Advertisment

ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்: மனோகரி மாட்டுவாரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் நிளைத்தேன் வந்தாய் மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடுகள் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
KD AND NV

நினைத்தேன் வந்தாய் - கார்த்திகை தீபம்

குழப்பத்தை ஏற்படுத்திய போன் கால்.. ஷாக்கான ரம்யா

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்காக சமைத்து காத்திருக்க ரம்யா கார்த்தியை போக விடாமல் தடுக்க ஒரு பிளான் போட்ட நிலையில் இன்று,கார்த்திக் அபிராமியை பார்த்து விட்டு லேட்டாக வீட்டிற்கு வர தீபா ஷோபாவில் படுத்தபடி தூங்கி கொண்டிருக்க கார்த்திக் அவளை டிஸ்டர்ப் செய்யாமல் போர்வையை போத்தி விட்டு ஹாஸ்பிடல் வந்து விடுகிறான். 

மறுநாள் காலையில் நர்ஸ் ஒருவர் தீபாவுக்கு போன் செய்து நீங்க சொன்ன மாதிரியே செய்து விட்டதாக சொல்ல நான் என்ன சொன்னேன் என்று தீபா குழப்பமடைய மீனாட்சிக்கும் மைதிலிக்கும் இது ரம்யாவின் நாடகம் என்பது தெரிய வருகிறது.

இருந்தாலும் அவர்கள் எதுவும் பேச முடியாமல் இருக்கின்றனர். 

இதையடுத்து யாரோ ஒரு பிராடு போன் பண்ணி வேலை பார்த்து விட்டு இருக்காங்க என்று சொல்லி பேச ரம்யா ஷாக்காகி எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருப்பதாக சொல்லி நழுவி கொள்கிறாள். அதன் பிறகு கார்த்திக் கோவிலுக்கு வர அங்கு பெண் சாமியார் வந்து நீ ஒரு வேண்டுதலை வச்ச நியாபகம் இருக்கா என்று கேட்கிறார்.

அப்போது பிளாஸ்கட்டில் கார்த்திக் தனது அம்மா கண் திறக்காமல் உங்களை கும்பிட மாட்டேன் என்று சொல்லிய விஷயம் நினைவுக்கு வந்து அவன் சாமிக்கு நன்றி சொல்ல கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கையும் களவுமாக சிக்கிய செல்வி.. டிராமா போட்ட மனோகரி, எழில் எடுத்த முடிவு

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் பணம் காணாமல் போக மனோகரி ராமையாவின் பையையும் பார்க்க சொல்லிய நிலையில் இன்று, ராமையாவின் பையை திறந்து பார்த்து அதில் பணம் இருக்கிறதா என்று தேடிப் பார்க்க பணம் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எழில் ராமையாவை திட்டி வீட்டை விட்டு வெளியே போக சொல்ல அவர் மொத்தமாக உடைந்து விடுகிறார்.

இதையடுத்து குழந்தைகள் கீழே வந்து விட கவின் பணத்தை திருடியது ராமையா இல்லை செல்வி தான் என்று வீடியோ ஆதாரத்தை போட்டு காட்ட மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். உடனே அடிப்பாவி நீயா இப்படி பண்ண இனிமே இந்த வீட்ல நீ இருக்கவே கூடாது, வெளியே போ என்று அடித்து டிராமா போடுகிறாள்.

உடனே செல்வி எழில் காலில் விழுந்து ஐயா நான் தெரியாமல் பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று கெஞ்சி கேட்க எழில் மன்னித்து விட்டதாக சொல்கிறான்.

அடுத்ததாக ராமையா எழில் சொன்ன வார்த்தைகளால் மொத்தமாக உடைந்து போய் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்ப தயாராகிறார். 

இதைப் பார்த்து சுடர் மற்றும் குழந்தைகள் ராமையாவை போக வேண்டாம் என்று தடுக்க முயற்சி செய்ய எழிலும் ராமையாவிடம் மன்னிப்பு கேட்டு எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment