மாமனாரை கொல்ல துணிந்த மருமகன்; வெளிநாடு செல்லும் மனைவியை பிரியும் கணவன்: வில்லன் சூழ்ச்சி பலிக்குமா?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் கெட்டிமேளம் சீரியலின் எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் கெட்டிமேளம் சீரியலின் எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Anna andhg

ஆஸ்திரேலியா கிளம்பிய ரேவதி.. ஃபோன் காலால் காத்திருந்த ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாமுண்டீஸ்வரி ஆகியோர் ஹாஸ்பிடலுக்கு சென்று இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு வந்த நிலையில் இன்று மண்டபத்தில் வைத்து கலச பூஜை நடந்து முடிகிறது. இதைத்தொடர்ந்து சந்திர கலா மற்றும் சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்கு வர சந்திரகலா திட்டம் தோல்வியடைந்ததை நினைத்து வருத்தம் அடைகிறாள்.

அதன் பிறகு கார்த்திக்கை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என யோசிக்கின்றனர். பிறகு ரேவதியின் பிளைட் டிக்கெட் கீழே விழ சந்திரகலா சாமுண்டீஸ்வரி அதை பார்க்க போகும் சமயத்தில் மயில்வாகனம் அந்த டிக்கெட்டை எடுத்து ரேவதியை காப்பாற்றுகிறான். பிறகு கார்த்தியிடம் ரேவதி ஆஸ்திரேலியா என்று விசாரிக்க அவனின் ஆமாம் என்று சொல்ல மயில்வாகனம் ரேவதியிடம் நீ செய்வது சரியில்ல என்று அறிவுரை வழங்குகிறான்.

அடுத்த நாள் கார்த்திக் ரேவதி வெளியே கிளம்ப சாமுண்டீஸ்வரி உங்களுடன் நானும் வருவதாக சொல்ல கார்த்திக் நானே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன், பெங்களூருக்கு ஒரு கல்யாணத்துக்கு போறாங்க என்று பொய் சொல்லி ரேவதியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான். ரேவதி கார்த்தியுடன் ஏர்போர்ட்டுக்கு வரும் சமயத்தில் சந்திரகலா போன் செய்து நீ ஆஸ்திரேலியா போறது எனக்கு தெரியும் இப்போ இருக்க சூழ்நிலையில் இதுதான் சரியான முடிவு என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள். ரேவதி கார்த்தியிடம் காரை நிறுத்த சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

மாலையும் கழுத்துமாக வந்து நின்ற முருகன், ரேவதி.. சிவராமன் குடும்பத்திற்கு ஷாக் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கந்து வட்டிக்காரன் ரேவதியை அவமானப்படுத்திய நிலையில் இன்று, ரேவதி கலங்கிப் போய் இருக்க முருகன் உனக்காக நான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான். இதை அடுத்து சிவராமன் நண்பன் எவ்வளவு நாளைக்கு இப்படி பார்க்கிலேயே உக்காந்துட்டு இருக்கிறது ஏதாவது வேலையை தேடனும் என்று சொல்ல சிவராமன் கேட்டரிங் வேலை ஒன்றை கேட்டு வைத்திருப்பதாக சொல்கிறார்.

அடுத்து ரேவதி கடைக்கு யாரும் வராமல் அவரது நடத்தையைப் பற்றி தப்பாக சொல்லி பேச ரேவதி மனம் உடைந்து போய் தற்கொலை முயற்சி செய்யக் செல்கிறாள். கடைசி நொடியில் காப்பாற்றும் முருகன் புவனாவிடம் விஷயத்தை சொல்லி ரேவதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சொல்ல புவனாவும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள். இன்னொரு பக்கம் வெற்றியின் அம்மா நான் சொல்ற பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும் என்று வெற்றியிடம் சத்தியம் வாங்குகிறாள்.

லட்சுமி முருகன் ரேவதிக்கு ஒருத்தர் ஒருத்தர புடிச்சிருக்கு ரேவதி ஓட அம்மாகிட்ட பேசி அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட ரகுவரன் இவ்வளவு நாளா அவனுக்கு தண்டசோறு போட்டுட்டு இருந்தோம், இப்போ அந்த பொண்ணு ஏன் கட்டிட்டு வந்து தண்டசோறு போடணுமா என்று கோபப்பட்டு பேச முருகன் ரேவதி மாலையும் கழுத்துமாக வந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து ஏதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சௌந்தர பாண்டியை கொல்ல துணிந்த சண்முகம்.. வைஜெயந்தி போடும் புது கணக்கு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தர பாண்டி எதற்கு சொன்ன விஷயத்தை வெட்டு கிளி கேட்ட நிலையில் இன்று, வெட்டுக்கிளி சண்முகத்துடன் எல்லாத்தையும் செய்தது சௌந்தரபாண்டி தான் என்று சொல்ல சண்முகம் கையில் வைத்திருந்த தூக்கு கயிறுடன் சௌந்தரபாண்டியை சந்தித்து கொல்ல முயற்சிக்க பரணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் போராடி அவரை காப்பாற்றுகின்றனர்.

வைஜெயந்தி இவை அனைத்தையும் தூரத்திலிருந்து பார்த்து சண்முகத்துக்கு சௌந்தரபாண்டி மேல தான் சந்தேகம் வந்திருக்கு என நிம்மதி அடைகிறாள். தன்னுடைய ஆட்களிடம் சௌந்தரபாண்டியை சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்கிறாள். பிறகு சௌந்தரபாண்டி வீட்டுக்கு வர பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் அவரை கொல்ல காத்துக்கொண்டிருக்க சௌந்தரபாண்டி மேலும் அதிர்ச்சி அடைகிறார்.

இதை அடுத்து பரணி மற்றும் முத்துப்பாண்டி மிகவும் கஷ்டப்பட்டு இவர்களிடம் இருந்து சௌந்தரபாண்டியை காப்பாற்றுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: