Advertisment

புரோக்கராக மாறிய ஹீரோ: குழந்தைகளிடம் பல்பு வாங்கிய வில்லி; கல்யாணம் நடக்குமா?

ஜீ தமிழின் நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
NV and Nk

நெஞ்சத்தை கிள்ளாதே - நினைத்தேன் வந்தாய்

மதுவுக்காக ப்ரோக்கராக மாறிய கௌதம்.. கடைசியில் காத்திருந்த பல்பு

Advertisment

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மதுமிதாவை பார்க்க காலேஜ் கிளம்பி வந்த நிலையில் இன்று, மதுவை சந்திக்கும் கௌதம் உங்களுக்காக சில வரங்களை பார்த்திருப்பதாக சொல்லி போட்டோக்களை காட்ட மதுமிதா அதில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறாள். எனக்கு என் வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பாங்க, நீங்க பார்க்க வேண்டாம் என்று சொல்ல கௌதம் டென்ஷனாகி விடுகிறான். 

அதனை தொடர்ந்து மதுவின் அம்மா மார்க்கெட்டில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது ப்ரோக்கரை பார்க்க என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருந்தேனே என்னாச்சு என்று கேட்க, அவர் மாப்பிள்ளை வீட்டாருக்கு உங்க பொண்ணு அதே பிளாட்ல ஒரு பையனை காதலிச்ச விஷயம் தெரிந்து போச்சு என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். 

அடுத்து ஆபிஸ் வந்த கௌதம் ஒருவரிடம் உனக்கு மார்க்கெட் ஹெட்டா ஹையர் போஸ்டிங் தரேன் என்று சொல்ல அந்த நபர் ரொம்ப நன்றி சார்.. என் வுட்பியும் ரொம்ப சந்தோச பாடுவாங்க என்று சொல்ல, கௌதம் கல்யாணம் ஆகலனு தானே சொன்ன என்று கேட்க ஆமாம் கல்யாணம் ஆகல, ஆனால் என்கேஜ்மென்ட் முடிந்து விட்டது என்று சொல்கிறான். இதை கேட்டு எல்லாரும் சிரிக்கின்றனர். 

மறுபக்கம் மதுவும் அவளது அம்மாவும் வீட்டிற்கு வர அப்போ மதுவின் பழைய காதலனை பார்க்க மதுவின் அம்மா கோபப்பட்டு பேசுகிறாள். உன்னால் என் பொண்ணு வாழ்க்கையே போய்டுச்சு என்று சொல்ல அவன் நான் எதுவும் பண்ணல சாரி என்று சொல்ல மது அம்மாவை சமாதனம் செய்து அழைத்து வருகிறாள். அடுத்து கௌதம் ஆபிசில் கல்யாணம் ஆகாத பசங்க லிஸ்ட்டை எடுக்க சொல்ல சந்தோஷ் லிஸ்ட்டை கொண்டு வந்து கொடுக்கிறான். அதில் கௌதம் பெயர் மட்டுமே இருக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழில் போட்ட கண்டிஷன்.. பல்பு வாங்கிய மனோகரி 

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடருக்கு எழிலுடன் முதலிரவு ஏற்பாடுகள் நடந்திருந்தது போல கனவு கண்டு அதிர்ச்சியான நிலையில் இன்று, மனோகரி ஹாஸ்பிடலுக்கு கிளம்ப எழில் நீ ஹாஸ்பிடல் வரவேண்டாம் உனக்கும் எனக்கும் கல்யாணமாக போகுது.. நீ பசங்களோட நல்லா ஜெல்லாகணும்.. அதனால நீ வீட்ல அவங்களோட இரு என்று சொல்லிவிட்டு கிளம்ப மனோகரி கடுப்பாகிறாள். 

அதன் பிறகு செல்வி என்னமா ஹாஸ்பிடலுக்கு போகலையா என்று கேட்க எழில் சொன்ன விஷயத்தை சொல்கிறாள். உடனே செல்வி பசங்கள உங்க வழிக்கு கொண்டு வருவதெல்லாம் ரொம்ப ஈசி.. சுடர் அவங்களுக்கு பிரியாணி எல்லாம் சமைத்து கொடுத்து தான் வளைச்சு போட்டா என்று சொல்ல மனோகரி சூப்பர் ஐடியா அப்போ நானே என்னுடைய கையால பிரியாணி செஞ்சு பசங்களுக்கு பரிமாறுகிறேன் என்று முடிவு எடுக்கிறாள். 

அடுத்ததாக மனோகரி செல்வியின் உதவி கூட இல்லாமல் சிக்கன் பிரியாணி சமைக்க அந்த வழியாக வந்த சுடரை அதை டேஸ்ட் பார்க்க சொல்ல டேஸ்ட் பார்த்த சுடர் கெட்ட நாற்றம் வருவதால் சாப்பிட முடியாமல் தவிக்கிறாள். அதன் பிறகு ராமையா வந்து மாட்ட அவர் சாப்பிட முடியாமல் தெறித்து ஓடுகிறார். குழந்தைகளுக்கு பரிமாற அவர்கள் ஏதோ பேட் ஸ்மெல் வருவதாக சொல்லி சாப்பிட மறுக்க எழிலும் அந்த சாப்பாட்டை பார்த்துவிட்டு கெட்ட நாற்றம் வருவதாக சொல்ல மனோகரி பல்பு வாங்குகிறாள்.

அதன் பிறகு நான்கு பேரும் விளையாட்டு பொருள் ஒன்றை வைத்துக்கொண்டு எனக்குத்தான் வேண்டும் என்று அடர் பிடித்துக் கொண்டிருக்க அங்கு வந்த மனோகரியும் அந்த பொருளை பிடித்துக் கொண்டு விடுங்க என்று குழந்தைகளிடம் சத்தம் போட நான்கு பேரும் ஒரே நேரத்தில் விட்டதில் மனோகரி கீழே விழுகிறாள். இதைப் பார்த்து குழந்தைகள் சிரிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment