திருடனை கண்டுபிடித்த அண்ணா; கணவனை சந்தேகிக்கும் மனைவி; குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்குமா?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் , அண்ணா மற்றும் கெட்டிமேளம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் , அண்ணா மற்றும் கெட்டிமேளம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Kettimelam anna and Kd

கவின் பற்றி போட்டு கொடுத்த ப்ரண்ட்ஸ்.. டென்ஷனில் தவிக்கும் மகேஷ், வெற்றியிடம் கோபப்பட்ட துளசி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் அஞ்சலியை கவனித்து கொள்வதை பார்த்து லக்ஷ்மியும் அவளது குடும்பமும் சந்தோசம் அடைந்த நிலையில் இன்று, மகேஷ் அஞ்சலியிடம் ஐஸ் கிரீம் சாப்பிட வெளியே போகலாம் என்று சொல்லி அழைத்து கொண்டு கிளம்புகிறான். இன்னொரு பக்கம் துளசி வெற்றியிடம் நீங்க தானே என்னை இங்க வர வச்சீங்க என்று கோபப்படுகிறாள்.

வெற்றி ஐயோ மேடம் நீங்க இப்படி தான் நினைப்பீங்கனு எனக்கு தெரியும். ஆனால் நிச்சயமா இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறாள். அடுத்து அஞ்சலி காரில் வரும் போது தனது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரை பற்றியும் பேசியபடி வருகிறாள். கடைசியாக முருகன் பற்றி பேச மகேஷ் டென்ஷனாகி பிரேக் அடிக்க அஞ்சலி பயந்து போகிறாள்.

அடுத்து இருவரும் ஐஸ் கிரீம் ஷாப் வர அங்கே அஞ்சலியின் ப்ரண்ட்ஸ் இவர்களை பார்த்து விடுகின்றனர். அவர்கள் அஞ்சலிக்கு ஒரு பெஸ்ட் ப்ரண்ட் ஒருத்தன் இருக்கான்.. அவனுக்கு நிக் நேம் எல்லாம் வச்சு கூப்பிடுவான் என்று சொல்ல மகேஷ் அவன் யாராக இருப்பான் என குழப்பம் அடைகிறான். இங்கே ஈஸ்வர மூர்த்தி வீட்டிற்கு வர துளசியை பார்த்து நலம் விசாரிக்கிறார், துளசி அவரிடம் கையெழுத்து வாங்கி கொண்டு கிளம்ப தயாரா வெற்றி கூட்டிட்டு போய் விடுவான் என்று சொல்ல துளசி வேண்டாம் பரவாயில்லை என்று சொல்கிறாள்.

Advertisment
Advertisements

ஆனால் மீனாட்சி துளசியை சம்மதிக்க வைத்து  வெற்றியுடன் அனுப்புகிறாள். அடுத்து அஞ்சலி, மகேஷ் வீட்டிற்கு வர மகேஷ் அவளிடம் எனக்கு என்ன நிக் நேம் வச்சிருக்க என்று கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருடனை மடக்கி பிடித்த சண்முகம்.. அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் போஸ்டர் அடித்து ஒட்டி திருடனை கண்டுபிடிக்க திட்டமிட்ட நிலையில் இன்று, போஸ்டரை பார்த்த வைஜெயந்தி இது சண்முகத்தின் திட்டமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறாள். அதே போல் இன்னொரு பக்கம் போஸ்டரை பார்த்த திருடனின் மனைவி சண்முகத்திற்கு போன் செய்து உயிரோட இருக்க என் புருஷனுக்கு யாருடா போஸ்டர் ஒட்டியது என சத்தம் போடுகிறாள்.

சண்முகம் யாரோ தப்பா என் நம்பரை கொடுத்து போஸ்டர் நடிச்சிருக்காங்க என்று சொல்லும் சண்முகம் அந்த பெண்ணிடம் நீங்க எந்த ஊரு, எங்க இருக்கீங்க? உங்க புருஷன் எங்க இருக்காரு என்று கேட்டு தெரிந்து கொண்டு கிளம்பி செல்கிறான். மறுபக்கம் வைஜெயந்தி அவன் கிடைச்சிட்டா அவ்வளவு தான்.. நம்ப திட்டம் எல்லாம் வேஸ்ட்டா போய்டும் என சண்முகத்தை மடக்க கிளம்பி வருகிறாள்.  அதற்குள் இங்கே வீட்டிற்கு வந்த சண்முகம் அந்த ரவுடியை பிடித்து விடுகிறான்,

முத்துப்பாண்டி உண்மையை ஒத்துக்கிட்டா உனக்கு தண்டனை குறையும் என சொல்லி மிரட்ட அவன் நான் தான் நகையை திருடுனேன்.. தப்பிக்க வழியில்லாமல் அந்த பொண்ணோட பேக்கில் போட்டுட்டேன் என்று சொல்லி ஆஜர் ஆகி விடுகிறான்.  உடனே இந்த விஷயம் அறிந்த வைஜெயந்தி ஸ்டேஷனுக்கு வந்து எனக்கு அப்பவே இந்த பொண்ணு இப்படி பண்ண வாய்ப்பு இல்லனு ஒரு சந்தேகம் இருந்தது.. FIR போடலல.. அதுவரைக்கும் நல்லது என்று நல்லவள் வேஷம் போட்டு பிருந்தாவை விடுவிக்கிறாள்.

இந்த விஷயம் அறிந்து கௌதம் கோபம் அடைகிறான், வீட்டில் பொருட்களை தூக்கி போட்டு உடைக்கிறான். வைஜெயந்தி அடுத்து என்ன பண்ணுவது என யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாயா செய்த சதி.. சிக்கலில் ரேவதி, கார்த்தி காப்பாற்றுவானா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஏற்காட்டில் வந்து இறங்கிய நிலையில் இன்று, கார்த்திக் ரேவதியை பிரிக்க திட்டம் போடும் மாயாவும் இன்னொரு பக்கம் ஏற்காட்டிற்கு வந்து இறங்குகிறாள். அடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ரூமுக்குள் நுழைய ரூம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்க ரேவதி கடுப்பாகிறாள், கார்த்திக்கும் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என சொல்லியும் நம்ப மறுக்கிறாள்.

அதன் பிறகு கார்த்திக் வெளியே சென்றிருக்க அப்போது மாயா ஏற்பாடு செய்த சர்வெண்ட் உள்ளே வந்து பொக்கேவை கொடுத்து உங்க ஹஸ்பண்ட் கொடுக்க சொன்னதாக சொல்ல ரேவதி இன்னும் கடுப்பாகிறாள். பிறகு கார்த்திக் வந்ததும் அவனிடம் கோப்பட கார்த்திக் சர்வெண்ட்டை கூப்பிட்டு விசாரிக்க மாற்றி கொடுத்து விட்டதாக சொல்கிறான். அடுத்து ரேவதி கோபித்து கொண்டு தனியாக வெளியே சென்று ஒரு ஹோட்டலில் சாப்பிடுகிறாள்.

சாப்பிட்டு முடித்த பிறகு பர்ஸில் பணம் இல்லை என தெரிய வருகிறது. இதனால் கடை ஓனர் பாத்திரம் கழுவ சொல்ல ரேவதி செய்வதறியாது நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: