Advertisment

கிட்னி திருட முயற்சிக்கும் டாக்டர்... அம்மாவை காப்பாற்றுவாரா நாயகன்? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Sr

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

ஐஸ்வர்யாவை நடுங்க வைத்த லெட்டர், அபிராமி கிட்னிக்கு நடக்கும் டீலிங்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடியிடம் இருந்து தப்பி வந்த அபிராமி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று, கார்த்திக்கு அபிராமியை தேடி போன இடத்தில ஒரு கடிதம் கிடைக்கிறது, அதில் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையால் வாழ பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொண்டேன் என்று எழுதி இருக்க கார்த்திக் இந்த விஷயத்தை வீட்டில் சொல்கிறான்.

நம்ம வீட்டு பிரச்சனை நமக்கு மட்டும் தான் தெரியும், இந்த லெட்டரை வைத்து பார்க்கும் போது நம்ம குடும்பத்தில் இருக்க யாரோ ஒருவர் தான் அம்மாவை கடத்தி இருக்கணும் என்று சொல்ல ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் பதறுகின்றனர். கார்த்திக் நான் நீங்க தான் பண்ணீங்கனு சொல்லலையே என்று சொல்ல நீ சொல்றத பார்த்தா எங்களை சொல்ற மாதிரி தான் இருக்கு, ஆனால் இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கின்றனர்.

அடுத்து கார்த்திக் இப்போ யார் கடத்தினாங்க என்பது முக்கியம் இல்ல, அம்மாவை கண்டுபிடிக்கணும் அது தான் முக்கியம் என்று சொல்கிறான். மறுபக்கம் அபிராமி ஹாஸ்பிடலில் இருக்க டாக்டர் இவங்க சொந்தகாரங்க யாராவது வந்தார்களா என்று கேட்க யாரும் வரவில்லை என்று சொல்கின்றனர். இதனையடுத்து டாக்டர் யாரோ ஒருவருக்கு போன் போட்டு கிட்னி கேட்டு இருந்தீங்களே. இப்போ இருக்கு 20 லட்சம் ருபாய் செலவாகும் என்று டீல் பேச அவர்களும் சம்மதம் சொல்கின்றனர். 

உடனே டாக்டர் ஒருவர் அபிராமிக்கு ஆபரேஷன் செய்து கிட்னியை எடுக்க வருகிறார். ரவுடிகள் ஒரு பக்கம், கார்த்திக் ஒரு பக்கம் என்று அபிராமியை தேடி கொண்டிருக்கும் நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

ஷாக்கான சௌந்தரபாண்டி.. சண்முகத்தை நெளிய வைத்த பரணி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மாவை ஊரை விட்டு துரத்தி விட்ட நிலையில் இன்று, பாக்கியமும் இசக்கியும் வீட்டிற்குள் நுழைய சௌந்தரபாண்டி நின்று கொண்டிருப்பதை பார்த்து ஷாக்காகின்றனர். மாட்டிகிட்டோம் என்று எதிர்பார்க்க தூக்கத்தில் நடக்கும் வியாதி காரணமாக இவர் அவர்களை கவனிக்காமல் நடந்து செல்கிறார்.

அடுத்ததாக மறுநாள் காலையில் பரணி கோலம் போட்டு கொண்டிருக்க வெளியே வரும் சண்முகம் கோலத்தை பார்த்து என்ன வழக்கமாக நம்பர் போட்டுட்டு இருப்ப இன்னைக்கும் காணோம் ன்று கேட்கிறான். பரணி அதுக்கு பதிலாக தான் ஒன்னு எழுதி இருக்கேன் அதை பாரு என்று சொல்கிறாள்.

இங்கிலிஷில் எழுதி இருக்க அதை பார்த்த சண்முகம் என்னனு படிக்க தெரியல என்று சொன்னதும் பரணி ஐ லவ் யூ என்று எழுதி இருப்பதாக சொல்ல சண்முகம் சின்ன பிள்ளைங்க இருக்க வீட்டில என்ன இதெல்லாம் என்று பரணியை திட்டுகிறான், சத்தம் கேட்டு தங்கைகள் எழுந்து வெளியே வர சண்முகம் கோலத்தை மறைத்து நிற்க தங்கைகள் சந்தேகப்பட்டு கோலத்தை பார்த்து விடுகின்றனர்.

ஐ லவ் யூ-னு தானே எழுதி இருக்காங்க, இதுல என்ன தப்பு இருக்கு? அது ஒன்னும் கெட்ட வார்த்தை இல்லை என்று சொல்லி சண்முகத்தை கூல் செய்கின்றனர். இங்கே சௌந்தரபாண்டி எழுந்து பார்க்க பாண்டியம்மாள் இல்லாததால் அவரை தேடுகிறார். அவருக்கு வந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆகிறார். அப்படியே மறுபக்கம் உடன்குடி ஓடி வந்து சண்முகத்திடம் அந்த மீனாட்சி குடும்பம் இங்க தான் லாட்ஜில் தங்கி இருக்காங்க என்ற விஷயத்தை சொல்கிறாள்.

சண்முகம் அவர்களை பார்க்க கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

அம்மாவாக மாறிய அஞ்சலி.. கண்ணீர் விட்டு கதறும் சுடர்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் வேலு சுடருக்கு போன் போட்டு மிரட்டிய நிலையில் இன்று, வேலு சுடரிடம் நீ அந்த டாக்டர் வீட்டில் இருப்பதால் உன்னை விட்டுடுவேன்னு நினைச்சியா? இந்த ஊரை விட்டு போகும் போது உன் கழுத்தில தாலியை கட்டி என் பொண்டாட்டியா தான் டி கூட்டிட்டு போவேன் என்று சொல்கிறான்.

இதனையடுத்து போனை வைத்ததும் சுடர் வேலுவுக்கு பயந்து அழுது துடிக்கிறாள், வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறாள். இதனால் அவள் ரூமுக்குள்ளவே அடைந்து கிடக்கிறாள். மறுபக்கம் மனோகரி சிசிடிவி காட்சிகளை வைத்து சுடரை துரத்திய வேலுவுடன் இருந்த போலீசிடம் பேசி பிரச்னையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய போலீஸ்காரர் வெளியூர் சென்றிருப்பதால் அது முடியாமல் போகிறது.

இங்கே சுடர் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கவோ, பாடம் சொல்லி கொடுக்க, ஸ்கூல் கூட்டி செல்ல என எதுக்குமே வெளியே வராமல் இருக்க அஞ்சலி சுடரை மிஸ் பண்ணுகிறாள். ராமையா சுடருக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறார். ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்த அஞ்சலி சாப்பாட்டை எடுத்து கொண்டு ரூமுக்கு வருகிறாள், சாப்பிட்டாயா என்று கேட்க சுடர் இல்லை என்று சொல்ல அஞ்சலி சாப்பிட்டா தானே மாத்திரை போட முடியும், மாத்திரை போட்டா தானே உடம்பு சரியாகும் என்று சொல்லி ஆ காட்டு என்று சாப்பாட்டை ஊட்டி விடுகிறாள்.

அஞ்சலியின் பாசத்தை பார்த்து சுடர் அவளை கட்டி பிடித்து கண் கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment