Advertisment

தங்கை பேச்சால் அண்ணன் ஹேப்பி... அம்மாவை காப்பாற்றுவாரா மகன்? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் , கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Anna NV KD

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

ஐஸ்வர்யாவுக்கு ஏறும் பிபி.‌. அபிராமியை கொல்ல துணிந்த ரவுடி, கார்த்திக் செய்ய போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் அபிராமியை கடத்த பிளான் போட கார்த்திக்கும் அபிராமி இருக்கும் இடம் தெரிய வந்த நிலையில் இன்று, கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர ரவுடிகள் அபிராமி கடத்திக்கொண்டு ஆம்புலன்ஸ் கிளம்பிச் செல்ல கார்த்திக் அதை கண்டுபிடித்து ஆம்புலன்சை பின் தொடர்ந்து செல்கிறான். வேக வேகமாக வரும் கார்த்திக் போலீஸ்க்கு போன் போட்டு தகவல் கொடுக்கிறான்.

இதனைத் தொடர்ந்து ரவுடிகள் ஒரு தோப்புக்குள் காரை விடுகின்றனர். மேலும் கேட் அருகே இருக்கும் வாட்ச்மேனிடம் யார் வந்து கதவை திறக்க சொன்னாலும் திறக்க கூடாது உள்ள விடக்கூடாது என கண்டிஷன் போட்டு உள்ளே செல்கின்றனர். ரவுடிகளின் காரை மிஸ் பண்ண கார்த்திக் எங்க போனாங்க என்று தெரியாமல் குழம்பி இங்கும் அங்குமாக அலைந்து தேடுகிறான். ஒரு கட்டத்தில் இந்த தோப்பை பார்த்ததும் சந்தேகம் வந்து கதவை திறக்க சொல்ல வாட்ச்மேன் கதவை திறக்க முடியாது யாரும் உள்ள போகக்கூடாது என சொல்கிறார்.

உடனே கார்த்திக் அவரிடம் சண்டை போட்டு காரை உள்ளே எடுத்துச் செல்ல ரவுடிகள் கார்த்தியை சுற்றிவழிக்க அபிராமி இருக்கும் இடம் இதுதான் என்பதை உறுதி செய்து கொள்கிறான். ரவுடிகளிடம் கார்த்திக் சண்டையிடுகிறான். மறுபுறம் அபிராமியை ஆம்புலன்ஸில் தூக்கி வந்த மணி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு அபிராமியை தூக்கிட்டு வந்துட்டோம். ஆனால் கார்த்திக்கும் எங்கள பார்த்து பின் தொடர்ந்து வருகிறான் எப்ப வேணாலும் இங்க வரலாம் என்று சொல்கிறான்.

இதை கேட்ட ஐஸ்வர்யா ஒன்னு பண்ணுங்க, அபிராமியை அங்கேயே விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆகிட்டுங்க கார்த்திக் கிட்ட மாட்டினா அவ்வளவுதான் என்று சொல்கிறாள். ஆனால் மணி அபிராமி என் முகத்தைப் பார்த்து இருக்காங்க, இப்படியே விட்டா அவங்க என்ன நிச்சயம் அடையாளம் காட்டிடுவாங்க அப்படி நான் மாட்டிக்கிட்டா நீங்களும் மாட்டிக்குவீங்க அதனால அவங்கள கொன்னுடுறேன் என்று சொல்ல ஐஸ்வர்யா வேண்டாம் பெரிய பிரச்சனை ஆயிடும் என்று சொல்கிறாள்.

ஆனால் ஐஸ்வர்யாவின் பேச்சை கேட்காத மணி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் ஒரு பிரச்சனையும் வராது என்று சொல்லி போனை வைக்க ஐஸ்வர்யாவுக்கு பிபி ஏறுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

மீனாட்சியை தேடி வந்த கனி.. பதறிய குடும்பம், சொந்தரபாண்டி சதிக்கு புல் ஸ்டாப்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி பாடிய பாடலை கனியும் பாட சண்முகம் கலங்கிய நிலையில் இன்று, பரணி சண்முகத்தை கிளினிக்கிற்கு அழைத்து சென்று கனிக்கு நீ தான் எல்லாம், அவ உன்னை விட்டு போக மாட்டாள் என்று அவனை கூல் செய்கிறாள். மறுபக்கம் கனி தனியாக எங்கோ நடந்து செல்ல வெட்டுக்கிளி இதை பார்த்து விடுகிறான்.

வீட்டில் கனியை காணவில்லை என்று எல்லாரும் பதறி சண்முகத்துக்கு சொல்ல அந்த மீனாட்சி குடும்பம் தான் கடத்தி இருக்கும் என நினைத்து கொண்டு கோபமாக அங்கு கிளம்பி செல்கிறான், அங்கே மீனாட்சி சௌந்தரபாண்டி ஆகியோர் பேசி கொண்டிருக்கும் போது கனி வருவதை பார்த்து மீனாட்சி சந்தோசப்பட சௌந்தரபாண்டி ஒளிந்து கொள்கிறார்.

சண்முகம் பரணி இங்கு வர கனியை பார்த்ததும் அப்படியே நின்று விட மீனாட்சி என் பொண்ணு என் கிட்ட வந்துட்டா என்று சந்தோஷத்தில் நான் உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா என்று பேசி கனியை கட்டி பிடிக்க போக கனி கையை தட்டி விட்டு அதிர்ச்சி கொடுக்கிறாள். பெத்து போட்டுட்டு போயிட்டீங்க என்னை இவ்வளவு நாளா என் அண்ணன் தான் பாத்துக்கிச்சு. அது எனக்கு அண்ணா இல்ல அம்மா என்று பேசுகிறாள்.

என்ன அண்ணனை விட்டு நான் வர மாட்டேன். வலுக்கட்டாயமா பிரித்து கூட்டிட்டு போனா தற்கொலை பணிக்குவேன் என்று கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு மீனாட்சியை மிரட்டி விட்டு கிளம்பி செல்கிறாள். கனி சண்முகத்தையும் பரணியையும் பார்க்காமல் சென்று விட கனி பேசியதை நினைத்து சண்முகம் சந்தோசப்பட பரணி இது தான் கனி, அவ உன்னை விட்டு போக மாட்டா என்று சொல்கிறாள் பரணி.

மேலும் மீனாட்சியிடம் சென்று அவ பேசினதை கேட்டீங்களா, இப்படியே கிளம்பி போய்டுங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

சுடரிடம் அஞ்சலி வாங்கிய சத்தியம்.. எழில் வீட்டை தேடி வந்த போலீஸ்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அஞ்சலி சுடருக்கு சாப்பாடு ஊட்டி விட்ட நிலையில் இன்று, சுடர் எழிலிடம் தன்னை பற்றிய உண்மைகளை சொல்ல முடிவெடுத்து ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறாள், இந்நிலையில் டூப்ளிகேட் சர்டிபிகேட் கொடுத்து ஹாஸ்பிடலில் வேலை பார்த்த ஒருவன் சிக்கி கொள்ள எழில் அவனிடம் கோபப்பட்டு பேச இதை பார்த்து சுடர் ஷாக்காகிறாள். இதனால் உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.

இங்கே வீட்டில் குழந்தைகள் எல்லாருக்கும் செல்வி பால் கொண்டு வந்து கொடுக்க அஞ்சலி சுடர் எங்கே? அவங்க தான் பால் கொண்டு வருவாங்க என்று கேட்க அபி இந்த வீட்டில் செல்வி, சுடர் எல்லாரும் ஒன்னு தான். வேற இடத்துல வேலை கிடைச்சாலும் போய்டுவாங்க, கல்யாணம் ஆனாலும் போய்டுவாங்க என்று சொல்கிறாள். இதனால் சுடர் ரூமுக்கு வந்து அஞ்சலி வருத்தத்தோடு காத்திருக்க வீட்டுக்கு வந்த சுடர் அஞ்சலியிடம் உனக்கு என்னாச்சு என்று கேட்கிறாள்.

உனக்கு வேற வேலை கிடைச்சலோ, கல்யாணம் ஆனாலோ எங்களை விட்டுட்டு போய்டுவியா என்று கேட்க சுடர் இல்ல போக மாட்டேன் என்று சொல்கிறாள், அஞ்சலி சத்தியம் பண்ணி சொல்லு என்று சத்தியம் வாங்குகிறாள். கொஞ்ச நேரம் கழித்து பாஸ்போர்ட் ஏஜென்ட் ஆபிசில் இருந்து போன் பண்ணி போலீஸ் வெரிஃபிகேஷன் வருவாங்க, அது முடிந்ததும் பாஸ்போர்ட் கிடைத்து விடும் என்று சொல்ல சுடர் சந்தோசப்படுகிறாள்.

உடனே அஞ்சலிக்கு செய்த சத்தியம் நினைவுக்கு வர சோகமாகிறாள். மறுநாள் எழில் வீட்டிற்கு போலீஸ் வர சுடர் அவர்களை பார்த்து நடுங்க போலீஸ் உன் பேர் என்ன என்று கேட்க என்ன சொல்வது என்று யோசிக்கும் போது எழில் அங்கு வந்து உள்ள வாங்க என்று அழைத்து செல்கிறான். போலீசை அழைத்து சென்று தனது மனைவி கொலை கேஸ் பற்றி பேசுகிறான். தாலி தான் இன்னும் கிடைக்கல, அந்த தாலி யார் கிட்ட இருக்குனு கண்டு பிடிச்சா எல்லா உண்மையும் தெரிந்து விடும் என்று எழில் சொல்கிறான்.

மனோகரி சுடர் போலீசை பார்த்து பயப்படுவதை பார்த்து விட இவ கிட்ட ஏதோ விஷயம் இருக்கு அதை கண்டு பிடிக்கணும் என முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment