தோழியை கொல்ல துணிந்த வில்லி: கல்யாணத்தை நிறுத்துவாரா நாயகி? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு

author-image
WebDesk
New Update
zee tamil Serial

கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஐஸ்வர்யாவை அலற விட்ட அருண்.. கழுத்தில் கத்தியை வைத்த ரியா

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா ரம்யாவுடன் சாமியாரை பார்க்க கிளம்பிய நிலையில் இன்று, தீபா சாமியாரை பார்க்கணும், அத்தை சரியாக பரிகாரம் பண்ணனும் என்று சொன்னபடியே செல்கிறாள். ரம்யாவும் தனது வார்த்தை ஜாலத்தால் தீபாவை தீர்த்து கட்டும் திட்டத்துடன் அழைத்து செல்கிறாள்.

Advertisment

மறுபக்கம் அருண் ஐஸ்வர்யாவை கோவிலுக்கு அழைத்து நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்காக என்னமோ பண்ணுவேன்னு பில்டப்பா கொடுத்தியா இப்போ அது ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்லி அழைத்து வந்து உப்பின் மீது அங்கபிரதர்சனம் செய்ய சொல்கிறான். வசமாக சிக்கி கொண்ட ஐஸ்வர்யா பண்ண முடியாது என்று மறுக்க முடியாமல் தவிக்கிறாள்.

இதையடுத்து ஐஸ்வர்யா முதல் பரிகாரத்தை முடித்ததும் அருண் சாமி அடுத்த பரிகாரத்தை சொல்லுங்க என்று சொல்கிறான். சாமியார் ஐஸ்வர்யாவை கையை காட்ட சொல்லி அக்கினி சட்டியை வைத்து அலற விடுகிறார். அடுத்ததாக ரியாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு ராஜேஸ்வரி மார்க்கெட் சென்றிருக்க திரும்பி வரும் போது போலீசுடன் வந்து இறங்க ரியா அதிர்ச்சி அடைகிறாள்.

கிச்சனுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் அவள் ரியா ரியா என அழைத்தபடியே ராஜேஸ்வரி உள்ளே வர கழுத்தில் கத்தியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

எழில் கல்யாணத்தை நிறுத்த சுடர் எடுத்த சபதம்.. அடுத்து நடக்க போவது என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் மனோகரியை திருமணம் செய்து கொள்வதாக சொன்ன நிலையில் இன்று, எழில் இந்து போட்டோவை வைத்து கொண்டு நான் எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு எனக்கே தெரியல என்று வருத்தப்பட்டு பேசுகிறாள். இதை சுடர் மறைந்திருந்து கேட்கிறாள். மறுபக்கம் மனோகரி தனது அப்பாவுக்கு போன் செய்து எழில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொன்ன விஷயத்தை சொல்லி சந்தோசப்படுகிறாள்.

அடுத்து குழந்தைகளும் மனோகரி அப்பாவை திருமணம் செய்து கொள்ள போவதில் விருப்பமில்லாமல் இருக்க சுடர் என்னாச்சி என்று கேட்க அப்பாவுக்கும் மனோகரி ஆன்டிக்கும் கல்யாணமாகிறது எங்களுக்கு சுத்தமா புடிக்கல என்று சொல்ல, சுடர் அப்படினா எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்திடலாம் என்று சபதம் எடுக்கிறாள்.

பிறகு சுடர் இந்து மற்றும் தீபாவை சந்தித்து எழில் சார் இப்படி கைதாக அந்த மனோகரி தான் காரணமாக இருப்பாங்கன்னு எனக்கு சந்தேகமாக இருக்கு என்று சொல்கிறாள். மறுபக்கம் கனகவல்லி எழில் முடிவால் வருத்தமாக இருக்க, ராமையா என்னமா எழில் ஐயா இப்படியொரு முடிவு எடுத்துட்டாரு என்று பேச அவர் அமைதியாகவே இருக்கிறாள்.

பிறகு ராமையா வெளியே வர சுடர் எதிரே வர ராமையா சுடரிடம் இதையே சொல்லி புலம்ப சுடர் இந்த கல்யாணம் நடக்காது, எப்படியாவது நிறுத்திடுவேன் என்று சொல்ல ராமையா எந்த உதவியா இருந்தாலும் என்கிட்ட கேளு நான் செய்யுறேன் என்று சொல்கிறார். இறுதியாக எழில் சாப்பிடாமல் இருக்க செல்வி சாப்பாடு கொண்டு போக சுடர் அதை வாங்கி கொண்டு எழில் ரூமுக்குள் நுழைகிறாள்.

எழிலை சாப்பிட சொல்ல சுடர் சாப்பிட சொல்ல எழிலும் சாப்பிட சுடர் தண்ணீர் எடுக்க கீழே குனியும் போது கழுத்தில் இருக்கு தாலி கீழே தொங்க எழில் அதை பார்த்து விடுவானா இல்லையா என்ற பில்டப் எகிறுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: