Advertisment

திருமணம் முடிந்து பெண் பார்க்கும் படலம்: கனவில் வந்த மாப்பிள்ளை யார்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil seerial MKsdj

கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

பொண்ணு பார்க்க வந்த அபிராமி குடும்பம்.. தீபா கேட்ட கேள்வி, ட்விஸ்ட் வைத்த கார்த்திக்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக், தீபாவிற்கு ஆரம்பத்தில் இருந்து எல்லா சடங்குகளையும் செய்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த நிலையில் இன்று, தீபாவை பெண் பார்க்க கார்த்திக் குடும்பத்தினர் அவளது வீட்டிற்கு வருகின்றனர். தீபா எல்லாருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க அபிராமி பொண்ணு லட்சணமா இருக்கா என்று சொல்கிறாள். 

அதன் பிறகு பொண்ணு நல்லா பாடுவானு சொன்னாங்க என்று மீனாட்சி கேட்க, மைதிலி ஆமா கர்நாடிக் மியூசிக் நல்லா பாடுவா நிறைய கச்சேரில பாடி பிரைஸ் எல்லாம் வாங்கியிருக்கா என்று சொல்ல, ஒரு பாட்டு பாட சொல்லுங்க என்று சொன்னதும் தீபா பாட்டு பாடுகிறாள். அதன் பிறகு பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு என்று அபிராமி குடும்பத்தினர் சொல்ல தீபா ரம்யாவை இடிக்க ரம்யா பொண்ணுக்கு மாப்பிள்ளை கிட்ட தனியா பேசணுமாம் என்று சொல்கிறாள்.

அதைத்தொடர்ந்து கார்த்திக், தீபா தனியாக பேச போக கார்த்திக் நான் எம்பிஏ படிச்சிருக்கேன் என்று சொன்னதும், தீபா நான் 12வது பெயில் என்று சொல்ல கார்த்திக் சிரிக்கிறான். அதன் பிறகு எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா என்று தீபா கேட்க என் அம்மா கிட்ட சொல்றேன் என்று கீழே இறங்கி வருகிறான். 

அதன் பிறகு அபிராமியிடம் உங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கா என்று கேட்க அவள் எனக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னதும் கார்த்திக் எனக்கும் பிடிச்சிருக்கு என்று சொல்கிறான். பிறகு தட்டு மாற்றி நிச்சயம் முடித்து கல்யாணத்துக்கு நாள் குறிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழில், மனோகரிக்கு நடந்து முடிந்த நிச்சயம்.. கனவு உண்மையை உடைத்த சுடர்

நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் நிச்சயதார்த்த மேடையில் இந்துவின் மோதிரம் காணாமல் போக அஞ்சலி நான் தான் சுடர் கையில் போட்டு விட்டேன் என்று உண்மையை சொன்ன நிலையில் இன்று, அஞ்சலி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து எதுக்கு சுடர் கையில போட்டு விட்ட என்று கேள்வி கேட்கின்றனர். மனோகரி வேக வேகமாக ஓடி வந்து சுடர் கையில் இருக்கும் மோதிரத்தை கழட்ட முயற்சி செய்ய மோதிரம் கழட்ட முடியாமல் போகிறது. இதனால் எழில் மனோகரியை தடுத்து வேறு மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்கிறான். 

கனகவல்லி வேறொரு மோதிரத்தை கொண்டு வந்து கொடுக்க இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள எல்லோரும் சந்தோஷம் அடைய குழந்தைகளும் சுடரும் சோகமடைகின்றனர். அதன் பிறகு இந்து மற்றும் தீபா இருவரும் எழில் நிச்சயம் பற்றி பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த சுடர் எனக்கு அடிக்கடி கல்யாணம் ஆகுற மாதிரி கனவு வருதுன்னு சொன்னேன்ல.. அந்த கனவுல வரது எழில் தான் என்ற உண்மையை உடைக்க இந்து அதிர்ச்சி அடைகிறாள். 

அடுத்ததாக சுடர் குளிக்க போக குழாயில் தண்ணீர் வராமல் இருக்க அவள் வெளியே வர கனகவல்லி என்னாச்சி என்று கேட்டு மனோகரி ரூமில் குளிக்க சொல்லி அனுப்பி வைக்கிறாள். ஆனால் மனோகரி என்னுடைய ரூமில் குளிக்க கூடாது என துரத்தி விடுகிறாள்.இதனால் சுடர் குழந்தைகளின் ரூமுக்கு வந்து குளிக்கிறாள். இதே நேரத்தில் எழிலும் குளிக்கப் பார்க்க அவனது ரூமிலும் தண்ணீர் வராத நிலையில் அவனும் குழந்தைகள் ரூமுக்கு குளிக்க வர டவலுடன் அவனைப் பார்த்து சுடர் பயந்து போய் கத்தி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment