Advertisment

காணாமல் போன மோதிரம்: நிச்சயதார்த்தம் நடக்குமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Njhdm

நினைத்தேன் வந்தாய் - நெஞ்சத்தை கிள்ளாதே

பட்டு புடவையால் வந்த பஞ்சாயத்து.. கௌதமுக்கு நோ சொல்லி ஓகே சொன்ன மதுமிதா

Advertisment

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதாவின் குடும்பத்தினர் மாப்பிள்ளை வீடு பார்க்க வந்திருக்க சகுந்தலா புடவையை மதுமிதாவிடம் கொடுக்க அனைவரும் ஷாக்கான நிலையில் இன்று, ரேணுகா என்ன புடவையை மது கிட்ட கொடுக்கறீங்க? பொண்ணு அதிதி தானே என்று கேட்க, கௌதம் என் பொண்ணு வயசுல இருக்க அதிதியை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும் என்று சொல்கிறான்.

மதுமிதா இவரை எல்லாம் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? ஆரம்பத்திலேயே எனக்கு விஷயம் தெரிந்து இருந்தால் நான் இங்க வந்தே இருக்க மாட்டேன் என்று கோபப்படுகிறாள். இதனால் கௌதம் மற்றும் மதுமிதாவுக்கு வாக்குவாதம் உருவாகி வீட்டிற்கு வந்து விடுகிறாள். வீட்டிற்கு வந்த மதுவிடம் ஜீவா கௌதம் உங்களுக்கு ஏற்ற பையன் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுங்க என்று சொல்கிறான். 

மதுமிதா முடியவே முடியாது என்று ஷாக் கொடுக்கிறாள். அதே போல் மறுபக்கம் கௌதமின் மாமா கௌதமுக்கு மதுவை கல்யாணம் பண்ணி வைக்கலைனா நீ நடுத்தெருவில் தான் நிற்கணும் என்று சொல்கிறான். பிறகு சகுந்தலா கௌதமிடம் பேச அவன் முடியாது என்று மறுக்க உன் தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைச்சா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல் என்று மடக்கி சம்மதிக்க வைக்கிறாள்.  அதே போல் மறுபக்கம் அதிதி மதுவிடம் பேசி அவளையும் சம்மதிக்க வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காணாமல் போன நிச்சயதார்த்த மோதிரம்.. அஞ்சலி கொடுத்த அதிர்ச்சி 

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் போதையில் இருக்க எழில் அவளை ரூமுக்கு அழைத்து சென்று படுத்து தூங்க சொன்ன நிலையில் இன்று, சுடர் நீங்களும் இங்கேயே இருங்க என்று சொல்லி எழில் கையை பிடித்து இழுக்க அவன் தடுமாறி சுடர் மீது விழ போக இருவரும் கண்களால் பார்த்து ரொமான்ஸ் செய்கின்றனர். 

இதனை தொடர்ந்து சுடரை தூங்க வைத்து விட்டு எழில் கீழே வர நிச்சயதார்த்த ஏற்பாடுகள் பரபரவென நடக்கிறது. கனகவல்லி மோதிரம் மாற்றி கொள்வதற்காக இந்துவின் மோதிரத்தை எடுத்து வந்து வைக்கிறாள். அடுத்து நிச்சயம் செய்து கொள்ள அய்யர் மந்திரங்களை சொல்லி மோதிரம் மாற்றி கொள்ள சொல்லும் போது தட்டில் இந்துவின் மோதிரம் காணாமல் போய் இருக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

வீடு முழுக்க மோதிரத்தை தேடியும் எங்கேயும் கிடைக்காத நிலையில் அப்செட்டாகுகின்றனர். இந்த நேரத்தில் அங்கு வந்த அஞ்சலி மோதிரத்தை நான் எடுத்துட்டு போய் சுடர் கையில் போட்டு விட்டேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment