மனைவிக்கு கொடுமை செய்யும் கணவன்: தங்கைக்கு போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது என்ன? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன் அடுத்த நாள் மன்னிப்பு கேட்க, அவளும் மன்னித்துவிடுகிறாள். போலீஸ் வேலைக்கு சென்ற தங்கைக்கு என்ன நடந்தது?

மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன் அடுத்த நாள் மன்னிப்பு கேட்க, அவளும் மன்னித்துவிடுகிறாள். போலீஸ் வேலைக்கு சென்ற தங்கைக்கு என்ன நடந்தது?

author-image
WebDesk
New Update
zee tamil Kd and km and

என்னை குரங்கு-னு சொல்லு.. அஞ்சலியை முட்டி போட வைத்து கொடுமைப்படுத்தும் மகேஷ் -  கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்ததும் மகேஷ் அஞ்சலி இடம் எனக்கு என்ன நிக் நேம் என்று கேட்க தொடங்கிய நிலையில் இன்று, அஞ்சலி உங்களுக்கு எந்தப் பெயரையும் வைக்கல என்று சொல்ல மகேஷ் அதை ஏற்க மறுக்கிறான். என்னை நாய்னு சொல்லு, குரங்குன்னு சொல்லு என்று டார்ச்சர் செய்ய தொடங்க அஞ்சலி சொல்ல மறுக்கிறாள். இதனால் உச்ச கட்ட டென்ஷன் ஆகும் மகேஷ் அஞ்சலியை முட்டி போட வைத்து நைட்டு முழுக்க கொடுமைப்படுத்துகிறான்.

மறுபக்கம் வெற்றி துளசியை அழைத்துச் சென்று டிராப் செய்து விட்டு வந்த பிறகு அண்ணி மீனாட்சியுடன் எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் என்று சொல்லி நன்றி சொல்கிறான். அடுத்த நாள் காலையில் மகேஷ் அஞ்சலியிடம் தெரியாமல் செய்து விட்டதாக சொல்லி பழையபடி மன்னிப்பு கேட்க, அஞ்சலியும் அவனை மன்னிக்கிறாள். இதைத் தொடர்ந்து இங்கு வெற்றி தியாவுடன் வெளியே செல்கிறான்.

அப்போது தியாவிடம் எப்படி அடிபட்டது என்று கேட்க தியா ஆக்சிடென்ட் நடந்த விஷயத்தை சொல்ல வெற்றிக்கு அவன் செய்த கார் ஆக்சிடென்ட் பற்றிய விஷயங்கள் கண் முன் வந்து செல்கிறது. உடனே ஹாஸ்பிடல் கிளம்பி செல்கிறான். குறிப்பிட்ட தேதியில் நடந்த ஆக்சிடென்ட் குறித்த விவரங்களை கேட்க கொடுக்க மறுக்கின்றனர். நான் எக்ஸ் எம்எல்ஏ ஈஸ்வரமூர்த்தி ஓட பையன் என்று சொல்லி வெற்றி ரிபோட்டுகளை வாங்குகிறான்.

Advertisment
Advertisements

ஆனால் டாக்டர் வந்துவிட அவங்க மூணு பேரும் நல்லபடியா குணமாகி வீட்டுக்கு போயிட்டதா சொன்னேனே என்று சொல்லி சமாளித்து வெற்றியை அனுப்பி வைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நெருங்கி வந்த கார்த்திக்.. அலறிய ரேவதி, ரூமுக்குள் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி ஹோட்டல் ஒன்றிற்கு சென்று சாப்பிட்ட பிறகு கையில் காசில்லாமல் சிக்கிய நிலையில் இன்று, ரேவதி கார்த்தியை கூட உதவிக்கு கூப்பிடாமல் என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறாள். ஹோட்டலில் அவளை பாத்திரம் கழுவ அழைத்து செல்ல தயாராகின்றனர்.  இந்த சூழலில் கடைசி நொடியில் கார்த்திக் அங்கு வந்து பணத்தை கொடுத்து ரேவதியை காப்பாற்றி ரூமுக்கு அழைத்து செல்ல ரேவதி அவனிடம் கோபப்பட்டு சண்டையிடுகிறாள்.

அதன் பிறகு வேறொரு ரூம் கிடைக்காத காரணத்தால் இருவரும் ஒரே ரூமில் இருக்க வேண்டிய சூழல் உருவாக கார்த்திக் சோபாவில் படுத்து கொள்கிறான். ரேவதி பெட்டில் படுத்து கொண்டு டிவி பார்க்க எல்லா சேனலில் கற்பழிப்பு காட்சிகளாக ஒளிபரப்பாக கடுப்பாகி டிவியை ஆப் செய்து படுத்து விடுகிறாள். அடுத்து ரேவதி கார்த்திக் அவளை நெருங்கி வருவது போல் கனவு கண்டு அலறி எழுந்து சத்தம் போடுகிறாள்.

இதையடுத்து கார்த்திக் புரிந்து கொண்டு வெளியே வந்து டிரைவர்கள் தங்கும் இடத்தில தங்குகிறான். மீண்டும் ரூமுக்கு வந்து நீங்க தனியா இருக்கீங்க.. யாராவது கதவை தட்டினால் அவசரப்பட்டு திறக்க வேண்டாம் என்று சொல்லி செல்கிறான். அடுத்த நாள் காலையில் ரேவதியின் தோழி ஒருத்தி இதே ஹோட்டலுக்கு வந்திருக்க ரேவதி ரிஷப்ஷனில் அவளை பார்த்து ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரணியின் பாஸ்போட்டை மறைத்து வைத்த கனி.. வீராவை அலைய விடும் வைஜெயந்தி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா,  சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணிக்கு விசா வந்த நிலையில் இன்று, பரணி வெளிநாடு செல்வது நினைத்து எல்லாரும் சந்தோசமாகவும் அதே சமயத்தில் பரணியை பிரிவதை நினைத்து வருத்தத்துடன் இருக்கின்றனர். பரணி வெளிநாடு போவதை தடுக்க கனி யாருக்கும் தெரியாமல் விசா மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்து மறைத்து விடுகிறாள். அடுத்து சண்முகம் ரூமுக்கு வர பரணியிடம் நீ வெளிநாடு போய் நல்லபடியா படி எனக்கு சந்தோசம் தான் என்று சொல்ல பரணி அவன் மீது சந்தேகம் அடைகிறாள். 

இவன் ஏதோ வேலை பார்க்க நினைக்குறான். உஷாரா தான் இருக்கனும் என யோசிக்கிறாள். அடுத்து வீரா போலீஸ் யூனிபார்மில் ரெடியாகி வர அவளை பார்த்து எல்லாரும் சந்தோஷப்படுகின்றனர். சண்முகம் இன்னொரு தங்கையின் வாழ்க்கையிலும் விளக்கேற்றியாச்சு என்று அம்மா முன்னாடி நின்று சந்தோஷப்படுகிறான்.

இதையடுத்து வீரா ஸ்டேஷனுக்கு சுவீட்டுடன் வர இன்ஸ்பெக்டர் வைஜயந்தியின் பேச்சை கேட்டு வீராவை பணியில் சேர விடாமல் வெளியேவே காக்க வைக்கிறார். சண்முகம், பரணி என எல்லாரும் போன் செய்து வேலையில் சேர்ந்தாச்சா என்று விசாரிக்க இன்ஸ்பெக்டர் மீட்டிங் போய் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள்.

முத்துப்பாண்டி போன் செய்து பேச அப்போதும் இதையே சொல்ல அவன் சந்தேகப்பட்டு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க இல்லை என்று சொல்கிறாள். நைட் ஆனந்தும் வீரா வெளியேவே காத்திருக்க வீட்டில் அவள் வராததால் பதற்றம் அடைகின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Anna Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: