/indian-express-tamil/media/media_files/2025/04/01/otY7rbdZbHLoMgZoMXi4.jpg)
முருகனை அவமானப்படுத்தும் ரகுவரன்.. அண்ணனுக்காக துளசி எடுத்த முடிவு - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் மகேஷுக்கு பேனிக் அட்டாக் உருவான நிலையில் இன்று, அஞ்சலி அவனை பைக்கில் உட்கார வைத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து அட்மிட் செய்கிறாள். மகேஷை பரிசோதனை செய்த டாக்டர் ஒன்னும் பயப்படத் தேவையில்லை என்று சொல்கிறார். அதே நேரத்தில் இது முதல்முறையாக வந்திருக்காது சின்ன வயசுல கண்டிப்பா ஏற்கனவே இந்த மாதிரி பேனிக் அட்டாக் வந்திருக்கும் என்று சொல்கிறார்.
அடுத்த நாள் காலையில் முருகன் ரேவதி ஹாலில் படுத்திருப்பதை பார்த்த ரகுவரன் குழந்தை எல்லாம் இருக்காங்க இப்படி அநாகரிகமா நடந்துக்கலாமா என்று பேசி அவமானப்படுத்துகிறான். இதை பார்த்து துளசி வருத்தப்படுகிறாள். பிறகு துளசி அஞ்சலிக்கு போன் செய்ய அஞ்சலி டல்லாக பேசுவதை பார்த்து என்னாச்சு என்று விசாரிக்க மகேஷ் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்கிறாள். பிறகு துளசி வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
இதை கேட்ட அஞ்சலி நீயும் தியா பாப்பாவும் கொஞ்ச நாளைக்கு எங்க வீட்ல வந்துருங்க.. அண்ணனும் அண்ணியும் உன்னோட ரூம்ல தங்கிப்பாங்க என்று ஐடியா கொடுக்க துளசியின் தியாவுடன் வருவதாக வாக்கு கொடுக்கிறாள். அதன் பிறகு அஞ்சலி வீட்டில் கொஞ்ச நாள் தங்கி விட்டு வருவதாக சொல்லி தியாவுடன் துளசி கிளம்பி வருகிறாள். முருகன் அஞ்சலிக்கு பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்து துளசியை வழி அனுப்பி வைக்கிறான்.
அதனை தொடர்ந்து ஹாஸ்பிடலில் மகேஷ் கண்விழிக்க, அஞ்சலி என்னங்க ஆச்சி நான் ரொம்ப பயந்துட்டேன் என்று கண் கலங்குகிறாள். மகேஷ வரதராஜன் நிலத்தை தர மாட்டேன் என்று சொல்லி விட்டதாக சொல்கிறான். அதன் பிறகு மகேஷை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வர தியா மற்றும் அஞ்சலியும் வந்து விடுகின்றனர். மகேஷ் மற்றும் தியா இருவரும் நெருக்கமாகி விடுகின்றனர். அப்போது விளையாடிக் கொண்டிருந்த தியா பொருட்களை இடம் மாற்றி வைத்து விடுகிறாள். இதனால் அடுத்து நடக்கப்போவது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹாஸ்பிடலில் ரேவதி.. கார்த்திக்கு வந்த போன் கால், நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி ஆஸ்திரேலியா சொல்ல முடியாமல் போன நிலையில் இன்று ஹாஸ்பிடலில் இருந்து போன் கால் வர கார்த்திக் வந்து செல்ல ரேவதி கையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருப்பது தெரிய வருகிறது. கையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் விமானத்தில் செல்ல முடியாது என்பதால் அவள் வெளிநாடு போக முடியவில்லை என்பது தெரிய வருகிறது.
இதைத்தொடர்ந்து கார்த்திக் ரேவதியுடன் வீட்டுக்கு வர அவன் ஆஸ்திரேலியா போக முடியாத விஷயத்தை சொல்ல சந்திரகலா கடுப்பாகிறாள். இதைத்தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி கும்பாபிஷேக பத்திரிக்கையுடன் வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்துகிறாள். ஆனாலும் முறையாக செய்ய வேண்டும் என்று சொல்லி பரமேஸ்வரி பாட்டி பத்திரிக்கையை கொடுத்து விட்டு கிளம்பி செல்கிறார்.
அதன் பிறகு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து ரேவதிக்கு கையில் அடிபட்ட காரணத்தினால் கார்த்தியை ஊட்டி விட சொல்ல முதலில் தயங்கிய கார்த்தி பிறகு வேறு வழியில்லாமல் ஊட்டி விடுகிறான். பிறகு காலேஜில் ஸ்வாதியை சந்தித்த சிலர் உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு மியூசிக் டைரக்டர் ஒருத்தர் உங்களுக்கு வாய்ப்பு தரதா சொல்லி இருக்காரு என்று சொல்கின்றனர். ஆனால், சுவாதி இப்போ இருக்க சூழ்நிலையில் அது எதுவும் சரியா வராது என மறுத்து விடுகிறாள்.
அதன் பிறகு அந்த நபர்கள் சிவனாண்டியை சந்தித்து பேச இதெல்லாம் அவனுடைய திட்டம் என்பது தெரிய வருகிறது. தொடர்ந்து கார்த்திக் மற்றும் ரேவதி ஹாஸ்பிடலுக்கு செல்ல ரேவதி ஊசிக்கு பயந்து கார்த்தியின் கையைப் பிடித்துக் கொள்கிறாள். மாயா மகேஷ் கேட்டு இவர்களை சந்திக்க வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடத்தப்படும் கனி.. தங்கையை காப்பாற்ற சீறி பாயும் சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோட்டில் வைஜெயந்தியின் ஆட்கள் கனியை கடத்த தயாராக இருந்த நிலையில் இன்று, ரத்னா கோவிலுக்கு கிளம்ப அறிவழகன் இந்த விஷயம் அறிந்து நானும் உன் கூட வருகிறேன் என்று கிளம்புகிறான். இதைப் பார்த்த மாலதி டீச்சர் உங்களுக்கு முன்னாடி நான் கோவிலுக்கு போறேன் என்று கிளம்பி செல்கிறாள்.
அதன் பிறகு இருவரும் கோவிலுக்கு வர ஏற்கனவே மாலதி டீச்சர் இங்கு இருக்க அறிவழகன் இங்கு என்ன பண்றீங்க என்று கேட்க 108 விளக்கு போட்டா நல்லபடியா கல்யாணம் ஆகணும்னு சொன்னாங்க, அதனால விளக்கு போட வந்தேன் என்று சொல்கிறாள். மேலும் அறிவழகனிடம் உதவி கேட்க அறிவழகன் அவளுக்கு உதவி செய்ய இதை பார்த்த ரத்னா கடுப்பாகிறாள்.
இன்னொரு பக்கம் வைஜெயந்தியின் ஆட்கள் கனியை கடத்த உடன்குடி இதை பார்த்து சண்முகத்துக்கு தகவல் கொடுக்க சண்முகம் அவர்களை பின்தொடர்ந்து சென்று இருக்கும் இடத்தை சொல்ல சொல்கிறான். பிறகு யாருக்கும் தெரியாமல் சண்முகம் இங்கிருந்து கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.