Advertisment

2-வது திருமணம் செய்ய தடை: முதல் திருமணம் கை கூடுமா? ஜீ தமிழ் சீரியலின் கல்யாண கலாட்டா!

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
KD and NK

கார்த்திகை தீபம் - நெஞ்சத்தை கிள்ளாதே

தீபா கழுத்தில் தாலி ஏறினால் உயிர் போகும்.. கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்

Advertisment

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் மைதிலி ரம்யா தான் தாலியை எடுத்து இருக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று, ரம்யா ஆமாம் தாலி என்கிட்ட தான் இருக்கு, தீபாவுக்கு அவளுக்கு கல்யாணம் நடந்த மாதிரியே எல்லாம் ஆரம்பத்தில் இருந்து நடக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால் தான் இப்படி செய்ததாக சொல்கிறாள். பிறகு அபிராமி தீபா ஆசைப்படியே செய்து விடலாம் என்று முடிவெடுக்கிறாள்.

இதை தொடர்ந்து தர்மலிங்கம் எதுக்கு இதெல்லாம், தீபா இப்படியே இருக்கட்டும் என்று பேச ஐஸ்வர்யா ஏன் பணம் இல்லனு வேண்டாம்னு சொல்றீங்களா என்று கேள்வி கேட்கிறாள், அபிராமி எல்லா செலவையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு தர்மலிங்கம் மீண்டும் ஜோசியரை வந்து பார்க்க அவர் தீபா செய்தது யார் செய்யாத ஒன்னு, அவ தாலியை கழட்டியதால் தான் அபிராமி உயிர் தப்பித்தது.

அப்படி இருக்கும் போது திரும்பவும் தாலி ஏறினா அவங்க உயிர் போய்டும் என்று சொல்ல வீட்டிற்கு வந்த தர்மலிங்கமும் ஜானகியும் கார்த்தியிடம் விஷயத்தை சொல்லி கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று முடிவெடுக்கின்றனர். இவர்கள் பேசுவதை கேட்ட அபிராமி கார்த்திக் கிட்ட எதுக்கு சொல்லி கல்யாணத்தை நிறுத்த போறீங்க? பயப்படும் மாதிரி எதுவும் நடக்காது, நல்லது தானே செய்ய போறோம் என்று சொல்கிறார்.

அதன்பிறகு கார்த்திக்கிடம் சென்று இந்த கல்யாணத்தில் நிறைய தடைகள் வரும்னு எனக்கு தோணுது. என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கணும். நீ நடத்தி கொடுப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணு என்று சத்தியம் வாங்குகிறாள். அடுத்து தீபா கார்த்திக் கொண்டு வந்த பேக்கில் சாமியார் கெட்டப் விக், தாடி ஆகியவை இருப்பதை பார்த்து கையில் எடுக்க அதை எல்லாரும் பார்த்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுவை திருமணம் செய்ய ஓகே சொன்ன கௌதம்.. சபையில் ரேணுகா குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் சகுந்தலா ரேணுகாவை சந்தித்து மதுவை பெண் கேட்க அவள் அதிதியை கேட்பதாக நினைத்து கொண்ட நிலையில் இன்று, சகுந்தலா உட்பட எல்லாரும் சேர்ந்து மதுவை திருமணம் செய்து கொள்ள சொல்லி கௌதமிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதே போல் மறுபக்கம் கௌதமை திருமணம் செய்து கொள்ள ரேணுகா அதிதியிடம் பேசி கொண்டிருக்க மதுமிதா அவருக்கெல்லாம் கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாது, அவருக்கும் உனக்கு வயசு வித்தியாசம் அதிகம் என்று சொல்கிறாள்.

ரேணுகா அவளோட வாழ்க்கையை கெடுக்காத என்று திட்ட அதிதியும் கௌதமை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்கிறாள். இங்கே கௌதமும் மதுவை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொல்கிறான். அடுத்த நாள் மாப்பிள்ளை வீடு பார்க்க மதுமிதா குடும்பத்தினர் மொத்தமாக கிளம்பி வருகின்றனர். முதலில் அதிதி வீட்டிற்குள் நுழைய மதுமிதா கடைசியாக உள்ளே நுழைகிறாள்.

அதன் பிறகு நாங்க எங்க கையால் தான் கல்யாண பொண்ணுக்கு புடவை கொடுப்போம் என்று சொல்லி சகுந்தலா புடவையை எடுத்து கொண்டு வர மதுமிதா குடும்பத்தினர் அதிதிக்கு தான் கொடுக்க போவதாக நினைக்க அதிதியை தாண்டி போய் மதுவிடம் கொடுக்க எல்லாரும் ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment