சட்டை கிழிந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

Advertisment

ரேவதி கார்த்திக்காக ஒரு சட்டை எடுக்க கடைக்கு வருகிறாள், அதே நேரத்தில் காலேஜில் ஒரு பெண் சட்டையை கொண்டு வந்து கொடுத்து போட்டுக்கொள்ள சொல்ல கார்த்திக் என் மனைவி எனக்காக டிரஸ் எடுக்க போய் இருக்காங்க என்று சொல்லி மறுத்து விடுகிறான். இதையடுத்து ரேவதி வாங்கி வந்து கொடுத்த சட்டையை போட்டு கொள்கிறான்,

தொடர்ந்து காலேஜில் ப்ரோகிராம் தொடங்குகிறது. ஸ்வாதியும் பாடி முடிக்கிறாள். பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுக்க சீப் கெஸ்ட் ஒருவர் வரப்போவதாக சொல்கின்றனர்.  கொஞ்ச நேரத்தில் சாமுண்டீஸ்வரி என்ட்ரி கொடுக்க கார்த்திக், ரேவதி, ஸ்வாதி என மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இருப்பினும் ஸ்வாதியிடம் நீ போய் பரிசை வாங்கு என்று சொல்கின்றனர்.

இதன்பிறகு, சாமுண்டீஸ்வரி ஸ்வாதிஎன் பொண்ணு தான். அவ இவ்வளவு நல்லா பாடுறது பெருமையா இருக்கு என்று பேசுகிறாள்.  ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு யாரை கேட்டு நீ பாடுன என்று சத்தம் போடுகிறாள். இதுக்கு நீயும் உடந்தையா என்று ரேவதி மீதும் கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: