/indian-express-tamil/media/media_files/2025/04/01/otY7rbdZbHLoMgZoMXi4.jpg)
சிறையில் அடைக்கப்படும் ராஜராஜன்.. பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் துரையால் ராஜராஜன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று, ராஜராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இன்னொரு பக்கம் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் தொடங்கி நடக்கிறது. அப்போது பூஜையில் ராஜராஜன் சில சடங்குகளை செய்ய வேண்டும் என அவரை அழைக்கின்றனர்.
ராஜராஜன் எங்கும் இல்லாத நிலையில் அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கையில் இன்ஸ்பெக்டர் துரை, ராஜராஜனிடம் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அவர் தான் ஜீப்பில் அழைத்து சென்றதாகவும் தெரிய வருகிறது. இதனால் கார்த்திக்கு இடையில் என்னமோ நடந்திருக்கு என்று சந்தேகம் உருவாகிறது. அதை தொடர்ந்து பூஜை குறித்து சாமியாரிடம் அருள்வாக்கு கேட்க அவர் ராஜராஜனுக்கு பதிலாக கார்த்தியே இந்த சடங்குகளை செய்யலாம் என்று சொல்கிறார்.
பிறகு கார்த்தியை பூஜையில் உட்கார வைக்க போகும் சமயத்தில் ராஜராஜனை அழைத்து வந்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பரணியை விழுந்து விழுந்து கவனிக்கும் சண்முகம்.. கொளுத்தி போட வந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் பயணியிடம் உன்னை அமெரிக்கா அனுப்பி வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று சொல்லிய நிலையில் இன்று, நாட்டு வைத்திய பாட்டியை வர வைத்து பரணிக்கு கட்டு போட்டு விட பாட்டி மூணு நாளைக்கு கையை அசைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு செல்கிறார்.
பரணி நீ வேணும்னு தான் இப்படி பண்ண என்று சண்முகத்திடம் சண்டையிட சண்முகம் கண்டிப்பா உன்னை அமெரிக்கா அனுப்பி வைப்பேன் என்று உறுதி அளிக்கிறான். இதனை தொடர்ந்து கரண்ட் கட்டாக பரணி தூக்கத்தில் இருந்து எழுந்து இதுக்கும் காரணம் நீ தான் என்று வம்பிழுக்க, சண்முகம் கரண்ட் கட் ஆனதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன் என்று கேட்கிறான். மேலும் பரணிக்காக விசிறி விடுகிறான்.
இடையில் பாத்ரூம் செல்ல பரணி எழுந்து கொள்ள சண்முகம் அப்போதும் தூங்கி கொண்டே விசிறியபடி இருக்க பரணிக்கு சண்முகத்தின் காதலை புரிந்து கொள்ள தொடங்குகிறாள். அடுத்த நாள் காலையில் இங்கே சௌந்தரபாண்டி வீட்டில் இசக்கி முத்துபாண்டியின் ஷூவை துடைத்து கொண்டிருக்க அதை பார்த்து முத்துபாண்டி இதெல்லாம் நீ எதுக்கு செய்யுற என்று பாசமாக திட்டுகிறான்.
பிறகு பாக்கியம் காபி கொண்டு வரும் போது மயங்கி விழ முத்துபாண்டியும் இசக்கியும் பதறுகின்றனர், இங்கே சண்முகம் எழுந்து கோலம் போட தங்கைகள் வேடிக்கை பார்த்து சிரிக்க என் பொண்டாட்டிக்காக நான் செய்யுறேன் என்று சமாளிக்கிறான். ரத்னா காபி போட்டு வந்து எல்லாருக்கும் கொடுக்க பரணி குடிக்க போக சண்முகம் நிறுத்துங்க என்று சொல்லி தடுத்து நிறுத்துகிறான்.
நீ உளுந்தம் கஞ்சி தான் குடிக்கணும் என்று சொல்லி குடிக்க வைக்கிறான்.
அடுத்து பரணி ரெஸ்ட் எடுக்க அப்போது சண்முகம் அப்பாவுடன் சேர்ந்து பரணியின் துணிகளை துவைத்து காயப் போட இதை பார்த்த அவள் இதெல்லாம் எதுக்கு பண்றீங்க என்று கேட்கிறாள். சண்முகம் நீ அமெரிக்காவுக்கு எடுத்துட்டு போகணும்ல என்று பதில் சொல்கிறான். பிறகு சௌந்தரபாண்டி, பாக்கியம் ஆகியோர் பரணியை பார்க்க வருகின்றனர், பாக்கியம் ஜூஸ் வாங்கி வந்திருப்பதாக சொல்லி கொடுக்க சண்முகம் தடுத்து நிறுத்தி மீண்டும் உளுத்தம் கஞ்சி கொடுக்கிறான். சௌந்தரபாண்டி இவனை எல்லாம் நம்பாதே நம்ப வீட்டிற்கு வந்துடு என்று கூப்பிட பரணி சண்முகம் ரொம்ப நல்லா பார்த்துப்பதாக சொல்கிறாள்.
சௌந்தரபாண்டி இதை கேட்டு அதிர்ச்சியாக பாக்கியம் சந்தோசம் அடைகிறாள். மேலும் தான் வாங்கி வந்த சூட்கேஸை கொடுத்து அமெரிக்கா போகணும் என்பதை நியாபகப்படுத்தி விட்டு கிளம்புகிறார். சண்முகம் பரணியை குளிக்க வைக்க அவளுக்கு சாம்பிராணி போட்டு விட்டு அக்கறையாக பார்த்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிலையை மீட்க கை கோர்த்த வெற்றி, மகேஷ்.. துளசிக்கு நேர்ந்தது என்ன? கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி கையில் இருந்த சிலையை ரவுடிகள் திருடி சென்ற நிலையில் இன்று, துளசி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் தான் இப்படி ஆகி விட்டதாக அக்கம் பக்கத்தினர் பேச தொடங்குகின்றனர். ரவுடிகள் தள்ளி விட்டதில் அஞ்சலிக்கு காயம் ஏற்பட அதை பார்த்த மகேஷ் டென்ஷன் ஆகிறான்.
தியா பாப்பா வெற்றி பூஜையில் இருக்கும் சமயத்தில் வந்து அவனிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்று நடந்த விஷயத்தை சொல்கிறாள். இதனால் வெற்றி துளசிக்காக சிலையை தேடி கிளம்ப மகேஷ் அஞ்சலியை தள்ளி விட்டவனை சும்மா விட கூடாது என்பதற்காக வெற்றியுடன் கிளம்பி செல்கிறான். ட்ரோன் மூலமாக சந்தேகப்படும் ஆளை கண்டுபிடித்து சண்டையிட்டு சிலையை கைப்பற்றுகின்றனர்,
மகேஷ் என் அஞ்சலியையா தள்ளி விட்ட என்று ரவுடிகளை அடி வெளுத்து எடுக்கிறான். கோவிலில் திவ்யா, ப்ரீத்தி என எல்லாரும் சிலையை கொண்டு வந்து விடுகின்றனர். துளசி மட்டும் சிலையுடன் வராமல் இருக்க வெற்றி சரியான நேரத்தில் சிலையை கொண்டு வந்து கொடுக்கிறான். வெற்றியின் அம்மா இதை பார்த்து உன்னுடைய கல்யாணத்தை விட அவளுக்கு சிலையை கண்டு பிடித்து கொடுக்கிறது முக்கியமா என்று சத்தம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.