வழுக்கி விழுந்த வில்லி; அப்பாவை கொல்ல வந்தது யார்? விசாரணையில் இறங்கும் மகன்!

கலசத்துடன் பாட்டி என்ட்ரி கொடுக்க, அப்பா வைகுண்டத்தை கொலை செய்ய முயன்றது யார் என்பது குறித்த விசாரணையில் இறங்குகிறான் சண்முகம்.

கலசத்துடன் பாட்டி என்ட்ரி கொடுக்க, அப்பா வைகுண்டத்தை கொலை செய்ய முயன்றது யார் என்பது குறித்த விசாரணையில் இறங்குகிறான் சண்முகம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Kd anna and Ket

வழுக்கி விழுந்த வில்லி.. கலசத்துடன் என்ட்ரி கொடுக்கும் பரமேஸ்வரி பாட்டி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திர கலாவின் திட்டத்தை கார்த்திக் சுக்கு நூறாக்கிய நிலையில் இன்று, சிவனாண்டி விருமனுக்கு போன் போட்டு கார்த்திக் கலச பூஜைக்கு வந்தால் தகவல் கொடுக்க சொல்லி சொல்கிறான். இதைத்தொடர்ந்து இங்கே மண்டபத்தில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள்.

இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வர பாட்டி வரும் சமயத்தில் சந்திரகலா இங்கு இருக்கக் கூடாது என திட்டமிட்டு வாழைப்பழம் தோலை கீழே போட்டு அவளை வழுக்கி விழ வைக்கின்றனர். பிறகு மயில்வாகனம் சந்திர கலாவை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று எக்ஸ்-ரே, ஸ்கேனிங் என எல்லாவற்றையும் எடுக்க வைத்து நேரத்தை தாமதப்படுத்துகிறான். இங்கே மண்டபத்தில் இளையராஜாவும் இங்கும் அங்குமாக நடந்தபடி இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்குள் நுழைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாயை விட்டு வம்பில் மாட்டிக்கொண்ட சௌந்தரபாண்டி.. சண்முகத்தின் கோபத்தால் நடக்கப்போவது என்ன? அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment
Advertisements

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் முத்துப்பாண்டி துப்பாக்கியை எடுத்துக்கொள்ள வைஜெயந்தி ஆட்கள் கனியை கடத்திக் கொல்ல திட்டமிட்ட நிலையில் இன்று, கனியை ஸ்கூலில் விட்டு சண்முகம் கிளம்பிய பிறகு ரவுடிகள் அவளை கடத்த திட்டமிடுகின்றனர். மறுபக்கம் வைகுண்டத்தை பார்ப்பதற்காக இசக்கி, பாக்கியம் என எல்லோரும் சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர்.

இசக்கி மற்றும் பாக்கியம் என இருவரும் சூடாமணி தான் உன் உயிரை காப்பாற்றி இருக்காங்க என்று சொல்லி கண்கலங்கி பேசிக் கொள்கின்றனர். சண்முகம் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் விஷயம் அறியும் சௌந்தரபாண்டி இதுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் சண்முகம் பையன் நம்பள ஏதாவது பண்ண வாய்ப்பிருக்கு, அதுக்குள்ள நாம ஏதாவது செய்யணும் என யோசிக்கிறார்.

அடுத்ததாக சண்முகம் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து எதுக்காக இப்படி பண்ண என்று கேட்க அவன் எனக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, எனக்கு எதுவும் தெரியாது என நடிக்கிறான். அவனது பெற்றோர் எங்க பையன் உங்க பக்கமே வரது கிடையாது, அவனை விட்டுடுங்க என பேசுகின்றனர். சண்முகம் இதுல உனக்கு தொடர்பு இருக்குன்னு மட்டும் தெரிய வந்துச்சு உன் அப்பா அம்மாவ உசுரோட விடமாட்டேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறான்.

அடுத்ததாக வைகுண்டம் பாண்டியம்மாவிடம் இப்படி சுலபமா ஒரு விஷயம் செய்யலாம்னு தெரிஞ்சிருந்தா நாமளே நாலு ஐந்து பேரை ரெடி பண்ணி வைகுண்டத்தை போட்டுத் தள்ளி இருக்கலாம் என்று சொல்ல வெட்டுக்கிளி இதைக் கேட்டு விடுகிறான். நீதான் இதுக்கெல்லாம் காரணம் இது அண்ணன் கிட்ட சொல்றேன் என்று சண்முகத்திடம் சொல்வதற்கு கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரேவதிக்கு உருவாகும் களங்கம்.. வெற்றியின் காதலியை தேடும் வில்லன் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை வெற்றி கைப்பற்றிய நிலையில் இன்று, சிவராமன் பார்க்கில் இருக்கும் போது அவரது நண்பன் இன்னும் ஏன்டா வீட்டுல வேலை போன விஷயத்தை சொல்லாம இருக்க சொல்லிட வேண்டியதுதானே என்று கேட்க துளசியோட கல்யாணம் முடியட்டும் அதுக்கப்புறம் எல்லா உண்மையையும் சொல்லி விடுகிறேன் என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து கந்துவட்டிக்காரன் ரேவதியை கார்கள் கடத்தி ரோடு ரோடாக சுற்றி ஆடைகளை பிடித்துவிட்டு இறக்கி விட்டுச் செல்ல எல்லோரும் ரேவதியை பற்றி தவறாக பேசுகின்றனர். இதனால் அவள் தலை குனிந்து நிற்க முருகன் உனக்காக நான் இருக்கேன் என ஆறுதல் சொல்கிறான். அடுத்ததாக துளசிக்கு பார்த்த மாப்பிள்ளை கல்யாணத்தை சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க என்று பிரஷர் கொடுக்க சிவராமன் லட்சுமியிடம் இது பற்றி பேச லட்சுமி துளசி கழுத்தில் இருக்கும் தாலி பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.

பிறகு துளசியிடம் சீக்கிரம் இந்த தாலியை கட்டுனவன் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என பேசுகிறாள். இதைத்தொடர்ந்து மறுபக்கம் முனுசாமி தன்னுடைய ஆட்களிடம் வெற்றியை பாலோ பண்ணுங்க அவன் காதலிக்கிற பொண்ணு யாரு என்பதை கண்டுபிடிக்கணும் என்று சொல்கிறான். பிறகு வெற்றி துளசிக்கு போன் போட்டு என்ன மேடம் அந்த ஆள் யார் என்பது தெரிந்ததா என்று விசாரிக்க இல்ல வெற்றி யாரோ ஒருத்தன் என் பிரண்ட்டோட கணவரை மிரட்டி அந்த ஹார்ட் டிஸ்கை-ஐ எடுத்துட்டு போய்ட்டாங்க என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: