குழந்தைகளை சமாளிக்க திணறும் வில்லி: ஹீரோவிடம் சாமியார் மாட்டுவாரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

நினைத்தேன் வந்தாய் மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

நினைத்தேன் வந்தாய் மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
KD And NV 2

நினைத்தேன் வந்தாய் - கார்த்திகை தீபம்

சேகரை வெளியே எடுக்க வந்து சிக்கிய ரம்யா.. கார்த்திக் கேட்ட கேள்வி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் இளையராஜா மற்றும் சேகருக்கும் இடையே சண்டை உருவாக போலீஸ் அவர்களை கைது செய்த நிலையில் இன்று, முதலில் ஸ்டேஷனுக்கு வரும் கார்த்திக் போலீசிடம் பேசி இளையராஜாவை வெளியே கொண்டு வர சேகர் என் மேடம் வருவாங்க என்று ஓவர் பில்டப்பாக கொடுக்க ரம்யா கார்த்தி இருப்பதை கவனிக்காமல் உள்ளே வந்து விடுகிறாள்.  கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சியாகும் அவள் சேகர் என்னுடைய பழைய தொழிலாளி என்று சொல்லி சமாளிக்கிறாள்.

சேகர் மற்றும் இளையராஜா என இருவரும் ஒரே மாதிரி கட்டைப்பையை கொண்டு வந்திருக்க இவருவம் பேக்கை மாற்றி எடுத்து செல்கின்றனர், சேகர் பையில் டோப்பா, ஒட்டு தாடி என சாமியார் வேடத்திற்கு பயன்படுத்திய பொருட்களாக இருக்கிறது. மறுபக்கம் அபிராமியை பார்க்க வந்த பரமேஸ்வரி எதுக்கு எனக்கிட்ட சொல்லல என்று கேட்க கார்த்திக் தான் உங்களுக்கு தெரிய வேண்டாம், தெரிந்தால் வருத்தப்படுவீங்கன்னு சொன்னதாக சொல்கிறாள்.

அடுத்து டாக்டர் அபிராமியை டிஸ்ஜார்ஜ் செய்து கொள்ளலாம் என்று சொல்வதோடு அவங்களுக்கு அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்ல கூடாது எனவும் வார்னிங் கொடுக்க, கார்த்திக் என்கிட்ட சொன்ன இந்த விஷயத்தை வேற யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

அடுத்தடுத்து பல்பு வாங்கிய மனோகரி.. எழிலிடம் கோர்த்து விட்டு வேட்டு வைத்த குழந்தைகள் 

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோகரி பிரியாணி சமைத்து பல்பு வாங்கிய நிலையில் இன்று, மனோகரி தன்னுடைய பிளான் தோல்வி அடைந்ததால் இப்படி ஆகிவிட்டது என்று புலம்ப செல்வி அடுத்த ஐடியாவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுங்க அவங்க உங்ககிட்ட ஒட்டிப்பாங்க என்று சொல்கிறாள். 

இதைக் கேட்டு மனோகரி ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து குழந்தைகளுக்கும் கொடுக்க ஐஸ்கிரீம் என ஜாலியாக வாங்கி சாப்பிடும் குழந்தைகள் எழில் வந்ததும் ஒரே நேரத்தில் இருமி, மனோகரி ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தது தான் இதற்கு காரணம் என கோர்த்து விடுகின்றனர். இதனால் மனோகரியின் இந்த திட்டமும் தோல்வியடைகிறது.  

அடுத்ததாக செல்வி பசங்களை வெளியே கூட்டிட்டு போய் ஏதாவது வாங்கி கொடுங்க என்று சொல்ல நாளைக்கு கூட்டிட்டு போய் ஏதாச்சு வாங்கி தரேன் என்று முடிவெடுக்கிறாள். ஹாஸ்பிடலுக்கு போனேன் எழில் கனகவல்லிக்கு போன் போட்டு முக்கியமான பைல் ஒன்றை மறந்து விட்டதாகவும் அதை கொடுத்து அனுப்புமாறு சொல்ல கனகவல்லி சுடரிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறாள்.

சுடர் ஹாஸ்பிடலுக்கு வர எழில் அவளுக்கு முதலுதவி செய்து ரொமான்டிக்காக இருப்பது போலவே தோன்றுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: