/indian-express-tamil/media/media_files/2025/05/08/f2wAh0xV5996wptvx4hz.jpg)
திருவிழாவில் கவின் கொடுத்த அதிர்ச்சி.. வெற்றி செய்த விஷயம் - எட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசிக்காக ரௌடிகளிடம் சண்டை போட்டு கடத்தப்பட்ட சிலையை மீட்டுக் கொண்டு வந்த நிலையில் இன்று, வெற்றி சிலையுடன் வந்ததும் அவனது அம்மா உனக்கு இதெல்லாம் தேவையா என்று கோபப்படுகிறாள். வெற்றி சிலை கிடைக்கலாம்னு துளசி எல்லாரும் தப்பா பேசுவாங்க இன்று அவளுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறான்.
இதைத்தொடர்ந்து வெற்றி துளசியுடன் காதலை சொல்லி விடலாம் என்று வர அப்போது துளசிக்கு பார்த்த மாப்பிள்ளை அவளுடன் பேசிக்கொண்டு இருக்க வெற்றி கடுப்பாகிறான். மேலும் துளசி மாப்பிள்ளையிடம் வெற்றி பற்றி பெருமையாக சொல்கிறாள். இதனால் வெற்றி இப்படி பெருமையா பேசுற உன்கிட்ட தன்னுடைய காதலை எப்படி சொல்றது என தெரியாமல் தவிக்கிறான்.
அடுத்து கோவிலில் ஒரு சிறிய பூஜை நடக்க அதில் எல்லோரும் கலந்து கொள்கின்றனர். பிறகு சிவராமன் குடும்பத்தில் துளசியின் மாப்பிள்ளையும் பல்லக்கை தூக்க வெற்றியின் நண்பன் மாப்பிள்ளையின் காலை மிதித்து அதன் பல்லக்கு தூக்க முடியாதபடி செய்கிறான். அடுத்து வெற்றி அவனுக்கு பதிலாக பல்லுக்கு தூக்குகிறான். அதேபோல் வரதராஜன் கவினை பல்லக்கு தூக்க சொல்லி கூப்பிட அவன் முகத்தை மறைத்தபடி பல்லக்கு தூக்குகிறான்.
அஞ்சலி கவினை பார்த்து அவரை பின்தொடர கவின் அவள் கண்ணில் படாமல் ஓடுகிறான். இன்னொரு பக்கம் கேசவன் பணப் பிரச்சனையால் ரகுராம் பணத்தை திருடியது தனது மனைவியின் நகையை எடுத்துக்கொண்டு போலி நகையை மாற்றி வைக்க முயற்சி செய்கிறான். இங்கே கோவிலில் அஞ்சலி கவினை துரத்த அவன் நேராக மகேஷிடம் சென்று நான் உங்களை எங்க காலேஜ்ல பார்த்து இருக்கேன் என்று சொல்கிறான்.
மகேஷ் அப்படியா எந்த காலேஜ் என்று கேட்க காலேஜ் பெயரை சொன்னதும் என் மனைவி அஞ்சலியும் அந்த காலேஜ்ல தான் படிச்சா.. அவளை தெரியுமா என்று அஞ்சலியை அறிமுகம் செய்ய கவின் தெரியாது என ஷாக் கொடுக்கிறான். இதனால் வீட்டுக்கு வந்த அஞ்சலி ரூமுக்குள் சென்று கவின் ஏன் இப்படி சொன்னான் என்று கண்ணீர் விட்டு அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடத்தப்படும் கனி.. வீரா மனதில் இடம்பிடிக்கும் கௌதம்.. நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சூட்கேஸை வாங்கி வந்து பரணிக்கு அமெரிக்கா போக வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தி விட்டு சென்ற நிலையில் இன்று, ரத்னா அறிவழகனிடம் பேசி கொண்டிருக்க இதை பார்க்கும் வெங்கடேஷ் இவனுக்காக தானே என்னை வேண்டாம்னு தூக்கி போட்ட என்று கடுப்பாகிறான்.
அறிவழகன் கிளம்பியதும் வெங்கடேஷ் ரத்னாவிடம் பிரச்சனை செய்து அவளது புடவையை தொடப் போக பக்கத்தில் இருந்த கனி வெங்கடேஷ் கையை பிடித்து கடித்து விடுகிறாள், வெங்கடேஷ் கனியை அங்கிருந்து கடத்தி செல்கிறான். ரத்னா வீட்டிற்கு ஓடி வருகிறாள், ஷண்முகம் இல்லாத நிலையில் போன் போட்டு அண்ணனுக்கும் முத்துபாண்டிக்கும் விஷயத்தை சொல்ல இருவரும் பயங்கர கோபத்தில் கிளம்பி செல்கின்றனர்.
அப்போது கௌதம் ஒரு பெண்ணை கடத்தி செல்வதை பார்த்து வெங்கடேஷிடம் சண்டையிட வெங்கடேஷ் கௌதமை அடித்து துவைத்து எடுக்கிறான். அங்கு வந்த சண்முகம் முத்துப்பாண்டி வெங்கடேஷை அடித்து ஓட விடுகின்றனர், வீரா மற்றும் சண்முகத்திற்கு கனியை காப்பாற்ற முயற்சி செய்த கௌதம் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படுகிறது. அடுத்து கௌதம் வீட்டிற்கு வர அங்கு வெங்கடேஷ் காத்திருக்கிறான்.
இவை அனைத்தும் வைஜெயந்தியின் திட்டம் தான் என்பது தெரிய வருகிறது. வெங்கடேஷ் அறிவழகன் வெளியே வராதபடி அவனை பிடித்து உள்ளே போடணும் என்று உதவி கேட்கிறான். கௌதம் வீராவை காதலித்து திருமணம் செய்யணும் என்று வைஜெயந்தி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பவரை காட்டிய கார்த்தி.. சிவனாண்டிக்கு வந்த வார்னிங், திருவிழாவில் காத்திருந்த அதிரடி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் சரியான நேரத்தில் யாக பூஜைக்கு வந்த நிலையில் இன்று, கார்த்தி மற்றும் ராஜராஜன் ஆகியோர் ஒன்று சேர்ந்து யாகபூஜையில் கலந்து கொள்கின்றனர். மீண்டும் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் துரை இந்த ஊர்ல நான் தான் ராஜா.. நான் சொல்ற மாதிரி இங்க எல்லாம் நடக்கணும். இல்லனா தூக்கி உள்ள வச்சிடுவேன் என்று மிரட்டுகிறான்.
இந்த சமயத்தில் அங்கு வந்த ஐ.ஜி என்னயா பண்ணிட்டு இருக்க என்று திட்டி வார்னிங் கொடுத்து துரத்தி விடுகிறார். பிறகு இன்ஸ்பெக்டர் துரை சிவனாண்டியை சந்தித்து எனக்கு என்னமோ அந்த ராஜா சாதாரண ட்ரைவர் மாதிரி தெரியல என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்கிறான். அடுத்து யாக பூஜை நல்லபடியாக நடந்து முடிந்ததும் வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரி உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தப்போ அந்த ராஜசேதுபதி வந்து நிற்கல என்று சத்தம் போட ராஜராஜன் அவளை சமாதானம் செய்கிறான்.
அதனை தொடர்ந்து ரோகினி நீங்க செய்யுறது எல்லாம் சரியே இல்ல.. எனக்கு ரத்தம் கொடுத்தவங்களை நான் பார்க்கணும் என்று சத்தம் போட மயில்வாகனம் ராஜாவுக்கு தான் அவங்களை தெரியும் என்று சொல்கிறான், அடுத்த நாள் கார்த்தி ரோஹிணியை கோவிலுக்கு அழைத்து வர ரத்தம் கொடுத்து காப்பாற்றியது பாட்டி பரமேஸ்வரி தான் என்று அறிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.